பெருமை சேர்க்கிறார், சிற்பி. ராசன்
2008 ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த 10 மனிதர்களில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் சிற்பி. இராசன் அவர்களை 'ஆனந்தவிகடன்' குழு தேர்வு செய்துள்ளது. கழகத்துக்கு பெருமை சேர்க்கும் சமூகப் புரட்சியை - அமைதியாக செய்து முடித்துள்ள தோழர் சிற்பி. இராசன் பற்றி 'ஆனந்த விகடன்' வெளியிட்ட செய்தியை பூரிப்புடன் வெளியிடுகிறோம்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, சாமிகளையே செதுக்கிச் செய்யும் சிற்பிகளை உருவாக்கியவர் ராஜன். இவரும் சிஷ்யர்களும் செய்து அனுப்பிய சிலைகள் இன்று உலகம் எங்கும் பல கோயில்களில் அருள்பாலிக்கின்றன. இதுதான் மௌனப் புரட்சி. பெரியாரின் கருத்துக்களைப் படித்து வெடித்த வயதில், தாகமும் கோபமுமாகச் சிற்பக் கலை பயின்றார். உலகம் அறிந்த சிற்பியாக உருவான பிறகு எடுத்தார் அடுத்த ஆயுதத்தை. 'கோயில் பிரவேசம், கர்ப்பக்கிரகத் தரிசனம் எல்லாம் இன்னும் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கைகள் செய்யும் சிலைகளே கோயிலுக்குப் போக வேண்டும்' என முடிவெடுத்தார். சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் ஆர்வம் உள்ள தலித் இளைஞர்களுக்குத் தங்க இடம், பயிற்சிகள் அத்தனையும் இலவசமாகத் தந்து, ராஜன் நடத்துகிற சிற்ப மையம், புரட்சியின் இன்னொரு களம். தனது உளியால் சமூகத்தைச் செதுக்கி வரும் ராஜன், கலைப் போராளி!
- நன்றி 'ஆனந்த விகடன்' 31.12.08
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|