வீரச் சாவடைந்த ரவிச்சந்திரனுக்கு கழகம் இறுதி வணக்கம்
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசின் துரோகத்தை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர் ரவிச்சந்திரன் சீர்காழியில் பிப்.7 அன்று தீக்குளித்து வீரச் சாவடைந்தார். அவரது இறுதி ஊர்வல நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பிப்.5 ஆம் தேதி சீர்காழியில் விடுதலை இராசேந்திரன், கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆற்றிய உரையை ரவிச்சந்திரன் கேட்டார். அந்த உரையைக் கேட்டு இல்லம் சென்ற ரவிச்சந்திரன் அது பற்றியே பேசிக் கொண்டிருந்தார் என்றும், அடுத்த நாள் இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்றும் ரவிச்சந்திரன் தாயார் குறிப்பிட்டார். சென்னையில் 7 ஆம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய கருப்புக் கொடிக் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. தனது உரையிலும் மறைந்த<ரவிச்சந்திரன் தாயார் கூறியதை சுட்டிக் காட்டினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|