இனி எவரும் வெளியிடலாம்
காந்தி நூல்களின் பதிப்புரிமை முடிவுக்கு வந்தது
காந்தியின் கடிதங்கள், நூல்கள், கட்டுரைகளை வெளியிடும் உரிமை 'நவஜீவன் டிரஸ்ட்' என்ற அறக் கட்டளையிடம் தான் இதுவரை இருந்து வந்தது. 1919 ஆம் ஆண்டிலிருந்து இந்த அறக்கட்டளைதான் இதற்கான உரிமையை தன்னிடம் வைத்திருந்தது.
இதற்கான பதிப்புரிமையை சட்டப்பூர்வமாக, இந்நிறுவனம் தன்னிடம் வைத்திருந்தது. காந்தியின் நூல்களை வெளியிட விரும்பிய நிறுவனங்கள் - இந்த அறக் கட்டளையிடம் அனுமதி பெற்று, நூல்களை வெளியிட்டு, அதற்கான 'ராயல்டி'யை இந்நிறுனத்துக்கு வழங்கி வந்தன. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் 22வது பிரிவின்படி, காந்தி புத்தகங்கள் மீதான உரிமை மீண்டும் இந்த அறக்கட்டளைக்கே தொடர்ந்து கிடைத்தது.
கடந்த ஜனவரி 2009 முதல் தேதியோடு பதிப்புரிமை பெற்று 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பதிப்பாளர்கள் இறந்து 60 ஆண்டுகளாகி விட்டால் பதிப்புரிமை தானாகவே சட்டப்படி முடிவுக்கு வந்துவிடும் என்பதால் கடந்த ஜனவரி முதல் 'நவஜீவன் டிரஸ்ட்' பதிப்புரிமையை இழந்துவிட்டது. இனி, இந்நிறுவனத்தின் அனுமதியின்றியே காந்தி நூல்களை எவரும் வெளியிடலாம். டிரஸ்ட் நிர்வாகிகள் இது பற்றிக் கூறுகையில், "காந்தி நூல்களை இனி யார் வேண்டுமானாலும் வெளியிடலாம்; நாங்களும் மலிவு விலையில் வெளியிட்டு பரப்புவோம்" என்று கூறியுள்ளனர். காந்தி நூல்கள் பரவ வேண்டும் என் பதில் கவலையுள்ள இந்த அறக் கட்டளை நிர்வாகிகளைப் பாராட்டலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|