கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் பிணையில் விடுதலை
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் 31 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு உயர்நீதிமன்றம் 19.1.2009 அன்று பிணை வழங்கி உத்தரவிட்டது. பிணை மனுவை கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர் தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது ஒரு குற்றமல்ல என்று வழக்கறிஞர் துரைசாமி வாதிட்டார்.
உயர்நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் அவர்கள் முன் மனு விசாரணைக்கு வந்தது. ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த பிணைத் தொகையும், அதே தொகைக்கு இரு நபர் பிணை உறுதியும் வழங்கி, பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறை அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|