Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
மற்றுமொரு கடல்
செல்வகுமாரி

அவளுக்குள் ஒரு கடல்
அலையடித்துக் கொண்டிருந்தது
பெரும்பசியுடன்.

சோராது தூங்கும் இரவைத்
தட்டி எழுப்பினாள்

தூக்கத்தில் விடுபடாத
கணவனையும் எழுப்பினாள்

அடுக்களை அருகில் இருந்த
கஞ்சிப் பானையில் மீந்த
பழைய சோற்றுடன் வெங்காயம் இட்டு
ஒரு கையில் பரியுடனும்
மறு கையில் கஞ்சிக்கலயத்தோடும்
கடலை வரவழைத்தாள்

மண்மீது மோகித்திருந்தன
கட்டுமரங்கள் யாவும்
தன்கணவனோடு கைசேர்த்து
எதிரும் அலைகளுக்கு எதிராகச்
செலுத்தினாள் கட்டுமரத்தை

இருள் பிரியாது
தூக்கம் கலையாது
தாவு தாங்கிச் செல்லும்
கணவனைக் கணநேரம் பார்த்தாள்

நாளை விடியுமா
நாளும் பசிதீருமா எனக்
கேள்விகளைச் சுமந்து
தாகத்தோடு வீடு திரும்பினாள்.

பொழுது விடிந்தது
கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்
எனச் செய்தித்தாள் சொல்லியபோதும்

தென்புலக் கடல் நோக்கி
அவளுடனே காத்திருக்கும்
வெறும் கூடையும்
தாளாப் பசியும்
தீரா நம்பிக்கையும்...

மற்றுமொரு கடலாக...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com