மனப்பறவை
புதிய மாதவி
நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது
ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்புப் பிடிகளுக்கு
நடுவில்
கதவுகள் திறக்க
காத்திருக்கிறது
போதும் போதும்
பறந்தது போதுமென்று
தடவிக் கொடுக்கிறது
காற்று.
சிறைகளை உடைத்து
வெளியில் வந்துவிடு
இரவோடு இரவாக
அழைக்கிறது
நிலவு.
ஆகாயமே சிறையாகிப் போனதால்
சிறகுகளை எரித்த
நெருப்பின் வெளிச்சத்தில்
கூண்டுக்குள் இடம்தேடும்
மனப்பறவை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|