Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2007
வருங்காலம் நமதே!
ஏவியன்

உடலோடு உயிர் உள்ளமட்டும் - துன்பம்
உதைக்கின்ற பந்தாக உருண்டோடும் வாழ்க்கை
கடலோர மணல்வீடு கண்ணே - வரும்
காற்றுக்கும் புயலுக்கும் தாங்காது கண்ணே!

அலைபாயும் பெருவெள்ளம்மீது - காலம்
அநியாயமாய்க் கட்டி கைவிட்ட தோணி
துடுப்பில்லை துணையில்லை கண்ணே - எந்த
தூரத்தில் மூழ்குமோ தெரியாது கண்ணே!

அரும்பாகிக் காயாகி விட்டாய் - இனி
அடுத்தென்றிருப்பதோர் கனிக்காலம் தானே?
கனிக்கும் ஓர் கணக்குண்டு கண்ணே - அந்தக்
காலத்தின் அளவிற்குள் அழிவுண்டு கண்ணே!

இராக்காலம் விதை வைத்த மண்ணில் - ஒரு
ஈரைந்து மாதத்தில் இலைவிட்ட காளான்
இறவாத வாழ்வல்ல கண்ணே - இதில்
இழுத்தாலும் பறித்தாலும் தேறாது கண்ணே!

ஊரென்றும் நாடென்றும் பேசி - நியாய
உணர்வுக்கு ஆள்சேர்த்துப் படைகூட்டிப் பார்த்து
போராடிச் சாகாமல் போனால் - இந்தப்
புலராத வாழ்விலோர் பொருளில்லை கண்ணே!

அடிவானம் வெளுக்காத பூமி - நீ
ஆள் என்று நடமாடும் உன் சொந்த நாடு
இருள்மூடி வழிகின்ற வானில் - ஒரு
இரவேனும் நிலவொன்றை வரச்சொல்லு கண்ணே!

உழைத்தாலும் பிழைப்பில்லை கண்ணே - இங்கு
உயிருக்கு உயிர் என்ற மதிப்பில்லை கண்ணே!
ஊரோடு நீ சேர்ந்து போனால் - இந்த
உடையாத கொடுமைக்கோர் விடிவேது கண்ணே!

நாள் போகப்போக ஓர் நாளில் - உன்
நடைபோடும் கால் ரெண்டும் கிடைசாயும் கண்ணே!
நலிவுற்றுப் போகின்ற மூச்சு - அதை
நாடென்ற மண்ணுக்கு உரமாக்கு கண்ணே!

பசி என்னும் சமுதாய கீதம் - ஒரு
பகவானின் விதியென்னும் அறியாமை வாதம்
உடையட்டும் நடைபோடு கண்ணே - உன்
ஊர் கொண்ட ராஜாங்கம் உனதாக்கு கண்ணே!

சுமைதாங்கி இல்லாத ஊரில் - நீ
சுமக்கின்ற கல்லாக ஊர் பேச வாழு!
இமை மூடிச் சாதற்கு முன்னால் - கூட
இருக்கின்ற மக்கட்கோர் எதிர்காலம் காட்டு!

கூழ்பொங்கிக் கிடக்கின்ற பானை - கோழி
கூவாத நேரத்தே குடல் வாட்டும் ஏழ்மை
குறிப்பாகக் கவனம் வை கண்ணே - இந்தக்
கொடுமைக்கோர் இடம் பார்த்து குழிவெட்டு கண்ணே!

நாதங்கள் மீளாத வீணை - ஒரு
நன்னாங்கு இசைபோடும் அடங்காத பாடல்
காலத்தில் பூக்காத சோலை - உழைத்த
கையிக்குச் சுகம் சேர்த்துத் தாராத தேசம்

சுமையென்று ஆகுமே கண்ணே - அந்தச்
சுடுகின்ற நினைப்பொன்று இதயத்தில் வந்தால்
நெருப்பென்று ஆகுமே கண்ணே - அதில்
நெடுங்கால வறுமைக்குத் தீ மூட்டிக் காட்டு!

வாய்பேசி அறியாத ஏழை - தன்
வயிற்றுக்கும் வாழ்வுக்கும் காலங்கள் தோறும்
வழிகண்டு தேறாதபோது - அவன்
வாழ்கின்ற வாழ்விலோர் அழகேது கண்ணே?

புதுவெள்ளப் புறப்பாடு போலே - ஒரு
புதுக்கொள்கை தோளேந்திப் போராடு கண்ணே!
வாழ்வின்றிப் போனோரின் முன்னால் - நாளை
வருங்காலம் நமதென்று தெம்பூட்டு கண்ணே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP