Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
மார்ச் - ஏப்ரல் 2009
திருமா தேர்ந்தெடுத்த திண்டாட்டப் பாதை
கணியன்

தொல். திருமாவின் முன்னுள்ள பாதைகள் இரண்டு. ஒன்று புரட்சிகர போராட்ட அரசியல். மற்றொன்று பிழைப்புவாத தன்னல அரசியல். இதில் திருமா புரட்சிகர போராட்ட அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்த்தேச உரிமைகள் காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்நூலில் கோரியிருந் தோம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என அவர் ஏற்கெனவே இருந்த நிலைக்கும் மிகவும் பின்னடைவான பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் பலரையும் வேதனைக்குள்ளாக்கி யிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு சக்திகள் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்கிற தமிழக மக்களின் விருப்பத்தை ஓரளவேனும் ஈடேற்றும் வகையில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” தோற்றுவிக்கப்பட அவ்வியக்கம் பற்றிய மதிப் பீடுகள் பலவாக இருந்தாலும், இந்த ஈழ ஆதரவுக் கூட்டணியே தேர்தல் கூட்டணியாகவும் பரிணமிக்க வேண்டும். தேர்தல் சாகசங்களுக்குப் பலியாகி இந்தக் கூட்டணி பிளவுபட்டுப் போய் விடக் கூடாது என்று தமிழக மக்கள் விரும்பினார்கள். இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தமிழக மக்களின் எண்ணம் ஈடேறவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அப்பால் ஈழ ஆதரவு சக்திகள் மூன்றாவது அணியாகத் திரள வாய்ப்பற்ற சூழல் ஈழ ஆதரவு அணியிலிருந்த பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க. ஆகிய மூன்று கட்சிகளும் அ.தி.மு.க. அணியில் இடம் பெற்றன. சரி, இதே வழியில் வி.சி.க.வும் இந்தப் பக்கம் வந்து விட்டால் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி தி.மு.க. காங்கிரஸ் துரோகக் கூட்டணியை வீழ்த்தி அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கலாம் என்று பார்த்தால் வி.சி.க. அந்த துரோகக் கூட்டணியிலேயே தன்னைத் தக்க வைத்துக் கொண்டு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரிமைப் பறிப்புக்கு எதிராக முதல் கண்டனக் குரல் எழுப்பிய வி.சி.க., ஈழத்தில் இனப் படுகொலை நடத்தி வரும் இந்திய அரசைக் கண்டித்து எண்ணற்ற பல போராட்டங்களை நடத்திய வி.சி.க., ஈழ மக்களுக்கு எதி ராக இந்தியா செய்த அடுக்கடுக்கான குற்றங்களை, கொடூரங்களை இந்தத் தலைமுறை மட்டுமல்ல, இனி வரும் தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு திருமா வின் உரையை ‘குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு’ என்று நூலாக வெளி யிட்டு மக்களுக்கு விழிப்பூட்டிய வி.சி.க., இன்று எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைத்து கொலைகார காங்கிரசுடனே கூட்டு சேர்ந்து நிற்கிற தென்றால் சந்தர்ப்பவாத நாற்காலி அரசியலின் சீரழிவுக்கு தன்னலவாத தேர்தல் அரசியலின் தகிடு தத்தங் களுக்கு ஓர் எல்லையே இல்லையா என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈழ மக்களின் எதிரிச் சக்திகள் என்று நாம் எப்போதும் குறிப்பிடுவது மூன்று. ஒன்று களத்தில் ஈழ மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவம், சிங்கள அரசு. இரண்டு அந்த இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசு, இந்திய இராணுவம். மூன்று அதற்குத் துணை போகும், முட்டுக் கொடுக்கும் அல்லது இவற்றை மூடி மறைத்து மோசடி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்ததது வரும் தி.மு.க. அரசு என்பதையும் - ஏன், இதில் அ.தி.மு.க., இ.க.க.மா., கட்சிகளெல்லாம் ஈழ மக்கள் எதிரிக் கட்சிகள் இல்லையா என்று கேட்டால் இவை அதிகாரத்தில் இல்லாத எதிரிக் கட்சிகள். ஆனால் அதிகாரத்தில் உள்ள, அன்றாடம் போரை நடத்துகிற போருக்குத் துணை போகிற கட்சிகள் இம்மூன்று மட்டுமே என்பதையும் - சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தொடர்ந்து சொல்லி வந்திருககிறோம்.

இப்படியிருக்க அந்தத் துரோகக் கூட்டணியில்தான் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது வி.சி.க. இதன் மூலம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் வி.சி.க.வுக்கு வழங்கும் ஆதரவுக்குப் பதிலுதவியாக 38 தொகுதிகளிலும் வி.சி.க., காங்கிரஸ், தி.மு.க. அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவர்களுக் காக உழைக்கும், வாக்கு சேகரிக்கும். அந்தந்த பகுதி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபடும். அதாவது இவ்வளவு காலமாக தமிழீழத்துக்கும் தமிழக மக்களது உரிமைக்கு குரல் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வந்த வி.சி.க. தேர்தலில் ஈழ விடுதலையின் எதிரியான காங்கிரசுக்கு, அதற்குத் துணைப் போகும் தி.மு.க.வுக்கு உழைக் கும். சிறுத்தைகள் உழைப்பார்கள். பாடுபடுவார்கள்.

சரி, அப்படியானால், இவ்வளவு காலமும் ஈழம் பற்றிப் பேசியது, அதற்கு ஆதரவாகப் போராடியது, சிறை சென்றது, வழக்குகள் சந்தித்தது, பட்டினிப் போராட்டம் நடத்தியது இதற்கெல்லாம் என்ன பொருள். இந்தப் போராட்டங்களை எப்படி எடுத்துக் கொள்வது. இந்தப் போராட் டங்கள் உண்மையா அல்லது இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்காக எதிரிகளுடனும் துரோகிகளுடனும் கூட்டு சேர்ந்திருப்பது உண்மையா.

ஏன் சிறுத்தைகள் மட்டும்தான் அணி மாறுகிறதா, மற்ற கட்சிக ளெல்லாம் அணி மாறவில்லையா. சந்தர்ப்பவாத தேர்தல் அரசியல் நாற்காலி அரசியல் நடத்த வில்லையா என்கிற கேள்விகள் எழலாம். உண்மை. தேர்தலுக்குத் தேர்தல் எல்லா கட்சி களும்தான் அணி மாறுகின்றன. வெவ் வேறு கூட்டணிகளில் அங்கம் வகிக் கின்றன. சந்தர்ப்பாத நாற்காலி அரசியல் நடத்துகின்றன. மறுக்க வில்லை. அதை நியாயம் என்றும் சொல்லவில்லை. ஆனால் எந்தக் கூட்டும் அணி மாற்றமும் ஏன், யாரோடு என்பதுதான் கேள்வி.

தற்போது பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க., கட்சிகள் அ.தி.மு.க. வுடன் கூட்டு சேர்ந்துள்ளன. சரி. அதிமுக,வின் ‘ஜெ’ தமிழகத்திற்கு எதிரானவர், தமிழினத் துக்கே எதிரானவர் என்கிற ஒரு கருத்தும் இருக்கிறது. சரி. ஆனால், தற்போதைய தமிழீழத்துக்கு அவர் எதிரியா, அங்கே போரை நடத்து பவரோ, போரை நடத்து பவர்களுக்கு துணை நிற்பவரோ அவரா. நிச்சயமாக அல்ல. மாறாக அப்படிப்பட்ட போரை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கு துணை நிற்பவர்களுக்கு அவர் எதிரி. அப்படியிருக்க உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள் அவரைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டாமா. அவரை வைத்து தமிழினத்தின் எதிரி களை, துரோதிகளை வீழ்த்த முயல வேண்டாமா. அதை விட்டு கொலை காரக் காங்கிரசோடு சமரசம் செய்து கொண்டு, அவர்களோடே கூட்டுச் சேர்ந்து, அவர்களுக்காக வாக்கு கேட் டால், தமிழீழப் படுகொலையில் நமக்கும் பங்கு இருப்பதாக ஆகாதா. அந்தப் படுகொலையை நாமே முன் னின்று நடத்துவது, அதற்கு துணை நிற்பது ஆகாதா? ஈழத் தமிழர்களுக் காகத் தன் உடலையே எரித்து கரிக் கட்டையாக்கி வீரச்சாவு எய்திய முத்துக் குமாரின் இறுதிக் கடிதத்தில் ‘நான் எரிந்த தகவலை அண்ணன் பிரபா கரனுக்கும் அண்ணன் திருமாவளவனுக் கும் உடனடியாகத் தெரியப்படுத்துங் கள்’ என்று குறிப்பிட்டிருந்தாரே, அந்த நம்பிக்கையை எரித்து சாம்பலாக்குவது ஆகாதா? அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி, திருப்பித் தாக்கு என்று இளைஞர்களைத் திரட்டிய தெல்லாம் இதற்குத்தானா, தங்கள் தன்னலத் துக்காக ஆதிக்க சக்திகளுக்கு அடி பணியவும், சேவை செய்யவும் கொலை காரர்களோடு கூட்டு சேரவும், அவ் விளைஞர்களது உணர்வுகளைப் பலி கொடுக்கவும்தானா? எப்படி மனம் வருகிறது இதுபோன்ற முடிவுகளை எடுக்க? மனச்சாட்சி எப்படி இடம் கொடுக்கிறது இப்படி மனச்சாட்சி யற்று இயங்குவதுதான் நாற்காலி அரசியலின் மகிமையோ, புரிய வில்லை.

ஏன், சிறுத்தைகள் நாங்கள் இப்போது நேரடியாக காங்கிரசோடு கரம் கோர்த்து நிற்கிறோம். எதிர் அணியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளே நாளைக்கு காங்கிரசுக்கு ஆதரவாக வர மாட்டார்களா, வர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று சிலர் கேட்கலாம்.

நியாயம், தமிழ்நாட்டில் வெற்றி பெறும் எந்தக் கட்சியும், நாளைக்கு தில்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப் புள்ள எந்தக் கட்சிக்கும் ஆதர வளிக்கும், அமைச்சர் பதவிகளைப் பெறும் , ஆட்சியில் அங்கம் வகிக்கும் என்பது தமிழ்நாட்டின் வரலாற்று சாபக்கேடு. ஆட்சிக்குப்பிறகு அது எப்படியும் நிகழட்டும்.

ஆனால் அதற்காக இப்போதே காங்கிரசோடு கூட்டு சேர்வது என்ன நியாயம்? இது காங்கிரஸ் கட்சி இது வரை நடத்திய கொலை பாதகங்களை ஆதரிப்பதாக, அதற்கு வக்காலத்து வாங்குவதாக, அதற்கு ஊக்கம் கொடுப் பதாக, மக்களிடம் அதற்கு நியாயம் கற்பிப்பதாக ஆகாதா?

இதுவரை தமிழீழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் துரோகமிழைத்த கட்சிகளுக்கு தற்போது கிடைத்திருக் கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு பாடம் கற்பித்தால் நடைபெற இருக் கிற தேர்தலில் அக்கட்சிகளை தோற் கடித்தால், அது அடுத்து வரும் கட்சி களுக்கும் ஒரு பாடமாக அமையும். தமிழக மக்களுக்குத் துரோகமிழைத் தால் அவர்கள் நேரம் பார்த்து பதிலுக்கு பாடம் புகட்டு வார்கள் என்கிற அச்சம் இருக்கும். இதை வைத்து தில்லியில் அடுத்து அமைய இருக்கும் ஆட்சிக்கு ஒரு அழுத்தம் கொடுக்கலாம். உண்மை யிலேயே நாம் ஈழ மக்கள் ஆதரவில் அக்கறையுள்ள அமைப்பாக இருந்தால் இந்திந்த கோரிக்கைகளை நிறை வேற்றினால்தான் தில்லி அரசுக்கு, ஆட்சிக்கு ஆதரவு தருவோம் என நிபந்தனை விதிக்கலாம். சில கோரிக் கைகளை நிறைவேற்ற நிர்ப்பந்தம் தரலாம். ஆனால், இந்த எல்லா வாய்ப்புக்களையும் முன் கூட்டியே தவறவிட்டு, தேர்தலுக்கு முன்பேயே அந்த ஆதிக்கச் சக்தி களுக்குத் துணை நிற்பது, அதனோடு கூட்டு சேர்வது, கூட்டாகப் போய் வாக்கு கேட்பது என்றால் இது எப்படிப்பட்ட கொடுமை? நாளை எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஈழ ஆதரவுக் கூட்டங்களில் பேசுவது..

ஒருவேளை, இனி ஈழ ஆதரவு நிலையே வேண்டாம். கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி இங்கேயே சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி இதற்குள்ளேயே நிறைவு காணலாம் என வி.சி.க.வில் அறிவிக்கப் படாத முடிவாக எடுத்து விட்டார்களா. புரியவில்லை..

அதாவது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வோ, ம.தி.மு.க. வோ., இ.க.க.வோ., ஈழ மக்களுக்கு ஆரதரவாகக் குரல் கொடுக்கும் உரி மையை இழக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் வி.சி.க. அந்த உரிமையை இழந்து விட்டது. இழந்து நிற்கிறது இதுதான் இந்த இரண்டு கூட்டணியிலும் சேர்ந்திருப்பவர்களுக் கான அடிப்படை வேறுபாடு.

இந்த வேறுபாடு சாதாரணமானதல்ல. வி.சி.க.வின் அரசியல் வரலாற்றில் என்றென்றைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும், மாறாத கறையாகப் படிந்து உறுத்தும் முக்கிய வேறுபாடு. இந்த வேறுபாட்டை வி.சி.க., தோழர்கள் உணர வேண்டும். இந்தக் களங்கத்திலிருந்து மீள உரிய வழி வகைகளைக் காண வேண்டும்.

கருணாநிதியின் சூழ்ச்சிக்கு பலியான திருமா

திருமா, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் தொடருவதன் மூலம் ஈழச்சிக்கல் சார்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இயங்கும் அவர் இயல்புக்கும், சந்தர்ப்பவாத பதவி அரசியலுக்காக தன் மனசாட்சிக்கு, தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு செய்யும் துரோகத்துக்கும் இடையில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

திருமாவை அச்சுறுத்தியோ, ஆசைகாட்டியோ தி.மு.க. தன்கூட்டணியில் வளைத்துப் போட்டதன் மூலம் கருணாநிதி தன் தன்னல வாத அரசியல் நோக்கில் இரண்டு காரியங் களைச் சாதித்திருக்கிறார்.

ஒன்று திருமா எதிர் அணியில் போய் காங்கிரசை விளாசித் தள்ளும் வாய்ப்பைத் தடுத்து, அவர் வாயை அடைத்து வாலைச் சுருட்டி வைத்து பெட்டிப்பாம்பாய் அடங்க வைத் திருக்கிறார். வி.சி.க. மற்றும் அதன் ஆதர வாளர்கள், அனுதாபிகள் வாக்குகளை தங்கள் அணிக்கு எதிராகச் செல்லாமல் தடுத்து ஆதரவாக தக்க வைத்திருக்கிறார்.

மற்றொன்று, தொடர்ந்து கருணாநிதி தமிழனத்துக்கு தமிழீழத்துக்கு செய்து வரும் துரோகத்துக்கு, தமிழக மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் வெறுப்பை, கோபத்தைத் தன்மீது மட்டுமே பாயவிடாமல் அதை திருமா பக்மும் திருப்பிவிட்டு அவர்மீதும் பாய வைத்திருககிறார். தமிழின உணர்வாளர்கள் தன்மீது மட்டுமே வசை பாடாமல் திருமாவின் மீதும் சேர்ந்து வசைபாட வைத்திருக்கிறார். இதன்மூலம் திருமாவின் அரசியல் வாழ்க்கையில் என்றென்றும் மாறாத களங்கத்தை ஒரு துரோகக் கறையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுமாதிரி சாணக்கியத் தனத்தில் வல்லவர், தேர்ந்தவர் கருணாநிதி என்பது தெரிந்த கதை. ஆனால் திருமா போன்றவர்களும் அதற்குப் பலியாவார்கள் என்பதுதான் யாரும் அறியாத எதிர்பார்க்காத கதை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் என்ன கேள்வி எழுகிறது என்றால், சமூக அவலங்கள் மீதான கோபத்துடனும், அதை எதிர்க்கும் வீராவேசத்துடனும் கிளர்ந்தெழுந்து வரும் ஒவ்வொருவரும் கொஞ்ச காலம் அப்படியிருந்து மக்களை ஈர்த்துத் திரட்டி, பின் அவர்களை இப்படி மொத்தமாகத் தன், தன்னலத்துக்கு, ஆதிக்க சக்திகளுக்கு பலி கொடுப்பது என்றால், அப்புறம் யாரைத்தான் நம்புவது என்கிற அலுப்பும், வெறுப்பும், விரக்தியும் ஏற்படுகிறது. இது அடுத்து உண்மையாகவே யாரும் போர்க்குணத்துடன் வந்தாலும், ஆமாம் எல்லாரும் முதலில் இப்படித்தான் வருகிறார்கள். அப்புறம் போகப்போக சோரம் போய் விடுகிறார்கள் என்று அவநம்பிக்கையோடு நோக்க வைக்கிறது. அல்லது பொது வாழ்விலேயே நாட்டமற்ற அலுப்புக்கும் சோர்வுக்கும் ஆளாக்க வைக்கிறது.

திருமாவின் இந்த முடிவு, தன் கட்சிக்குள்ளும் சரி, ஆதரவாளர்கள் மத்தியிலும் சரி இப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் தோற்றுவித்து இருக்கிறது. வரலாற்றில் போர்க்குணமிக்க பக்கங்களை அவர் எழுதுவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தவர்கள் வரலாற்றில் அவர் இதுபோன்ற கருப்புப் பக்கங்களை உருவாக்கியிருக்கும் கைங்கர்யங்களைப் பார்த்து, திருமா, நீங்களுமா? என்று கேட்க வைத்திருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-05-13 04:08:00
porkkaiponds@yahoo.co.in

தன்னை பொடாவிலே பொய் வழக்காடி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சிறையிலடைத்த ஜெயலலிதாவுடனேயே, ஏதோ வாங்கிக்கொண்டு, சகோதரி என்று அழைத்து, கூட்டணி அமைத்த போது வைகோ மீது எவ்வளவு ஆச்சரியமும், ஆத்திரமும் அடைந்தோமோ, அதே அளவு அதிரச்சியும், ஆத்திரமும் இப்போது திருமா மீது வருகின்றது.

திருமா இயன்றவரை முயன்று தான் பார்த்தார். அதில் அவரிடம் தவறில்லை. தவறு பா.மா. க. விடம் தான் என்று நான் கருதுகிறேன். தா. பாண்டியனிடம் தவறுள்ளதாக நான் கருதுகிறேன். இவர்களும் திருமாவை விட பெரும் அயோக்கியர்கள் தான்.

ஆனால், திருமாவின் தவறு என்ன வென்றால், அவர் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்திருக்கலாம். இரண்டு ஜெயிக்கப் போகாத சீட்டுக்காக "தன்மானத்தை" இழக்கலாமா? அது மட்டுமல்ல, "இந்தியா என்றால் அது சோனியாதான்" என்று பேசுவது எவ்வளவு கேவலம்!

மனிதத்தின் மீதே வெறுப்பும், அவநம்பிக்கையும் வருகிறது. ஆனால், தனி மனிதர்களிடம் குறை கண்டு பயன் என்ன? ஆதிக்க சக்திகள் "சூழலையே" கெடுத்து வைத்திருக்கின்றன. இது திட்டமிட்ட சீரழிப்பு.

சமூகத்தை நன்கு படியுங்கள். காரணம் கண்டறியுங்கள். கண்டறிந்த காரணிகளைக் களைய தேவையான ஆக்கமாக்கும் வழிவகைகளை ஆய்ந்தறியுங்கள். அவ்வழிகளை செயலாக்குங்கள்.

விடிவு நிச்சயம் உண்டு!!!!!

bhaskaran,ramanathapuram
2009-05-13 06:13:00
kbaskara@hotmail.com


Mr.seeman activities like AARIYAN he is not tamilan,he is suppoting to ADMK.


better Mr.thiruma.

seeman, நீங்களுமா? என்று கேட்க வைத்திருக்கிறது

bhaskaran
2009-05-13 06:20:00
kbaskara@hotmail.com


To,

Mr.Seeman


i am also from your place but ,nobody like you.
now ,

what you are doing now?

ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். அவங்களோட தமிழீழ எதிர்ப்பு ஒரு முக்கிய காரணம். இன்னொரு காரணம் ‘ஆட்டின் மூளைகூட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிந்திக்கும். ஆரியமூளை ஒருபோதும் சிந்திக்காது’ங்கிறதுல நான் ரொம்ப உறுதியா இருப்பது. போன ஆட்சியில் நம் கொள்கைகளுக்கு ஒத்துவராத சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒன்று மதமாற்ற தடைச்சட்டம். மதம் மாறுவதை எதுக்குத் தடை செய்யணும்? எனக்கு மதத்திலயோ, சாதியிலயோ நம்பிக்கை இல்லைன்னாலும் ஒருவன் மதம் மாறுவதைத் தடுக்க நீ யார்னு கேட்கறேன்.

இங்க இருக்கிற கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் யாருன்னு இந்த ஜெயலலிதாவுக்கோ, பாரதீய ஜனதாவுக்கோ தெரியுமா? அப்துல்கலாம் என்ன பாபரோட பேரனா? ராமநாதபுரத்தில இருக்கிற இப்ராஹிமும், இஸ்மாயிலும் அக்பருக்கும், ஹூமாயினுக்கும் சொந்தக்காரனா? என் சொந்த அண்ணனும் தம்பியும்தானே அவங்க. அவன் ஏன் இஸ்லாமியன் ஆனான்? நீங்க சாதியக் கொடுமை பண்ணினீங்க. அவன் வெளியப் போனான். இஸ்லாத்துக்கு போனான், அவன் சுன்னத்தை பண்ணி இஸ்லாமியனா ஏத்துக்கிட்டான். ஆனா இங்க இருந்த வரைக்கும் நீங்க எங்களை கொடுமை தானே பண்ணிணீங்க. நீயும் இந்து, நானும் இந்து. ஆனா நீ ஐயர், நான் பறையன். இது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்கிட்ட என்ன பதில் இருக்குது?

நாங்க எழுதிய ராமாயணமும், மகாபாரதமும் உனக்கு வேணும். நாங்க எழுதின கதையில் வரும் கற்பனை கதாபாத்திரமான ராமுனும், கிருஷ்ணனும் உங்களுக்கு வேணும். நாங்க மட்டும் வேணாம். நாங்க உள்ள வந்து மந்திரம் சொன்னா உங்க கடவுளுக்கு புரியாது, தீட்டுன்னா எங்களுக்குக் கோவம் வராதா? அனைத்தும் தெரிந்த கடவுளுக்கு தமிழ் மட்டும் தெரியாதா? ‘நான் உள்ளே வரக்கூடாது, நான் அர்ச்சகர் ஆகக்கூடாதுன்னா உங்க கடவுளே எனக்கு வேணாம்’ன்னு தான் அவங்க எல்லாம் வேறு மதத்துக்குப் போனாங்க.

எந்த பார்ப்பான் ஐந்து ஏக்கர் நிலம் வைச்சு விவசாயம் பார்க்கறான்? உனக்கு சோறு எவன் போடறான்? இளையான்குடியில் வேலை பார்க்கிற எங்க அப்பனும் ஆத்தாளும் உனக்கு அனுப்பறான் அரிசியும், சோறும், வெங்காயமும், கத்தரிக்காயும். அதைத் தின்னுட்டு நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நான் கேட்கிறேன், கடவுளை வணங்குவது ஒரு தொழிலா? ஒரு மணிநேரம் வணங்கிட்டு வந்து வயக்காட்டுலே உழைடா. நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா உங்களுக்கு யாரு சோறு போடறது? வந்து வேலை செய். குறைஞ்சபட்சம் சுத்தியிருக்கிற செடிகளுக்காவது தண்ணியை ஊத்து. உழைக்காம சாப்பிடணும், எல்லாராலயும் மதிக்கப்படணுங்கிறதுக்காக வேஷத்தை போட்டுட்டு நீங்க எங்களை ஏமாத்தறீங்க. இன்னும் எத்தனை காலத்துக்குப் பொறுத்திட்டிருக்கிறது இந்த ஏமாத்து வேலையை?

மதங்கிறது ஒருத்தனோட உரிமை. அவனுக்குப் பிடிச்ச மதத்தில் போய் இருக்கிறது அவனோட உரிமை. வறுமை, சாதியக் கொடுமை இதனால தான் ஒருத்தன் மதம் மாறுறான். பிடிச்சு எவனும் கர்த்தரை கும்பிடலை. எவன் பார்த்தான் கர்த்தர் வந்து இரட்சிச்சதை? ஆனால் அந்த மதத்தைச் சேர்ந்தவங்கதான் இவன் கஷ்டப்படும்போது ஓடிவந்தாங்க. கருமாத்தூர்ல அருளானந்தம் கல்லூரி கட்டினார். அதனால தான் ஐந்துகோவிலான் எம்.ஏ.படிச்சான். அமுல்ராஜ் வாத்தியார் ஆனான்.

நீங்க என்ன பண்ணினீங்க? எங்களை பள்ளிக்கூடமே போகக்கூடாதுன்னு பயமுறுத்து வைச்சீங்க. படிச்சா நாயாப் போயிருவே, பேயாப் பிறந்துருவேன்னு பயமுறுத்தி வைச்சீங்க. கிறிஸ்துவப் பாதிரிகள் இவன் குஷ்டரோகியா இருந்தாலும் தொட்டுத் தூக்கினான், படிக்க வைச்சான். பால்பவுடர் கொடுத்தான். கர்த்தரை கும்பிடுன்னான். கும்பிட்டான். மதம் மாறினான். இதுல என்ன தவறு இருக்குது? மதத்தை சட்டம் போட்டுத்தான் காப்பாத்தணும்னா என்ன மயித்துக்கு அந்த மதம்? மதம் என்பது விரும்பி இருப்பது.

இந்து மதம்னா என்ன, அது இங்க இருந்ததா, அது வெள்ளைக்காரன் எழுதினது. வெள்ளைக்காரன் நிர்வகிக்கும்போது இங்க இருக்கிற குறுநிலங்களை எல்லாம் ஒருங்கிணைச்சு அவன் தான் இந்தியான்னு பேர் வைக்கிறான். இந்தியாவில் உள்ள கிறித்தவன், இஸ்லாமியன், பார்சி போக மீதியுள்ளவன் இந்துன்னு அவன் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில எழுதினான். அதுக்கு முன்னாடி இந்தியாவுலே மதம் இருந்தது. புத்தமதத்தை புத்தர் தோற்றுவிச்சார். அந்த மாபெரும் மேதையை அடிச்சு விரட்டுன ஒரு பாவத்துக்காவது இந்த இந்து மதம் அழிஞ்சு போகட்டுங்கிறேன் நான்.

என் மண்ணில் தோன்றிய ஒரு மாபெரும் ஞானியை நீங்க துரத்திட்டீங்க. இன்னிக்கு இலங்கையிலயும், சிங்கப்பூர்லயும் புத்தர் இருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கத்தை வாங்கிக் குவிக்கறான் அவன். அவனோட ஓடமுடியுமா உங்களால. ஏன்னா புத்த மதம் ஒழுக்கத்தை போதிக்குது, தியானம் சொல்லித் தருது, உடற்பயிற்சி கலைகளை, வீரக்கலைகளையும் பிறப்பில் இருந்து கத்துக்கச் சொல்லுது. அப்பேர்ப்பட்ட மதத்தைத் தோற்றுவித்த மகானை நாட்டை விட்டே துரத்திட்டு, பெத்லகேம்ல ஆசாரி வேலை பார்த்துட்டிருந்த இயேசுநாதரையும், அரபு நாட்டில பேரீச்சம்பழக் காட்டில ஒட்டகம் மேய்ச்சிட்டிருந்த நபிகளையும் கோவில் கட்டி கும்பிடறாங்க. என் மண்ணில் தோன்றிய புத்தமதம் உலகம் பூராவும் இருக்கு, என் மண்ணில் இல்லையே ஏன்? இவர்கள் (பார்ப்பனர்கள்) செய்த சதி. அவன் கடவுள் இல்லைன்னு போதிச்சான், அறிவே கடவுள்னு சொன்னான். அய்யய்யோ நம்ம பொழைப்புக்கு வேட்டு வைக்கிறான்னேன்னு பயந்துட்டு அவன் மதத்தை இந்தியாவிலே இருந்தே துரத்திட்டாங்க.

சும்மா இந்து, இந்துன்னு குதிக்கக்கூடாது. சரி இருக்கட்டும். மதம் மாறின எல்லாரையும் மறுபடியும் இந்து மதத்துக்கே கூட்டிட்டு வருவோம். நீ எந்தச் சாதியில சேர்த்துப்ப? அப்பவும் தலித்தாத்தானே இருப்பான். அந்த மயித்துக்கு அவன் அங்கேயே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு இதில என்னப் பிரச்சனை? ஓட்டுப் போயிடும். அதுதானே காரணம்.

இந்த மாதிரியான இந்துத்துவா கொள்கைகளோட இருக்கிற அதிமுகவை எப்படி மறுபடியும் ஆட்சியிலே உட்கார வைக்க முடியும்? அதனால்தான் நானும், அண்ணன்களும் அதுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணினோம்.

Dr. V. Pandian
2009-05-14 03:39:00
porkkaiponds@yahoo.co.in

இந்த தேர்தலில் பலருக்கு சரியான முடிவெடுக்க இயலாமல் தி.மு.க. எதிர் ஓட்டுகள் சிதறியிருக்கின்றன. பலர் பாழாய்ப்போன விஜயகாந்துக்கும், பலர் வாக்களிக்காமலும் இருந்து, மறைபுகமாக தி.மு.க விற்கு உதவியுள்ளனர்.

பாஸ்கரன், சீமானின் நிலைப்பாட்டில் குற்றம் காண்பது, சூழ்நிலையின் புரிதலும், முகியமும் உணராததால் தான். இது பற்றிச் சில..........

கருணாநிதி தேவை வரும்போது ஜெயலலிதாவைவிட கொடூரமாக நடந்துகொள்கிறார். அந்த வகையில் இவருக்கும் அந்த அம்மையாருக்கும் வேறுபாடு கிடையாது. இந்த ஆட்சியில் தான் இதை நாம் தௌிவாக உணர்ந்தோம். நீதிமன்ற தடியடி, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவை சில சான்றுகள். ஆக, துரோகம் செய்யும் நன்பனைவிட கொடுமை செய்யும் எதிரி பாதுகாப்பானது.

பொதுவாகவே அட்டூழியம் செய்யும் அரசு கவிழ்ந்தால் தான் பாடம் கற்பார்கள். இல்லையென்றால், அரசுகளின் அடக்குமுறைகள் பெருகி, எதற்கும் அஞ்சா, ஹிட்லர்களாக உருவாகுவார்கள் நமது அரசியல் தலைவர்கள். இது எல்லோருக்கும் பொருந்தும், ஜெயலலிதாவுக்கும் சேர்த்து. இப்போதே கூட்டணியின் நிலையான வாக்குகளை வைத்தே அவர்கள், திமிராக நடந்து கொள்கின்றனர். எனவே, குற்றம் செய்யும் அரசு கவிழவேண்டும், அது எதிரிக்கே சாதகமாக அமைந்தாலும். இது ஈழச்சிக்கலுக்கும் அற்பாற்பட்ட நிலைப்பாடு.

ஈழச்சிக்கலுக்கு இதுவரை கருணாநிதி ஆதரவாக இருந்தாலும், மிக, மிக முக்கியமான இந்த நேரத்தில் அவரது செயல்படுகள், தமிழினத்துக்கே அவர் செய்த "மன்னிக்கவே முடியாத, படு பாதக, துரோக, கொடுஞ்செயல்". வரலாறு அவரை என்றென்றும் மன்னிக்காது. கருணாநிதியின் குடும்பம் இன்று ஒரு ஏகாதிபத்தியக் குடும்பம். இவர்களின் வணிக நலன்கள், தமிழ் நாட்டையும், இந்தியாவையும் தாண்டிச் சென்றுள்ளன. இவர்களால் இனி தமிழ் மக்களுக்கு எந்த பலனும் கிடையாது. இவர்களின் தமிழர் பற்றிய கண்ணோட்டம் இனி ஒரு மேற்கத்திய பாணிக் கண்ணோட்டமாகத் தான் இருக்கும். அதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சன்றாக, கட்டாயப் பாடமாக தமிழை புகுத்தும் போது அவர் முதல் வகுப்பில் மட்டுமே புகுத்தினார். இது, அவருக்கு உண்மையான தமிழ்ப்பற்று இல்லை என்பதை பறை சாற்றியது. செம்மொழிக்கு 1000 ஆண்டுத் தகுதியை ஏற்றுக்கொண்டார். இது ஓட்டு வாங்கும் தமிழ்ப்பற்றே தவிர, உண்மையான தமிழ்ப்பற்றல்ல.

ஈழச்சிக்கலில் எப்போதுமே எதிராக இருந்த ஜெயலலிதா, மக்களின் எழுச்சிகண்டு, அதைப்பயன் படுத்த எண்ணி "தனி ஈழம் தான் தீர்வு" என்று முக்கியமான நிலைப்பாட்டை எடுத்தார். அவர் உண்மையிலேயே மனம் திருந்தி அந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. வேடம் தான். ஆனால், அந்த வேடமும் இன்று நமக்கு பயன்படுகின்றது. அந்த நிலைப்பாட்டில் உண்மையான பயன் உள்ளது. அடுத்து மாநிலத் தேர்தல் வருவதால், அவர் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே பார்ப்பனீயத்தை நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.

இன்று உலகில் யாரும் கேட்பாரற்று கொல்லப்படும் நம்மின மக்களுக்கு, இந்த நிலைப்பாடும், அந்த நிலைப்பாடு உடைய கட்சி வெல்வதும் சிங்களத்திற்கும், உலகிற்கும் ஒரு செய்தியைச் சொல்வதாக இருக்க வேண்டும்.

ஆகவே தான் சீமான் எடுத்த நிலைப்பாடு மிகவும் சிறந்த நிலைப்பாடு. சீமானின் ஆதரவு நிரந்தரமான ஆதரவில்லை. அது கால சூழ்நிலை சார்ந்தது. தனி ஈழம் தான் என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்குப் பிறகு தான் அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்.

சீமான் இந்து மதத்தை ஆதரிக்கவில்லை. ஜெயலலிதாவும் இனி முன்போல் ஆட்டம் போட முடியாது. அடக்குமுறை இருக்கும் போதுதான் அதை மீறும் போக்கும் இருக்கும். இன்று இளைஞர்கள் எழுச்சி கொண்டுள்ளார்கள். அவர் இனி வாலாட்டினால், அதற்கான பயன்களும் விளையும். சன்றாக, பெங்களூரிலே பணி செய்து கொண்டிருந்த நான், சென்னைக்கு மாறி வந்தது, பொடா பொய் வழக்கிலே, நமது தமிழர்களை ஜெயலலிதா கைது செய்தது கண்டு பொறுக்காது, அவருக்கு எதிராக, விழிப்புணர்வு ஏற்படுத்தவே, சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தேன். ஆக, அடக்குமுறையால் எல்லோரையும் அச்சுறுத்த முடியாது. அந்த வகையில், அடக்குமுறைக்கும் ஒரு நல்ல பலனுள்ளது.

ஒவ்வொரு முறையும் மக்களின் ஞானம் கூடுகிறது. 5 வருடங்களுக்கு முன்பு இருந்த புரிதலைவிட, இப்போதய மக்களின் புரிதல் அதிகம். எனவே, இனி அரசியல் வாதிகள் அச்சத்தோடு வாழ வேண்டிய காலம். இப்போதுள்ள இளைஞர்களைப் பார்க்கும் போது இது தான் நமக்குப் புரிகிறது.

குறை சொல்ல வேண்டுமென்றால் தா. பாண்டியன், மருத்துவர், வைகோ போன்றோரைக் குறைகூறலாம். இவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள். திருமாவோடு சேர்ந்து இவர்கள் ஒரு கூட்டணி வைத்திருந்தால் இந்த சிக்கல்கள் எதுவும் இருந்திருக்காதே!

Raj
2009-05-14 09:52:00
rajganap@yahoo.com

ஈழ ஆதரவாளர்கள் தனிக்கூட்டணி அமைக்க முன்வரவில்லை. அப்படி இருக்க "ஈழ மக்களுக்கு ஆரதரவாகக் குரல் கொடுக்கும் உரிமையை வி.சி.க. இழந்து விட்டது" என்றுபழிசுமத்துவதில் அர்த்தம் இல்லை.

Kumar
2009-05-16 12:34:00
jk2107@gamil.com

You can only write and support papan & Papathi. Dont write rubbish. Take some leave & learn history.

Kumar
2009-05-16 12:37:00
jk2107@gamil.com

It looks Rajiendra Chaolan become papan and supporting Papathi follwoing his favoutie political leader. He started to support balana getha, in my openion.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP