Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruMedicalHead
கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...

Eye 1. கண்தானம் செய்வதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆண், பெண், சிறியவர், பெரியவர் என வயது வரம்பின்றி யாரும் மரணத்துக்குப் பின் கண்தானம் செய்யலாம்.

2. கண் புரை அறுவை சிகிச்சை செய்தவராக இருந்தாலும் கண் தானம் செய்யலாம்.

3. கண்ணாடி அணிந்திருப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம். ஆனால் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் பி ஆகிய நோயால் இறந்தவர்களின் கண்களைப் பயன்படுத்த முடியாது.

4. இறந்தவுடன் 6 முதல் 8 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்தால்தான் அடுத்தவர்க்குப் பொருத்த முடியும்.

5. கண்தானம் செய்ய பதிவு செய்தவர் இறந்தால், அவரது உடலுக்கு மேலே மின்விசிறி இயங்கிக் கொண்டிருக்குமேயானால், அதை நிறுத்தி விடுங்கள்.

6. இறந்தவரின் கண்கள் மீது நீரில் நனைக்கப்பட்ட பஞ்சை வைக்க வேண்டும்.

7. கண்களை எடுப்பதால் இறந்தவரின் முகம் விகாரமாகி விடும் என்பது அறியாமையே.

8. கண்தானம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே கண் வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.


Unable to connect to database! Please try again later.