சமரசத்துக்கு எல்லையே இல்லையா?
திராவிடர் இயக்கத்தையும், தி.மு.க.வையும், தொடர்ந்து கொச்சைப்படுத்தி எதிர்ப்பு இயக்கமே நடத்தி வரும் ஏடு 'தினமலர்'! இதன் நிறுவனர் கோபால்ஜி என்ற பார்ப்பனர், விசுவ இந்து பரிஷத்தின் தென் மண்டல பொறுப்பாளர். பெரியாரை, 'ஈ.வெ.ரா.' என்றும், அண்ணாவை 'அண்ணாத்துரை' என்றும் தான் இப்போதும் இந்த ஏடு எழுதும். பார்ப்பன சங்கத்தின் சங்கராச்சாரியின் ஊதுகுழலான இந்த ஏட்டை 'முரசொலி' எத்தனையோ முறை 'பூணூல் மலர்', 'தினமலம்' என்றெல்லாம் எழுதியிருக்கிறது. தோழர் சின்னக்குத்தூசி எத்தனையோ காட்டமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அந்த ஏட்டின் நிறுவனருக்கு அஞ்சல்தலை வெளியிடும் விழாவில் முதல்வர் கலைஞர் பங்கேற்று, அவரை பெரியாரோடு ஒப்பிட்டுப் பேசும் நிலைக்குப் போனது மிக மோசமான இனத் துரோகமேயாகும். எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொண்டு வரும் கலைஞர், அண்மையிலே செய்த மிக மோசமான சமரசமாக இதைக் கூறலாம். கலைஞரை தமிழினத்தின் மூத்த தலைவராகக் கருதும் அனைவரையும், கலைஞரின் அண்மைக்கால நடவடிக்கைகள் கடுமையாக காயத்தை ஏற்படுத்தி வருகின்றன. கலைஞர் தனது அடையாளத்தை இழந்து கொண்டே வருகிறார் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|