அர்ஜுன் சிங்
தாய்லாந்து நாட்டின் இளவரசி புத்தமதத்தைச் சார்ந்தவர். ஆனாலும் பார்ப்பனியத்தில் நம்பிக்கையுள்ளவர். தாய்லாந்தில் உலக சமஸ்கிருத மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு, அதற்கு இந்தியாவின் உதவியை அவர் கேட்டுள்ளார். இது போன்ற நடவடிக்கைகளுக்கு தமது மதச்சார்பற்ற அரசு உதவத் தயாராக இல்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்! பாராட்ட வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
மோடி
இந்துத்துவ வெறியரான குஜராத் முதல்வர் மோடி - காதல் திருமணம் செய்து கொள்வோர், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற ‘மத-சாதி’ வெறி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். காதல் திருமணங்கள் நடப்பதைத் தடை செய்வதே மோடியின் நோக்கம்! காதல் என்று வந்து விட்டால், மதம், சாதிகள் உடைபடுகிறதே என்ற பதைப்பே இதற்குக் காரணம்!
கண்டிக்க வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
சோதிடன்
தான் பெற்ற 7 மாத கைக் குழந்தையை ஒவ்வொரு நாளும் சித்திரவதை செய்து, கடைசியாக கட்டிலில் குழந்தையை ஓங்கி அடித்து சாகடித்துள்ளான் ஒரு தகப்பன். கடந்த வாரம் கோவையில் நடந்த இந்தக் கொடூரமான சம்பவத்துக்குக் காரணம் சோதிட நம்பிக்கை. இந்தக் குழந்தையால் தனக்கு ஆபத்து என்று சோதி டன் கூறியதை நம்பியதால் நிகழ்ந்த கொடூரம் இது! அந்தக் குழந்தை உயிரோடு இருந்திருந்தால்கூட, இவனுக்கு ஒன்றும் நிகழ்ந்திருக்காது. குழந்தையைக் கொலை செய்து இப்போது கொலைக் குற்றத்துக்கு உள்ளாகிவிட்டான். இப்படி எல்லாம் பல சம்பவங்கள் நடந்தும்கூட பத்திரிகைகள் சமூகப் பொறுப்பே இல்லாமல் ‘ராசி பலன்’ வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதிடர் தொழிலும் தங்கு தடையின்றி நடந்து கொண்டே இருக்கிறது. தடை செய்ய வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
இம்ப்ரூவ்மெண்ட்
தமிழ்நாடு அரசு ‘இம்ப்ரூவ்மெண்ட்’ தேர்வு முறையை ரத்து செய்தாலும் - உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு ரத்து செய்யப்படக்கூடாது என்று கூறிவிட்டது. மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் இவ்வாண்டு இப்படி ‘இம்ப்ரூவ்மென்ட்’ தேர்வு எழுதிய 714 பேர் இடம் பிடித்து விட்டார்கள். சேர்க்கப்படும் மொத்த மாணவர்களில் இது 50 சதவீதத்துக்கும் அதிகம். தடுக்கப்பட வேண்டும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
உச்சநீதிமன்றம்
இரவு 10 மணியிலிருந்து விடியற் காலை 6 மணி வரை ஒலி பெருக்கிகள் அலறக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மார்கழி பஜனை பாடல்களும் - அய்யப்பன் சீசன் இரைச்சல்களும், தீபாவளி பட்டாசு வெடிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது. அமுல்படுத்தப்பட வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|