Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruMedicalGeneral
பொது

கைகளைக் கழுவுவோம் வாங்க!

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவமனைகளில் ஏற்படும் சுகாதரக் குறைவுகளால், பல லட்சம் நோயாளிகள் நோய்க் தொற்றுக்கு உள்ளாகி நோய்ச்சிக்கல் அதிகமாகி விடுகிறது என்கிறார் டாக்டர் பெனெட்டலா அலெகிரான்சி, உலக சுகாதார நிறுவன கன்சல்டன்ட். பண்பாட்டுத் தடைகளும், மதங்கள் விதிக்கும் தடைகளும், ஆல்கஹாலைப் பயன்படுத்துவதைத் தடுப்பதால், ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது. இதனால், உலகில் 25 சதவிகிதத்திற்கும் குறைவான டாக்டர்களே, ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதித்தும் கைகளை கிருமி நாசினிகள் கொண்டு கழுவுகின்றனர் என்கிறார், ஏதென்சில் உள்ள அட்டிகோன் பல்கலைக் கழக கெலன் கியமரல்லு.

அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகளில் நோய்த்தொற்றுக்களுக்கு ஆளாகி 90 ஆயிரம் பேர் உயிரை இழக்கிறார்கள். தவிர மேலும் 20 லட்சம் பேர் நோய்த்தொற்றுகளால் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியா தான் மெதிசில்லின் என்ற ஆன்டி பயாட்டிக்கையும் எதிர்த்து நின்று, அசுத்தமான கைகளிலிருந்து நோய்களைப் பரப்பக் காரணமாக அமைகின்றது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாக்டீரியா உலகம் முழுவதும் பரவி வந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பின்னணியில், உலக சுகாதர நிறுவனம் உலகளாவிய இயக்கம் ஒன்றைத் தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் டாக்டர்கள் நோயாளிகளைப் பரிசோதித்த பின்பு கைகளைக் கிருமி நாசினிகள் கொண்டு கழுவ வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. தவிர, மலம் கழித்த பின் கை கால்களைக் கழுவும் ஒவ்வொரு வேளையிலும் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். ஒவ்வொரு வேளையும் சாப்பிடப் போகும் முன்பும் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.