Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்
எஸ்.ராமகிருஷ்ணன்


Kavalkottam காலம் :

சர்வதாரி வருடம் தை 30. ஹிஜ்ரி 1430 ஸபர் ரபிஉல் அவ்வல். பிப்ரவரி 2009. நேரம் இரவு. 10.37 சென்னை. (பழைய பெயர் மதராஸ் அதற்கு முந்திய பெயர் மதராபட்டினம்) தமிழ்நாடு. பழைய பெயர் (சென்னை ராஜஸ்தானி) தென்னிந்தியா. இந்தியா.

(சரித்திர நாவலை விமர்சனம் பண்ண வேண்டும் என்பதால் இவ்வளவு துல்லியமாக நாள் நேரம் போன்ற விபரங்களை எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது.)

பூர்வாங்கம்

சு. வெங்கடேசனின் காவல்கோட்டம் என்ற ஆயிரத்து நாற்பத்தியேழு பக்கமே உள்ள சிறிய நாவலை பனிரெண்டு நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன். இருபத்தி மூணு வருட அனுபவத்தில் ஒரு நாவலை வாசித்து முடிப்பதற்கு இவ்வளவு சிரமமும் அலுப்பும் அடைந்தது இந்த நாவலில் மட்டும் தான்.

சாலையோரம் சவுக்கால் தன்னைத் தானே அடித்துக் கொள்பவனைப் பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்து கொள்வானே கிட்டதட்ட அப்படியொரு தண்டனை போலத்தானிருந்தது இந்த நாவலை வாசித்தது. இவ்வளவு மெனக்கெட்டு எதற்காக படிக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்.

நாவலைப் பற்றிய பேசுவதாக ஏதோவொரு குருட்டு தைரியத்தில் ஒத்துக் கொண்டுவிட்டேன். படிக்க ஆரம்பித்த பிறகு தான் அதன் வண்டவாளம் தெரிய ஆரம்பித்தது. என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது என்னுடன் கூட்டத்தில் பேச வேண்டிய இன்னொரு நண்பர் போன் செய்து படித்துவிட்டீர்களா என்று துக்கம் விசாரிப்பது போலக் கேட்டார்.

நீங்கள் என்று எதிர்க் கேள்வி போட்டதும் பரிட்சைக்குக் கூட இப்படி படிச்சதில்லை சார். எப்படிப் படித்தாலும் நகர மாட்டேன் என்கிறது, ரோடு ரோலர் மாதிரி என்றார். எனக்கு அவரது உவமை பிடித்திருந்தது. மெதுவாக நகட்டி நகட்டி படித்துவிடுங்கள். நாவலைப் பற்றி பேச வேண்டும் அல்லவா என்று சொன்னேன். உடனே அவர் இப்படிப் போய் மாட்டிக்கிட்டேனே என்று புலம்பிக் கொண்டு போனைத் துண்டித்தார்.

அது இன்னமும் நாவலைப் படிக்க விடாமல் தடுக்க ஆரம்பித்தது. மனதைரியத்துடன் இதைப் படித்தவர் எவராவது இருப்பார்களா என்று நண்பர்கள் வட்டாரத்தில் தேடத் துவங்கினேன். பெயரைக் கேட்டவுடன் மௌனமாகி விட்டார்கள்.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இந்த நாவலை மூன்று முறை படித்துவிட்டார் என்றார்கள். அவர் மிலிட்டரியில் வேலை செய்த அனுபவம் உள்ளவர், அதனால் எவ்வளவு கடினமான வேலையும் செய்துவிட முடியும், நிச்சயம் அவர் படித்திருப்பார் என்று தோன்றியது. சாமான்ய மனுசன் எவராவது படித்திருக்கிறார்களா என்று கேட்டேன். பதிலே இல்லை.

சரி விதி வலியது, எப்படியாவது படித்து முடித்துவிடலாம் என்று நாளைக்கு மூணு நாலுமணி நேரம் வீதம் படித்து ஒருவழியாக நாவலை முடித்து கீழே வைத்தபோது நூற்றாண்டுகளாக ஒரே புத்தகத்தைப் படித்தால் ஒருவன் எவ்வளவு அலுப்பும் சலிப்பும் அடைவானோ அப்படியொரு சோர்வு பற்றிக் கொண்டது. இந்த லட்சணத்தில் காய்ச்சலும் சேர்ந்து கொள்ள நாலைந்து நாள் படுக்கையிலே கிடந்தேன். தூக்கத்தில் கூட நாவலின் பக்கங்கள் புரண்டு கொண்டேயிருந்தன. புதைச்சேறில் மாட்டிக் கொண்டது போன்ற அனுபவம். நல்லவேளையாக வெளியீட்டு விழாவிற்குப் போகவில்லை. சென்றவர்கள் அங்கு பாடப்பட்ட புகழாரங்களைக் கண்டு தலைகவிழ்ந்து வந்தார்கள் என்று கேள்விபட்டேன்.

ஒரு மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று விரும்பினால் எளிய வழி அவனுக்கு ஒரு காவல் கோட்டம் நாவலை வாங்கித் தந்துவிட வேண்டியது தான். புத்தக சைஸ் பார்த்தால் போதும் சப்தநாடியும் அடங்கிவிடுவான்.

மதுரையில் சில கடைகளில் விளம்பரங்களுக்காக ஆள் உயர சைஸ் பனியன் அல்லது மிகப்பெரிய செருப்பை வைத்திருப்பார்கள். இதை எல்லாம் யார் போடுவார்கள் என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். இந்த நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் அந்த எக்ஸ்ட்ரா லார்ஜ் XXXX சைஸ் சு. வெங்கடேசன் போன்றவர்களுக்காக மட்டுமே தயாரிக்கிறார்கள் போலும் என்பதை உணர்ந்தேன். இவ்வளவு பெரிய எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நாவலை எழுதுவது என்றால் சாமான்ய வேலையா என்ன?

டால்ஸ்டாய் ஆயிரம் பக்கத்திற்கு மேல் எழுத வில்லையா என்று கேட்கலாம். உண்மை தான் ஆனால் டால்ஸ்டாய் ஒன்றும் பந்தல் போடும் வேலை செய்யவில்லையே. சின்னஞ்சிறிய வீடு கட்டுவதற்கு ஆறு மாசமாகிறது. ஆனால் ஊரையே வளைத்து கீற்றுப் பந்தல் போடுவதற்கு இரண்டு நாள் போதும், சர்வ அலங்காரத்துடன் போட்டுவிடலாம். பந்தலைக் காட்டி இதுவும் பல்லாயிரம் பேர் தங்கும்படியாகத் தானே அமைக்கபட்டிருக்கிறது அதை ஏன் கட்டிடக்கலையின் உச்சம் என்று ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்க முடியாது இல்லையா? அப்படி இந்த நாவலும் ஒரு பெரிய மாநாட்டு பந்தல் தான். கீற்று தெரியாமல் வேஷ்டி விரித்து ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது, மற்றபடி உள்ளே அத்தனையும் பொத்தல்.

காவல்கோட்டம் நாவல் வெளியான சில தினங்களில் ஆண்டின் சிறந்த நாவல் என்று விருதுக்கு அடையாளம் காட்டப்படுவதும். வெளியான நாளில் இருந்து சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, கோவை என்று ஒவ்வொரு ஊரிலும் அவர்களாகவே வெளியீட்டு விழா நடத்தி அரசு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்களின் புகழாரங்களை அவசர அவசரமாக சூட்டிக் கொள்வதும் எதற்காக என்று தான் புரியவில்லை.

ஒரு நாவலுக்கு ஒரு வெளியீட்டுவிழா நடத்ததுவது தான் மரபு. ஆனால் வெங்கடேசன் ஊருக்கு ஒரு வெளியீட்டு விழா செய்வதை காணும்போது நாவல் விற்றுத் தீருமளவு தொடர்ந்து பல நூறு வெளியீட்டு விழா நடந்தாலும் ஆச்சரியப்படப் போவதில்லை.

தமிழ் இலக்கியச் சூழலில் என்ன அபத்தம் வேண்டுமானலும் நடக்கலாம். அதை யார் தடுக்க முடியும்.

**

நாவலை முன் வைத்து சில பார்வைகள்:

இதை ஒரு சரித்திர நாவல் என்கிறார்கள். ஆனால் நாவலில் சரித்திரமும் இல்லை நாவலும் இல்லை. இரண்டும் கெட்டான் வகை. முதல் பகுதி நாயக்க மன்னர்களின் வரலாறு இரண்டாம் பகுதி கள்ளர் சீமை. இரண்டுக்கும் உள்ள ஒரே சம்பந்தம் கள்ளர்கள் மதுரையை காவல் செய்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை.

சரி, இதில் எதற்கு நாயக்கர் வரலாறு?

நேரடியாக கள்ளர்கள் மதுரை காவலுக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து நாவலைத் துவக்கினால் எப்படி ஆயிரம் பக்கத்திற்கு இழுப்பது? இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லும் நாயக்கர் வரலாற்றில் அப்படி என்ன புதிய விஷயமிருக்கிறது? கம்மவாருகளை விடவும் கொல்லவாருகளே வீரமானவர்கள். கம்மவார்கள் ஒன்றும் பெரிய வீரர்கள் இல்லை என்று ஜாதிஉட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர பெரிதாக நாயக்கர் வரலாற்றில் எந்த வெளிச்சத்தையும் நாவல் உருவாக்கி சாதித்துவிடவில்லை.

மதுரையின் வரலாற்றை எதற்காக நாயக்கர் காலத்திலிருந்து எழுதத் துவங்க வேண்டும். அது சங்க காலத்திலிருந்து இருக்கிறதே என்றால் நாயக்கர் காலத்தில் இருந்து தான் ரிக்கார்ட்ஸ் கிடைக்கிறது. அதற்கு முன்பு உள்ளதை எழுத கற்பனை வேண்டுமே என்று வெங்கடேசன் சொல்லக்கூடும்.

நாவலின் முதல் பகுதி முடிஅரசு. இரண்டாம் பகுதி குடிமக்கள். முதல் பகுதி 376 பக்கம். மாலிக்கபூர் மதுரைக்கு படை எடுத்து வருவதில் துவங்கி மதுரை கலெக்டராக பிளாக்பெர்ன் வந்து சேர்ந்து மதுரையின் சுற்றுக் கோட்டையை இடிப்பது வரையிலான சரித்திர காலம். அதன் பிறகு மதுரையைச் சுற்றிய கள்ளர்களைப் பற்றியது. குறிப்பாக தாதனூர் என்ற ஊரில் வாழும் கள்ளர்களைப் பற்றிய எண்ணிக்கையற்ற தகவல்கள் உதிரி சம்பவங்கள் போன்றவற்றால் நிரப்பட்டுள்ளது. ஹிண்டு பேப்பர் செய்தி முதல் பழைய சர்வே ரிக்கார்டு, போலீஸ் எப்ஐஆர் வரையான ஆயிரக்கணக்கான தகவல்கள் ஒன்றோடு ஒன்று திணிக்கப்பட்டு மாபெரும் வைக்கோல் போர் போல நாவல் காட்சியளிக்கிறது.

சரித்திரம் என்பதே பெரிதும் கற்பனையானது. அது அதிகாரத்தில் இருப்பவன் தன்னைக் காத்து கொள்ள உருவாக்கிய ஒரு புனைகட்டு. மன்னர்களின் வாழ்க்கையும் அதிகார கைமாறுதல்களும் மட்டுமே சரித்திரமில்லை. மக்கள் வாழ்வு, சமூக கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படும் மாறுதல்களும் நெருக்கடியும் விடுபடலும் மோதுதலும் புதுவரவும் இணைந்ததே சரித்திரம். பாடப்புத்தங்களுக்கு வெளியில் தான் சரித்திரம் ஒரளவு உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.

நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் சரித்திரத்தை அணுகும் போது முதலாக கவனிக்கவேண்டியது, சரித்திரத்தை எப்படி உள்வாங்கியிருக்கிறோம், எப்படி கற்பனை செய்கிறோம் என்பதே. முன்பு எழுதப்பட்ட சரித்திரக் குப்பைகளை விலக்கி உண்மையை அறிய முயற்சிப்பதே இலக்கியத்தின் பிரதான நோக்கம். சரித்திரம் என்பது முடிந்து போன கடந்தகாலமல்ல. அது முடிவில்லாத காலத்தொடர்ச்சி என்ற பிரக்ஞையே இலக்கியத்தின் பிரதான பணி.

வரலாற்றை மீள் ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள் சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள், ஆவணக்காப்பகத் தகவல்கள், நேரடி ஆய்வுகள் போன்றவற்றின் வழியே சரித்திரம் உருவான சரித்திரத்தை ஆராய்கிறார்கள். அதில் மறைக்கப்பட்டதும் தவிர்க்கப்பட்டதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள். அத்துடன் சரித்திரத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நாவலாசிரியன் சரித்திரத்தின் ஒற்றை வரியிலிருந்து தன் கற்பனையை உருவாக்கத் துவங்குகிறான். அவன் வரலாற்றை அதன் பெருமிதங்களுக்காக இன்றி சிதைவுகளுக்காக வாசிக்கிறான். வரலாற்றில் மறைக்ககபட்ட பகுதிகளை, இடைவெளிகளை அடையாளம் கண்டு கொள்கிறான்.

நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்தக் கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.

டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவர் சிறப்புநிதி நல்கை பெற்று கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். அவரது கட்டுரைகளும் ஆய்வும் உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்றவை. குறிப்பாக Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, "An Ode to an Engineer" in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் பெரும்பான்மை இவரது ஆய்வின் ஆதார தரவுகளே. ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont - A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலைக் கள்ளர்களைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் முத்துசாமி தேவர் என்பவரைப் பற்றி குறிப்பிட்டு, அவர் இந்த நூலின் இணையாசிரியர் போன்றவர் என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். காரணம் உள்ளுர் தரவிபரங்கள் அறிந்தவர்கள் உதவியால் மட்டுமே ஒரு ஆய்வு முழுமையடைகிறது. வெங்கடேசன் லூயிஸ் டுமாண்டிலிருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

டால்ஸ்டாய் போரும் வாழ்வும் எழுதும்போது நெப்போலியன் படையெடுப்பை தன் நாவலின் பின்புலமாக கொண்டிருக்கிறார். ஆனால் எந்த சரித்திர புத்தகத்திலிருந்தும் நெப்போலியன் பற்றிய சரித்திர விபரங்களை தொகுத்து தன் நாவலுக்கு எடையை அதிகமாக்கவில்லை. மாறாக அவர் படைகள் வருவதை மிகுந்த கற்பனை உணர்வோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். நெப்போலியன் வருகை என்பது அவருக்கு ஒரு குறியீடு. நாவலின் கதையோட்டத்திலிருந்து சரித்திரத்தை தனித்துப் பிரித்து எடுத்துவிட முடியாது.

சரித்திர பிரக்ஞை ஒரு நாவலில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு சிறந்த உதாரணங்களைத் தர முடியும். ஒன்று குர்அதுல்துன் ஹைதர் எழுதி அக்னி நதி என்ற நாவல். இது இந்திய சமூகத்தின் புத்தர் காலம் துவங்கி சுதந்திர போராட்ட காலம் வரையான பல நூறு வருட வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட சரித்திரம் அப்படியே நகலெடுக்கப்படவில்லை. மாறாக வற்றாது ஒடும் ஆறென காலம் ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதன் சுழிப்பில் மனிதர்கள் தோன்றுகிறார்கள், மறைகிறார்கள்.

இன்னொரு நாவல் அதின் பந்தோபாத்யாயா எழுதிய நீலகண்ட பறவையைத்தேடி. இதுவும் சுதந்திரப் போராட்ட காலத்து நாவல் தான். ஆனால் ஒரு இடத்தில் கூட ஆவணக்காப்பகத்தில் இருந்த தகவல்களை தொகுத்து பண்டல் கட்ட முயற்சிக்கவேயில்லை. இரண்டுமே தமிழில் வெளியாகி உள்ளது.

குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக காவல் கோட்டம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே என்று ஒரு கேள்வி எழுகிறது. அதுவும் பொய்யே. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, நான் உள்ளிட்ட பலரும் குற்றப்பரம்பரை பற்றி அவரவர் அளவில் எழுதியிருக்கிறோம்.

வழிப்பறி கள்ளர்கள் குறித்து பஞ்சாபி மொழியில் வெளியாகி உள்ள சோரட் உனது பெருகும் வெள்ளம் மற்றும் சமீபத்தில் மராத்தியில் வெளியான உபரா, உச்சாலியா போன்ற நாவல்களைப் படித்த எவருக்கும் இந்த நாவல் எவ்வளவு அபத்தம் என்று சொல்லாமலே புரிந்துவிடும். நான் குறிப்பிட்ட இந்த நாவல்கள் அத்தனையும் தமிழிலே வாசிக்க கிடைக்கின்றது. பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற சரித்திரக் கதைகளில் படிக்க சுவாரஸ்யமான கற்பனையாவது இருக்கும். இதில் அதுவும் கிடையாது என்றால் இந்த நாவல் எப்படி இவ்வளவு பெரிசாக உருண்டு திரண்டிருக்கிறது. அங்கே தான் இருக்கிறது வெங்கடேசனின் சாமர்த்தியம்.

நாலு பக்கம் கள்ளர் கதை, அடுத்து நாற்பது பக்கம் நாயக்கர் வரலாறு என்று டிவி சீரியல் போல இழுத்திருக்கிறார். ஒருவேளை நாயக்கர் வரலாறும் உபரித் தகவல்களும் நீக்கப்பட்டால் நாவல் இருநூறு பக்கத்திற்குள் முடிந்து போயிருக்கும்.

குளறுபடி 1:

நாவலின் ஆரம்பம் மதுரையைத் தாக்க மாலிக்கபூர் வருவதை எழுதிவிட்டால் ஒரு நூற்று ஐம்பது வருசங்களை முன்னாடி சேர்த்துக் கொள்ளலாமே என்று வெங்கடேசன் நினைத்திருக்க்க் கூடும். ஆகவே முதல் இரண்டு பக்கங்கள் மாலிக்கபூருக்கு. சரித்திரத்தை மீள்வாசிப்பு செய்கின்ற எவருக்கும் தெரியும் மாலிக்கபூர் என்பது ஒரு அரவாணி. அவனது பெயர் ஹசர் தினார் என்றால் ஆயிரம் தினார் கொடுத்து வாங்கப்பட்டவன் என்று பொருள். கில்ஜியின் பாலுறவு துணையாக இருந்தவன். அதனால் அதிகாரம் வழங்கபட்டு மற்றவர்கள் கேலி செய்யப்படக்கூடாதே என்று எஜமானனுக்கு உரியவர் என்ற பெயரில் மாலிக்கபூர் என்று அடையாளம் தரப்பட்டவன்.

மாலிக்கபூர் தமிழகத்திற்கு படையெடுத்து வந்தது குறித்து இன்றுவரை தெளிவான காரணங்கள் இல்லை. அவன் உட்பகையைப் பயன்படுத்தியே உள்ளே நுழைந்தான் என்று வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன. இந்த நாவல் திரும்பவும் பழைய குருடி போலவே மதுரையைத் தாக்க வந்தான் மாலிக்கபூர். தங்கம் வைரம் வெள்ளி என எண்ணிக்கையற்ற பொருட்களை கொள்ளையடித்தான் என்று அரைத்த வரலாற்று ரிக்கார்ட்டையே அரைக்கத் துவங்குகிறது.

ஒரு லட்சம் வீரர்களுடன் வந்தான் என்று மிகையாக உருவாக்கபடும் மாலிக்கபூர் படையெடுப்பையாவது எழுத்தாளரால் கற்பனை செய்ய முடிகிறதா என்றால் அதுவும் இயலவில்லை.

குளறுபடி 2:

இந்த நாவலின் முதல் முந்நூறு பக்கங்கள் நாயக்க மன்னர்கள் வரலாற்றை விவரிக்கிறது. இந்த வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ளதிலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே நகலெடுத்திருக்கிறது நாவல்.

குறிப்பாக 1) Edgar Thurston, "The castes and Tribes of south India, 2) The Madura Country - A manual - J..H..Nelson, Asian Educational Services New Delhi, Madras. 3) History Of The Nayaks Of Madura- R Sathianathaier, 4) The History of Tinnevelly by Rev R Caldwell, 5) History of Military transactions - R Orme இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

குறிப்பாக சத்தியநாத ஐயரின் மதுரை நாயக்கர் வரலாறு புத்தகத்தின் பல பக்கங்கள் தமிழாக்கப்பட்டு அப்படியே முழுமையாக நாவலில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சத்தியநாத ஐயரின் புத்தகத்தில் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சி பற்றிய பகுதியிது.

Minakshi negotiated with the latter with a view to nullifying the arrangements agreed upon, in return for, it is said, one crore of rupees. Chanda Sahib consented to her terms, and is said to have sworn by the Koran to safeguard her interests at any cost. He did not scruple to break his solemn vow, and imprison Mlnakshi in her palace. The latter's miseries overwhelmed her, and she put an end to her own life by taking poison.

Page 254

வெங்கடேசன் நாவலின் முப்பதாவது அத்யாயம் பக்கம் 255ல் இதே விஷயம் எப்படியிருக்கிறது பாருங்கள்

மீனாட்சி ஒப்புக் கொண்டாள். ஆனால் பங்காரு ஒப்புக் கொள்ளாமல் திருச்சியின் மீது படை எடுத்தார். சாந்தா சாகிப்பின் உதவியை நாடி பணம் கொடுத்தார். அதை விட அதிகமான பணத்தை மீனாட்சி தந்தபோது மீனாட்சியை அரசியாக ஏற்பதாகவும் படை உதவி செய்வதாகவும் குரானின் மீது சத்தியம் செய்துதந்தார். 1736ல் சந்தா சாகிப் தனது படையை வலிமை படுத்திக் கொண்டு மீண்டும் திருச்சி வந்தார். நேசசக்தி என்பதால் வழிவிட்ட கோட்டைக்குள் புகுந்தபின்பு அரசி மீனாட்சியை சிறைப்படுத்திவிட்டு நிர்வாகத்தை கவனிக்கத் துவங்கினார். மீனாட்சி நஞ்சுக் குப்பியை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்துவிட்டாள். (பக்கம் 255.)

வரலாற்று பாடப்புத்தகத்தில் உள்ளதை நகல் எடுத்திருப்பதைத் தவிர இந்த நாவலில் புதிதாக என்ன மாற்றத்தை எழுத்தாளர் உருவாக்கியிருக்கிறார் என்று புரியவில்லை.

ராணி மீனாட்சி விஷம் குடித்த நெருக்கடியை, என்ன விஷம் அது, அப்போது அவளுடன் யார் இருந்தார்கள், அவளுக்கு என்ன வயதானது, சாவு ஏன் தவிர்க்கப்படவில்லை, சாந்தா சாகிப் எதற்காக துரோகம் செய்தான் என்று கற்பனை செய்ய, செய்ய சாதாரண மனிதன் கூட ஒரு கதையைப் புனைந்துவிடுவானே, ஏன் ஆயிரம் பக்கம் எழுத முடிந்த ஆளால் இது சாத்தியமாகமல் போனது? ஒரே காரணம், சரித்திரப் புத்தகத்தில் இருக்கிறது அப்படியே எடுத்து பைண்டிங் செய்துவிடலாம் என்று ஆசை மட்டும் தான். மீனாட்சி ஊர்வலம் போனதை எழுதியவர் அவள் சிறைப்பட்ட நெருக்கடியான மனநிலையை ஏன் கவனம் கொள்ள இயலவில்லை?

உப்புசப்பற்ற தகவல்களைத் தானே இத்தனை வருசமாக சரித்திரம் என்ற பெயரில் நாம் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். நாவலும் அதே குப்பையை அழகாக பாலீதின் பையில் அடைத்து கையில் கொடுப்பது தான் சாதனையா? இப்படியான தகவல்கள் பக்கம் 36, 37, 39, 47, 89,140,152, 213, 215, 218, 229, 246, 256, 259, 314, 279 பக்கங்களில் சரித்திர பாட புத்தகங்களில் இருந்து கட்டிங் பேஸ்டிங் வேலைகள் செய்து நிரப்பட்டுள்ளன. அதை விரிவாக எழுதினால் விமர்சனம் நூறு பக்கம் மேலாகிவிடும் அபாயமிருக்கிறது.

குளறுபடி 3 :

திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய பொறியாளரின் உதவியால் நாயக்கர் மஹாலைக் கட்டினார் என்ற தகவலை பல காலமாக கேட்டு வருகிறோம். அந்த இத்தாலியர் யார், அவர் எதற்காக மதுரைக்கு வந்தார், எப்படி இது போன்ற கட்டிட வடிவம் ஒன்றைத் தேர்வு செய்தார், அதை எப்படி திருமலை நாயக்கர் ஒத்துக் கொண்டார்? இப்படி எண்ணிக்கையற்ற கேள்விகள் அதன் பின்னால் இருக்கின்றன. பிரிட்டீஷ் ரிக்கார்டு வரை தேடிய ஆள் ஆயிற்றே என்று இவரது நாவலில் தேடினால் அவரும் நாயக்கர் ஒரு இத்தாலியரின் உதவியால் மஹாலைக் கட்டினார் என்று பள்ளிபாடப்புத்தக வரிகளையே திரும்பவும் ஒப்பிக்கிறார். யார் அந்த இத்தாலியர் என்பதைப் பற்றிய துளி விபரமும் இல்லை. இது தான் பத்தாண்டு ஆய்வு செய்து எழுதியவரின் லட்சணம்.

குளறுபடி 4:

பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றாற்போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு அத்தியாயம் 36 பக்கம் 280யை படித்துப் பார்க்கவும்.

இது போலவே இரவெல்லாம் மழை பெய்யும் நாளில் குளிர் இருக்காது என்று கிராமத்து மனிதர்கள் கூட அறிவார்கள். வெங்கடேசனோ ஒரு வாரமாக பகலும் இரவும் விடாத மழை. உயிரை உறைய வைக்கும் குளிர் – (பக் 210) என்று எழுதியிருக்கிறார். இதே போல இயற்கையின் எளிய நுட்பமறியாத வரிகள் நாவலில் நிறைய இடங்களில் துருத்திக் கொண்டு நிற்கின்றன.

குளறுபடி 5 :

நாவலில் மருந்துக்குக் கூட கதைசொல்லும் போக்கிலோ, உரையாடல்களிலோ சரித்திர பிரக்ஞையே கிடையாது. மதுரை ரீகல் தியேட்டர் முன்புள்ள இட்லிக் கடையில் கேட்கக் கூடிய சரளமான மதுரை தமிழ் தான் முந்நூறு வருசத்தின் முன்னுள்ள நாயக்கர் காலத்திலும் ஒலிக்கிறது. ஒன்றிரண்டு உதாரணங்கள்:

பிறகு தம்மையாவை பார்த்து நாகம்மா நாயக்கர் வாடா என்று சொல்லிவிட்டு திருநீற்றை எடுத்துப் பூசினார். எங்கே வந்த என்று கடுத்த குரலில் கேட்டார். (பக் 43)

ஏண்டா இப்போ தான் வழி தெரிஞ்சதாக்கும். இத்தனை வருசமா எங்கடா போய் தொலைஞ்சே

அக்கா நல்ல பசி சோத்தைப் போடு பக்.195

விடு மாப்ள, உள்ளபடி நடக்கட்டும். பக்.201

எவன்டி அந்த எடுபட்ட பய பக் 221

ஙோத்தாலோக்க.. எழவுவிழுந்துருச்சிடா..

குளறுபடி 6 :

நாவலில் பழமையான மதுரை நகரின் முழுமையான தோற்றம் வரவேயில்லை. திருப்பரங்குன்றமும் மீனாட்சி கோவிலும் அதைச் சுற்றிய சாவடி தெருக்களும் நாயக்கர் மண்டபமும், புது மண்படமும் வருகின்றதேயன்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் பகலிரவுகள், அங்கு வந்து போன வணிகர்கள், ஊரின் செம்மையான பழஞ்சடங்குகள், விழாக்கள், குடியிருப்புகள், மின்சாரம் வந்து சேராத நாட்களில் பந்த வெளிச்சத்தில் பாதி இருளில் அவிழ்ந்த இரவுப் பொழுதுகள் எதுவும் நாவலில் தெளிவாக இல்லை.

சிலப்பதிகாரத்தில் மதுரை விவரிக்கப்படுகிறது. கோவலன் மதுரையை காண்பதைப் பற்றிய பகுதியது. எவ்வளவு துல்லியமாகவும், விரிவாகவும் அது மதுரையைக் காட்டுகிறது. பரிபாடல் ஒரு மதுரையை நமக்கு காட்டுகிறது. வைகை ஆற்றின் வெள்ளமும் நகரமும் வியப்பாக காட்சி தருகின்றன. நெல்சன் தனது மதுரை பற்றிய நூலில் எவ்வளவு விபரங்களைத் தொகுத்திருக்கிறார்.

வெங்கடேசன் மனதில் மதுரையின் பழமையான பிம்பம் எதுவுமில்லை. அவர் திரும்பத் திரும்ப இன்றைய வாழ்க்கையிலிருந்து கடந்த காலத்தை கட்ட முயற்சிக்கிறார். அதுவும் அவருக்கு பழக்கமான வீதிகள், இடங்கள், அதில் மட்டுமே அவரது கவனம் குவிந்திருக்கிறது.

அல்லி அரசாணி மாலை, மதுரைவீரன் கதை பாடல் போன்ற பெரிய எழுத்துக்கதைகளில் கூட மதுரையைப் பற்றிய விசித்திரமான சித்திரங்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த நாவலில் மதுரை என்பது பெயராக வருகின்றதேயன்றி அதன் சொல்லித் தீராத நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படவேயில்லை.

ஒரேயொரு சம்பவம், மதுரை கோட்டை கட்டப்பட்டதும் அது இடிக்கப்பட்டதும் அலுப்பூட்டும் அளவு திரும்பத் திரும்ப சொல்லப்படுவதை தவிர்த்து மதுரையின் ஏதாவது ஒரு வீதியின் நூற்றாண்டு நினைவு இதில் விவரிக்கபட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.

கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்பிலும் மதுரையைப் பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை. மாறாக தொ.பரமசிவத்தின் நுட்பமான பதிவுகள் அப்படியே உருமாற்றம் பெற்று நாவலில் ஆங்காங்கே பொருத்தபட்டிருக்கின்றன என்பது தான் கொடுமை.

குளறுபடி 7:

மனோகரா படத்தில் ஆண்வேடம் இட்டு வரும் சோழ நாட்டு ராஜகுமாரி மனோகராவோடு சண்டை போடுவாள். முடிவில் அவள் வேஷம் கலைந்து போகும். அவள் தன்னோடு சண்டை போடும்படியாக வாளை உயர்த்தும் போது என் வாள் பெண்களுடன் சண்டையிடாது என்று காதல் மொழி பேசுவான் மனோகரா. இந்தக் காட்சி அப்படியே சற்று உல்டா செய்யப்பட்டு பக்கம் 62ல் விஸ்வநாத நாயக்கருக்கும் துக்காதேவிக்குமாக நடக்கிறது.

இப்படி முடி அரசு பகுதி முழுவதும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஒடிய அரசகட்டளை, அரசிங்குளமரி, மனோகரா, மகாதேவி, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை சீமை, நீரும் நெருப்பும் போன்ற படங்களின் சரித்திர காட்சிகளை நினைவூட்டும் அத்யாயங்கள் நிரம்பி வழிகின்றன.

குளறுபடி 8 :

மதுரைக்கு கோட்டை கட்டியதால் மதுரை வாழ் மக்களுக்கு என்ன நல்லது கிடைத்தது? கோட்டைகள் அரசர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ஏற்படுத்திக் கொண்ட கவசம். அது மக்கள் வரிப்பணத்தில் தங்களைப் பாதுகாக்க செய்து கொண்ட ஏற்பாடு. அப்படித்தான் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையைச் சுற்றி கோட்டை கட்டப்படுகிறது.

சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்றுக் கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைப்பூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே விஸ்வநாதன் கோட்டை கட்டியதில் ஒரு பெருமையும் இல்லை.

பராமரிக்கப்படாத மதுரை கோட்டையை மாவட்ட கலெக்டர் பிளாக்பெர்ன் இடிக்க முடிவு செய்தவுடன் கோட்டை சுவரில் இருந்த 21 துடியான சாமிகளையும் வெளியேற்ற முயற்சிப்பதாக மக்கள் கொதித்து எழுந்தார்கள். அதற்கு பரிகார பூஜை நடந்தது என்று விரிவாக வெங்கடேசன் எழுதிப் போகிறார்

சமகாலத்தில் நடக்கும் சேது பாலம் விஷயத்தில் இப்படியான கடவுளின் சக்தி தான் தடையாக உள்ளது. அதை எதிர்த்து இடது சாரிகள் சுப்ரிம் கோர்ட் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடதுசாரி எழுத்தாளரோ மதவாத சக்திகளை விடவும் மோசமாகப் போய் கோட்டை சுவரில் உள்ள மொட்டை கோபுர முனியை இறக்கினால் நகரம் அழிந்துவிடும் என்பதற்கு வக்காலத்து வாங்கி முப்பது பக்கம் எழுதியிருக்கிறார். இது இடதுசாரி எண்ணங்களுக்கு எதிரானது மட்டுமில்லாது. பச்சையான மதவாதம்.

செவ்வியல் தெய்வங்களை உயர்த்திப் பிடித்து உருவாகும் மதவாதம் எவ்வளவு மோசமானதோ அதே அளவே நாட்டார் தெய்வங்களை முன்னிறுத்தி அதன் நம்பிக்கைகளைக் கொண்டாடும் தெய்வப்பற்றும் கண்டிக்க வேண்டியதே. நாட்டார் தெய்வங்களின் பின்னால் தான் சாதியின் வேர் ஆழமாக புதையுண்டிருக்கிறது. சாதியைக் காப்பாற்றி வைத்திருக்கும் பெரும்பலம் நாட்டார் கடவுள்களே. கவனிப்பார் இல்லாமல் கிடக்கும் காட்டுக் கோவில் தானே என்று கூட ஒரு சாதி வழிபடும் சாமியை இன்னொரு சாதியினர் கும்பிட்டுவிட முடியாது என்பது தான் தென்தமிழ்நாடு அறிந்த உண்மை.

வெங்கடேசனின் துடியான தெய்வங்கள் வெறும் தெய்வங்கள் மட்டுமில்லை, அவை சாதியின் பாதுகாவலர்கள். அதன் வழியே தான் சாதி ஒன்றிணைக்கப்படுகிறது. இதை விமர்சகர்கள் எப்படி சுலபமாக மறந்து வெங்கடேசனைப் பாராட்டுகிறார்கள் என்று தான் புரியவில்லை.

குளறுபடி 9:

இன்னொரு பக்கம் பிளாக்பெர்ன் மதுரை கோட்டையை இடிப்பதற்கு முடிவு எடுத்த நாட்களில் மதுரை கோட்டை எப்படியிருந்தது?

Madura town, they found it to be rectangular in outline with its sides presented to the cardinal points. Its fortifications, which were formerly extensive, were then much dilapidated ; but it was still defended by a fort, and surrounded by a broad ditch, and a double wall that originally had 72 bastions. Each side was about three-quarters of a mile in length,

The streets were narrow, irregular, and dirty, and the houses of the most miserable description. Large herds of cattle were often found within the precincts of the town, and mephitic miasmata were exhaled from the stagnant basins in the vicinity of the fort.

Fullarton s Gazetteer

அதாவது இடிந்து குப்பையாக இருந்தது. இந்த நிலையில் காலரா நோய் வேறு மதுரையில் பரவத் துவங்கவே பிளாக்பெர்ன். கோட்டை வாசலை ஆறு இடங்களில் இடித்துவிட முடிவு செய்கிறார். இந்த வேலைக்கு குற்றவாளிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்கிறார். மக்கள் காலராவிற்கு மருத்துவம் பார்க்க மறுத்து குலசாமிகளுக்கு வேண்டுதல் போடுகிறார்கள். இந்த நிலையில் அவர் மதுரை வீதிகளில் பாதி ஆக்ரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதைக் காண்கிறார். அதன்பிறகே கோட்டையை இடிப்பது என்று முடிவு செய்கிறார்.

கோட்டையை இடிப்பதற்கு முன்பு முப்பத்தியெட்டாயிரம் மக்கள் மதுரை நகரினுள் இருந்தார்கள். கோட்டையை இடித்த பிறகு எட்டாயிரம் பேர் புதிதாக நகரினுள் வசிக்க வந்திருந்தார்கள். இதில் 1200 பேர் குயவர்கள் மற்றும் நெசவாளிகள், சாயம் போடுகின்றவர்கள் என்று ராயல் ஆசியாடிக் சொசைட்டியின் ரிக்கார்ட் வால்யூம் மூன்று கூறுகிறது.

இன்னொரு பக்கம் கோட்டை இடித்த நாட்களில் கிழக்கிந்திய கம்பெனி அதுவரை இந்துக் கோவில்களுக்கு அளித்து வந்த மான்யத்தை நிறுத்தி கொண்டதாக அறிவித்தது. அதை கோட்டை இடிந்ததோடு சேர்ந்து கலெக்டர் இந்துகளின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது. அதனால் பிளாக்பெர்ன் சில நாட்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்பு அவர் மீதான குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றும் மதுரை மாவட்ட மிஷினரி வரலாறு கூறுகிறது.

வெங்கடேசனின் நாவல் இந்த வெள்ளை அதிகார சரித்திரத்தின் பின் உள்ள உண்மைகளை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக கோட்டையில் இருந்த முனிகள், காவல் தெய்வங்களை எப்படி சாந்தி படுத்தினார்கள், எப்படி உடுக்கு அடித்தார்கள், என்ன பலி கொடுத்தார்கள் என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்து எழுதுகிறார்.

சுயலாபங்களை நோக்கி வெள்ளை அதிகாரத்தின் சூழ்ச்சிகளை அவர் வெளிச்சமிட்டுக் காட்டவேயில்லை. அதே நேரம் கோட்டை இடிக்கப்பட்டதன் வழியே மதுரைக்குள் வசிக்கத் துவங்கிய அடித்தட்டு மக்களின் புது வாழ்க்கையைப் பற்றிய எவ்விதமான தெளிவும் அக்கறையும் வெங்கடேசனுக்கு இல்லை.

குளறுபடி 10 :

நாவலின் உப தலைப்புகளாக முதல் அத்யாயம் மதுரா விஜயம், ஆறாவது அத்யாயம் பாளையப்பட்டு அப்புறம் 37 வது அத்யாயம் யூனியக் ஜாக் என்று முதல் பகுதி பிரிக்கபட்டிருக்கிறது. இந்த தலைப்புகளுக்கும் உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தமில்லை. எந்த எடிட்டர் இப்படி பகுப்பு செய்தது என்று தெரியவில்லை.

இதில் குடிமக்கள் பகுதி துவங்கியதும் உள்ள இருளெனும் கருநாகம் என்ற தலைப்பு காணப்படுகிறது. இது பி.டி.சாமி எழுதிய பேய்க்கதையின் தலைப்பு. அதனால் என்ன? சரித்திரம் எதையும் தாங்கும் தானே.

நாவலின் பிரதான கதைக்குள் போவதற்கு முந்தைய சரித்திரத்திலே இவ்வளவு தடுமாற்றங்கள், தள்ளாட்டங்கள். இதைத் தாண்டி நாவலின் கதை எதைச் சொல்கிறது என்பதை அறிந்து கொள்வது அடுத்த பகிரதப் பிரயத்தனம்.

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுதத் தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்கக் கூட முடியவில்லை.

நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையைச் சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது, வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள், சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா, கள்ளர்களின் பூர்வீகத் தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய், ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை

அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதைத்தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸ் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி. இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும், அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கும் எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.

மதுரையைச் சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள், எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும். வெங்கடேசன் கள்ளர்களின் அந்த வலியை வாசகனுக்குப் பகிர்ந்து தரவில்லை தகவலாக திரட்டி நிரப்பியிருக்கிறார். வேல ராமமூர்த்தியின் எழுத்தில் வெளிப்படும் கள்ளர் வாழ்க்கையின் ரணமும் ஆற்றாமையும் உக்கிரமான கோபமும் வெங்கடேசனின் நாவலில் துளியுமில்லை.

கள்ளர் வாழ்வியல் பகுதி முழுவதும் திருடன் என்ற சினிமா பிம்பத்தை இன்னும் ஊதி பெருக்கியிருக்கிறார். மாடு திருடுதல், தானியக்கொள்ளைக்காக ரயிலில் திருடுவது. வீடு புகுந்து கன்னம் வைப்பது என்று களவினைக் கொண்டாடுகிறார். ஜல்லிகட்டில் மாடு பிடிப்பதையும், பார வண்டி திருட்டையும் சிலாக்கிறார். இந்தக் கொண்டாட்டத்தில் அடிபட்டு போய்விடுவது அவர்களின் நிம்மதியற்ற அன்றாட வாழ்க்கை மற்றும் கள்ளர் குடும்ப்ப் பெண்களின் அல்லல்படும் பிழைப்பு. குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு சிறை சென்று திரும்பியவர்களை சமூகம் நடத்தும் புறக்கணிப்பு போன்றவை இந்த நாவலில் விரிவாக அடையாளம் காட்டப்படவேயில்லை.

கள்ளர் வீடுகளுக்கும் கதவிருக்கிறது, அதைப் பூட்டிக் கொண்டு தான் உறங்குகிறார்கள், கள்ளர் வீட்டுப் பெண்களின் தாலியும் தங்கம் தான் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை நெருக்கடி தான் மனிதனைத் திருடனாக்குகிறது. எவனும் பிறப்பால் திருடன் இல்லை.

பழங்கதைகளில் வரும் திருடர்களைப் போல மதுரைக் கள்ளர்கள் எப்படி திருடப் போனார்கள், எப்படி கன்னம் வைத்தார்கள், அதில் எந்த கோஷ்டி பிரபலமானது என்பதை இருநூறு பக்கங்களுக்கு விளக்கியிருக்கிறார். அதிலாவது ஏதாவது புதிய விஷயங்கள் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை.

சிறுவயதில் கால் திருடன் அரை திருடன் முக்கால் திருடன் முழு திருடன் என்று நாலு திருடர்களைப் பற்றிய கதை ஒன்றை கேட்டிருக்கிறேன். இதில் முழுதிருடன் அப்பா, மற்ற மூவரும் பிள்ளைகள். கால் திருடன் உடைந்த மண்பானை, ஒட்டை காலணா என நம்ப வைத்து ஏமாற்றுவான். அரை திருடன் ஒரு ஆளை துணைக்கு கூட்டி போய் ஜவுளிகடையில் உட்கார வைத்துவிட்டு தேவையான பொருளை வாங்கி வந்துவிடுவான். திருடன் கூட்டிப் போன ஆள் மாட்டிக் கொள்வான்.

முக்கால் திருடன் இதில் என்ன சவால் இருக்கிறது என்று அரண்மனைக்குள் உடும்பைப் போட்டு ஏறி அத்தனை காவலையும் மீறி ராணியின் கழுத்து மாலையை திருடி வருவான். இது எல்லாம் திருட்டா என்று முழுத்திருடன் திருடர்களை பிடிக்க மாறுவேஷத்தில் வந்த ராஜாவை மடக்கி, தான் உதவி செய்தவாக அவர் முத்திரை மோதிரத்தை வாங்கி கொண்டு அவரை ஒரு சாக்கில் கட்டி வைத்துவிட்டு அரண்மனைக்குப் போய் முத்திரை மோதிரத்தை காட்டி வேண்டிய தங்கம் அள்ளிக் கொண்டு வந்துவிடுவான்.

இந்தக் கதை வேடிக்கைக்காக சொல்லப்படுகிறது. இதை சரித்திர உண்மையாக்கியிருக்கிறார் வெங்கடேசன்.

யாரும் நுழைய முடியாத திருமலை நாயக்க மன்னரின் அரண்மனைக்குள் இரண்டு கள்ளர்கள் கன்னம் வைத்துப் போய் ராஜ முத்திரையை திருடி வந்த காரணத்தால் அவர்களைப் பிடித்து வர ஆணையிட்டு சபைக்கு கொண்டு வந்ததும் திருடியவனுக்கு மூன்று சவுக்கடி தந்து இனிமேல் நீங்கள் தான் மதுரை நகரை காவல் காக்க வேண்டும் என்று பட்டயம் தருகிறார். திருடனை அரசன் முன் கொண்டுவந்தவனுக்கு கள்ளநாட்டில் நீதி பரிபாலனம் செய்யும் உரிமை தருகிறார்.

திருடனும் தான் அரண்மனையில் கன்னம் வைத்த ஒட்டை அப்படியே இருக்கட்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுக்கிறான். திருமலை நாயக்கரும் அதற்கும் சம்மதிக்கிறார். எவ்வளவு அப்பாவியான ராஜா. எவ்வளவு அப்பாவியான மக்கள். திருடன் கையில் கஜானா சாவியை ஒப்படைத்து விடுவது என்பது எவ்வளவு பெரிய ராஜதந்திரம். இதுதான் கள்ளர்களின் வீரப்பரம்பரை சான்று என்று நாவலின் இரண்டாம் பகுதி கூறுகிறது.

கள்ளர்கள் மதுரையை காவல் புரிந்தார்கள் என்று புகழாரம் சூட்டுகிறது. சரி காவல் புரிந்தார்கள். யாருக்கு, எதற்காக, யாரிடமிருந்து? சம்பளத்திற்காக செய்த வேலை தானே அது. அவர்கள் வாழ்க்கை அப்போது எப்படியிருந்தது? மதுரை நகரையே காவல் காக்கின்றவன் என்பதற்காக மாநகரில் அவர்கள் தங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தா? இல்லை அவர்கள் மனைவி மக்கள் அரசு அதிகாரத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டார்களா, இல்லையே? மீனாட்சி அம்மன் கோவிலில் கள்ளர்களுக்கு என்ன மரியாதை தரப்பட்டது? கள்ளழகர் உருவான கதை அறிந்தவர்கள் அதன் பின் உள்ள புறக்கணிப்பின் வலியை அறியாமலா இருப்பார்கள்?

கள்ளர்களை ஒடுக்குவதற்கு நாயக்கர் செய்த தந்திரமே இந்தக் காவல் முறை. தன் கையை வைத்து தன் கண்ணைக் குத்தி கொள்ள வைப்பது போன்றது. மதுரை வீரன் கதையில் கள்ளர்கூட்டத்தை ஒடுக்குவதற்காக மதுரை வீரன் வந்தான், ஒடுக்கினான் என்று நாட்டார் கதை பேசுகிறதே. அது நாயக்கர் காலத்தில் தானே நடந்தது. ராமேஸ்வரம் போகின்ற யாத்ரீகர்களைக் கொன்று வழிப்பறி செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் லண்டன் நீதிமன்றம் வரை சென்ற வழக்குகளை இன்றைக்கும் வாசிக்க முடிகிறதே?

கள்ளர்கள் கிராமங்களில் காவல் பணி புரிவதும், வரி வசூலில் ஈடுபட்டு வந்ததிற்கும் நாயக்கர் காலத்திற்கு முன்பே நிறைய சான்றுகள் இருக்கின்றன. வெங்கடேசன் நாயக்கர்களால் தான் கள்ளர்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று நாயக்கர் பெருமையை உயர்த்திப் பிடிக்கவே மறைமுகமாக முயற்சித்திருக்கிறார்.

மதுரை மாநகர் காவல் தான் கள்ளர்களுக்கு கிடைத்த பெரிய பேறு என்று வைத்துக் கொண்டாலும் காவல் பணிக்கு எத்தனை பேர் போயிருப்பார்கள்? அதிகம் சென்றால் நூறு பேர் போயிருக்கக் கூடும். மற்றவர்கள்? தாதனூரைத் தவிர மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த கள்ளர்கள் எதை நம்பி வாழ்ந்தார்கள்? மதுரை ஏன் அவர்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை? எது அவர்களைத் தொடர்ந்து இருண்ட மூலைகளில் குற்றச்சமூகமாகவே வைத்திருந்தது?

மதுரையின் மேற்கில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்தைத் தான் வெங்கடேசன் உருமாற்றி புனைஉருவம் தந்திருக்கிறார். இந்த கிராமம் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் பாதிப்பு அடைந்த கிராமம். ஊரின் வடபுறத்தில் சமண மலை ஒன்றும் சமண பிரதிமைகளும் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆடுஉறிச்சான் பாறை என்று ஒன்று காணப்படுகிறது. அங்கே திருடிக் கொண்டு போன ஆட்டை உறிப்பார்கள். இந்த ஊர் பற்றிய ரிக்காடுகளே அவரது நாவலின் முக்கிய அம்சம்.

அந்த ஊரின் துயர்படிந்த வரலாற்றையாவது முழுமையாக சித்திரிக்க முடிந்திருக்கிறதா என்றால் அதிலும் தோல்வியே. தரவுகள், தகவல்கள் கையில் இருந்தபோதும் கதையாக்க முடியாத அவரது எழுத்துத் தோல்வியே பக்கம் பக்கமாக பிரசங்கம் போல நீட்டிச் செல்கிறது. திருடுவது, பிடிபடுவது, விசாரணை, தண்டனை, மறுபடியும் அதன் தொடர்ச்சியான வன்கொலை என்று சலிப்பூட்டுகின்றன சம்பவங்கள். அதை தினுசு தினுசாக மாற்றி சொல்லிப் பார்த்திருக்கிறார்.

தேர்தல் சுற்றுபயணம் போகின்றவர்கள் ஒரு நாளில் எண்பது கிராமங்களை வட்டமடித்து வருவதைப் போலத் தான் நாவலும் மாறிமாறி வட்டமடிக்கிறது. தாதனூர், பிறகு உசிலம்பட்டி, பிறகு கம்பம், அதற்குள் பெரியார் அணைகட்டு, இடையிடையில் மதுரை.

பெரியார் அணை கட்டுவதில் ஈடுபட்ட கள்ளர் இன மக்களின் வம்பாடுகளை, உயிரிழப்பைப் பற்றி நானே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அணைக்கட்டு வேலையில் இறந்து போனவர்களின் கல்லறைகளை நேரில் பார்த்திருக்கிறேன். கொட்டும் மழையும் நோயும் விஷக்கொசுக்கடியும் உள்ள சூழலில் அவர்கள் ஒன்றிணைந்து அணையை உருவாக்கிய அந்த பிரம்மாண்ட கனவு நாவலில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சு போல போய்விடுகிறது. பென்னி குக்கின் வருகையும் அவரது அணைக்கட்டு முயற்சிகளும் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டிய நாவலது.

பெரியார் அணை முடிந்தவுடன் நீர்ப்பங்கீடு அடுத்தது சிடி ஆக்ட் எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு தாவிச் செல்கிறார். குற்றப்பரம்பரை சட்டம் கள்ளர்களை ஒடுக்குவதற்காக மட்டும் போடப்பட்ட சட்டமல்ல. மாறாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் உப்புக் குறவர்கள். அவர்கள் ஊர் ஊராகப் போய் உப்பு விற்றார்கள். வெள்ளை அரசாங்கம் உப்பை தாங்களே வாங்கி விற்கத் துவங்கிய பிறகு இவர்களை ஒடுக்க நினைத்தது. ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நேரம் இந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கவே உப்புக் குறவர்களை ஒடுக்குவதற்காக அந்த இனமே திருடர்கள் என்று அறிவித்து அவர்களை குற்றவாளிகள் ஆக்கியது. அப்போது தான் இந்த சட்டம் மறுஉயிர்ப்பு பெற்றது. உடனே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தொல்லை தரும் நபர்களை ஒடுக்கிவிடலாம் என்று காவல் உயரதிகாரிகள் சொன்ன ஆலோசனை படியே பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ஆதிவாசிகள், அடித்தட்டு இனங்களை, குற்றக்குழுக்களை ஒன்றிணைத்து குற்றப்பரம்பரை சட்டம் (The Criminal Tribes Act) 1871 அமுலுக்கு வந்தது. அதன் திருத்தபட்ட வடிவம் 1911ல் ஏற்றுக் கொள்ளபட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறைப்படுத்தலுக்கான வழிகாட்டும் குழுவில் ராமானுஜம் அய்யங்கார் என்ற தமிழ் காவல்துறை அதிகாரி செயல்பட்டிருக்கிறார். வங்காளத்தில் இருந்த நதிக் கொள்ளையர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்த நாடோடி வழிப்பறி கொள்ளைகளையும் தடுக்க இந்த முயற்சி தீவிரப்படுத்தபட்டது. இந்தியா முழுவதும் 160 சாதிகளின் மீது இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. இதில் சில இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வங்காள எழுத்தாளர் மகேஸ்வதா தேவி குற்றப்பரம்பரையான ஆதிவாசிகளின் உரிமைக்காக இன்றும் போராடி வருகிறார்.

தமிழ்நாட்டில் இந்த சட்டம் பெரிதும் அதிகார வர்க்கத்தின் நலனுக்ககாவே நடைமுறைபடுத்தபட்டது. அதை எதிர்த்து பெருங்காமநல்லூரில் போலீஸூடன் துப்பாக்கிச் சூடு நடந்து பலர் உயிர்ப்பலியானர்கள். எதிர்ப்பு வலுத்தது. முத்துராமலிங்கத் தேவருடன் பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் போராடி அந்த சட்டத்தை ரத்து செய்தார்கள் என்பதே வரலாறு.

குற்றப்பரம்பரை சட்டம் பற்றி பேசும்போது அதில் விவசாய நிலம் கொண்டவர்கள், நிலவரி கட்டுபவர் விதி விலக்கு பெற்றதும், தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த கள்ளர் இன மக்கள் மீது இந்த சட்டம் தீவிரமாகப் பாயவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் மதுரையின் மேற்கில் உள்ள கள்ளர் கிராமங்கள் அடைந்த பாதிப்பை ஆற்றுப் பாசனம் சார்ந்த கிராமம் அடையவில்லை, கிழக்கே ராமநாதபுர பகுதி அதிகம் பாதிப்பு கொள்ளவில்லை? ஆகவே இது முழுமையான அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறை சட்டமாகவே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது

வெங்கடேசன் மேடைப் பேச்சை போல குற்றப்பரம்பரை தரவுகளை அடுக்கி கட்டியிருக்கிறார். சிடி ஆக்டின் பாதிப்போ. மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் நடைபெற்ற அதிகார கூத்துகளோ மனதை பாதிப்பதாக அமையவில்லை. குற்றப்பரம்பரை சட்டம் ஒழிக்கப்படுவதன் முன்பே நாவல் முடிந்து போய்விடுகிறது. எப்படி இதிலிருந்து மக்கள் விடுதலை ஆனார்கள் என்பதில் தான் ஒன்றுபட்ட மக்களின் முயற்சியும் ஆவேசமும் உள்ளது. அதை நாவல் கவனம் கொள்ளவேயில்லை.

அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையைப் பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்து வருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.

நாவல் சிடி ஆக்ட் பற்றிய நிறைய ஆவணங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. அவை எல்லாம் கீழக்குயில் குடி ஆவணங்கள் தான். அந்த ஆவணங்களின் உதவியால் மட்டும் மனித அவமானத்தின் வலியை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை.

ரயில் வருகை, பள்ளிகளின் வருகை, போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது என்று தனித்தனி அத்தியாயம் போட்டு பிரித்து எழுதிய வெங்கடேசன் கண்டு கொள்ளாமல் விட்டுப் போன முக்கிய விஷயம் கிறிஸ்துவத்தின் வருகையும். அது மதுரைச் சீமையில் ஏற்படுத்திய உள்ளார்ந்த கொந்தளிப்பும். பசுமலையில் உள்ள மதுரை மிஷினரி பற்றியும், பள்ளி, போதகர்கள் சேவை பற்றியும் போகிற போக்கில் சொல்லி போகத் தெரிந்தவருக்கு மதுரை மிஷனரியின் 75 ஆண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டி எழுத வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

நாயக்க மன்னர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது கிறிஸ்துவரின் வருகையும் அதைத் தொடர்ந்த மதமாற்றங்களும். அவர்களை ஏற்றுக் கொள்வதா அல்லது ஒதுக்கி வைப்பதா என்று தெரியாத குழப்பம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மறவர் நாட்டில் கிறிஸ்துவம் நுழைவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருந்தது. பிரசங்கிகள் தாக்கப்பட்டார்கள். அடித்து காயப்படுத்தபட்டார்கள்.

ஜெசுவிட் பாதிரி ஒருவர் தனது சபைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிரசங்கம் செய்யப் போகின்றவர்களின் பல்லை உடைக்கிறார்கள். அதையும் மீறிச் சென்றால் பிடித்து சிறையில் இடுகிறார்கள். திரும்பவும் அந்தப் பகுதிக்கு போனால் தலையைத் துண்டித்துவிடுகிறார்கள் என்று புகார் சொல்கிறார். உடனே திருச்சபை வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இதற்காக இன்றுள்ள களியக்காவிளை பகுதியில் தமிழ் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறது. அங்கே பயின்று பிரசங்கத்திற்கு வந்தவர்கள் தங்களை ஐயர் என்று சொல்லிக் கொண்டு வேஷ்டி அணிந்திருந்தார்கள். சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள். அப்படியும் அவர்களால் தங்கள் மத நம்பிக்கையை மக்களிடம் சுலபமாக கொண்டு போக முடியவில்லை என்று ஜெசுவிட் மிஷனரி ஏடுகள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டனர். போர்த்துகீசியர் அதற்கு நிதி நல்கை தந்தனர் என்பதால் போர்த்துகீசிய வணிகர்கள் அந்தப் பகுதிகளில் வரிவிலக்கோடு வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அது நிர்வாக குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு நாயக்க மன்னிரின் முன்னாலும் இருந்த முக்கிய கேள்வி கிறிஸ்துவ போதகர்களை என்ன செய்வது, எப்படி நடத்துவது என்பதே. ஆராய்ந்து பார்த்தால் பல அரசியல் மாற்றங்களின் பின்னே இந்தக் காரணம் ஆழமாக வேரோடியிருக்கிறது.

ராணி மங்கம்மாளைக் காண்பதற்காக லிஸ்பனில் இருந்து வந்த கிறிஸ்துவ மிஷனரியைச் சேர்ந்த மூத்த பாதிரி முதன்முறையாக ஒரு உலக உருண்டை ஒன்றை அவளுக்குப் பரிசளிக்கிறார். அதுவரை அவள் உலக உருண்டை பற்றி கேள்விப்பட்டது கூட கிடையாது. வியப்போடு பார்க்கிறாள். அந்த உலக உருண்டையில் தங்கப் பிடி உள்ளது. ஊர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் இவ்வளவு தானா என்று பிரமிப்பதாக இருக்கிறது.

அத்தோடு இரண்டு லென்சுகளை பரிசாகத் தருகிறார். ஒன்று தூரத்தில் உள்ளதை அருகில் காட்டுகிறது. மற்றது அருகில் உள்ளதை தூரத்தில் காட்டுகிறது. இது எப்படி என ராணி வியக்கும் போது இது தேவனின் மகிமை என்கிறார் மிஷனரி.

அவள் மிஷனரியைப் பாராட்டி தன் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதித்து தன் சார்பில் பரிசுகள் தருகிறாள். ஆனால் அன்றிரவே மனம்மாறி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து தன் எல்லைக்குள் அவர் நடமாட கூடாது என்று வெளியேற்றினாள் என்றும் மிஷனரி ரிக்காடுகள் கூறுகின்றன.

இப்படி தோண்ட தோண்ட பூதம் கிளம்பும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் ஏன் விலக்கி போனார்? ஒரே காரணம் இந்தத் தகவல்கள் எளிதில் கிடைக்க கூடியதில்லை. இதற்காக பாரீஸில் உள்ள ஆவணக்காப்பகத்தை நாட வேண்டியதிருக்கும். தேடி அலைவது பெரிய சவாலாக இருந்திருக்கும். இன்னொன்று அதைக் கற்பனை செய்து ஆழமாக எழுதுவது மிகப்பெரிய வேலை.

வெங்கடேசன் நாவலில் வரும் மிஷனரி போதகரின் கடிதங்கள் யாவும் வெற்று தகவல்கள் மட்டுமே.

நாவல் பெருங்காம நல்லூர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டோடு நிறைவு பெறுகிறது. நாளிதழ் செய்தி வரை எத்தனையோ தகவல்கள் கிடைப்பதால் அதை எளிதாக நிரப்ப முடிந்திருக்கிறது.

நாவலைப் படித்து முடித்த பிறகு ஒவ்வொரு அத்தியாயத்திலும் வந்து போகும் பத்து பதினைந்து பெயர்கள், சம்பவங்கள் எதுவும் நினைவில் இருப்பதில்லை. எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். துண்டு துண்டான அத்தியாயங்கள்.

கதை என்று இந்த நாவலில் எதுவுமில்லை. தலைமுறை தலைமுறையாக வளர்ந்து செல்லும் கதைப் போக்கு கூட இல்லை. சர்வே ரிக்கார்ட் அல்லது சென்சஸ் ரிக்கார்ட் ஒன்றை எடுத்து அதில் வரும் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அத்தியாயம் தகவல்களை நிரப்பி எழுதினால் எப்படியிருக்குமோ அந்த சோர்வு தான் மிஞ்சுகிறது.

நாவல் முழுவதும் ஆங்காங்கே சமணர்களைப் பற்றிய விஷயங்கள் லேசாக தூவப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு இடங்களில் புத்த பிரதிமை வருகிறது. அது எதற்கு என்று நாவல் முடிந்தபிறகும் புரியவேயில்லை. ஒரு வேளை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் இருக்கிறது சமணமும் பௌத்தமும் போட்டுவிட்டால் மத ஒற்றுமையைப் பற்றி எழுதியதாக சொல்லலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

மிதமிஞ்சிய தகவல் சேகரிப்பும், தான்சேர்த்து வைத்த தகவல்களை மொத்தமாகக் கொட்டி வாசகனை திணறடிக்க வேண்டும் என்ற முனைப்பும், கற்பனையே இல்லாத வறட்டு விவரணைகளும், கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கபட்ட இருளைப் பற்றிய, நிசப்தம் பற்றிய, ஊரைப் பற்றிய, களவு, வேட்டை குறித்த வர்ணனைகளும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், தொடர்ந்து வெங்கடசனே நாவலில் நுழைந்து செய்யும் பிரசங்கங்களும் நாவலை மிகப் பலவீனமானதாக ஆக்குகின்றன.

காவல் கோட்டம் மதுரையை பற்றிய வெறும் கட்அவுட் சித்திரம் மட்டுமே.

காவல் கோட்டத்தில் பாராட்டும்படியாக எதுவும் இல்லையா என்று கேட்பது புரிகிறது. உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் காவல்கோட்டம் போன்ற நாவலைக் கூட விபரம் தெரியாமல் படித்துவிடக்கூடிய வாசகர்கள் தான். (நான் இதற்கு பலியாக்கபட்டவன். ஆகவே என்னை சேர்க்க முடியாது)

அதிலும் வெளியான நாலு நாளில் அதைப் படித்து விகடன் விருதுக்குத் தேர்வு செய்த அந்த மகானுக்கு இந்த ஆண்டின் சிறந்த வாசகர் விருது தரலாம்.

பின்குறிப்புகள்

என்னிடம் உள்ள பிரதியில் கடைசி அத்யாயம் இரண்டு தடவை அச்சாகி வேறு இருக்கிறது. அதையும் சேர்த்துப் படித்து வைக்கவேண்டிய இம்சை ஏற்பட்டது.

நாவலை இரண்டு ஆண்டுகாலம் மூன்று பேர் எடிட் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். எடிட்செய்ததே இப்படியிருக்கிறது என்றால் இதை எடிட் செய்யாமல் படித்திருந்தால்? நினைக்கவே பயமாக இருக்கிறது. இது வெங்கடேசனின் முதல் நாவல் என்கிறார்கள். அது இன்னமும் பயத்தை அதிகப்படுத்துகிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன்(writerramki@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், புத்தகத்தின் ஒரு பிரதியை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
Ramesh, 5, First Main Road, AGS colony, Velachery West, Chennai - 42.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
nondhakumar
2009-02-16 06:00:00
nondhakumar@gmail.com

இந்த புத்தகத்தை புத்தகத் திருவிழா கூட்டத்தில் தனியாக இருந்தது. நமக்கு கொஞ்சம் தடிமனான புத்தகம் என்றால், கொஞ்சம் அலர்ஜி.

இந்த புத்தகத்தைப் பற்றி அப்பொழுதே இரண்டு ஆச்சரியங்கள். 1. மதிப்புரை என யாரிடமும் எழுதி வாங்கவில்லை. 2. இவ்வளவு பெரிய நாவலுக்கு உதவியவர்கள் பலர் இருப்பார்கள். யாருக்கும் நன்றி இல்லை.

தன்னோட அண்ணிக்கும், சில குழந்தைகளுக்கு மட்டும், பிறகு, பொதுவாக போகிற போக்கில் பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்திருந்தார். அப்பொழுதே, ஒரு சந்தேகம்.

உங்கள் விமர்சனம் அதை உறுதி செய்கிறது.

மற்றபடி, தரவுகளை உரசி பார்த்து சொல்லியிருக்கிறீர்கள். அதைப் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நமக்கு சரித்திர அறிவு இல்லை.

vijayakumar
2009-02-16 06:31:00
kumarnilavu@gmail.com

இடதுசாரி எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார் சு.வெங்கடேசன்.

Kannan G
2009-02-16 07:41:00
magkannan@rediffmail.com

ஆயிரம் பக்கம் அபத்தம் என்னும் நெடுங்கதையை படிக்கும் விபத்தை நான் சந்திக்க நேர்ந்தது. முக்கியமான, நெருக்கமான நண்பர்கள் இருவர், இணைதளத்தில் இருந்து சிலவற்றை அச்செடுக்க வேண்டுமென்றும், அது தங்களால் இயலாததால், உதவிட முடியுமா என்றும் அலைபேசியில் விடுத்த அழைப்பை ஏற்று, 'பிரௌசிங் சென்ட'ருக்குச் சென்றதால் ஏற்பட்ட விபத்து. மிகுந்த சிரமத்திற்கிடையே, எழுத்துருவை மாற்றி, அதன் அளவை சுருக்கி அச்செடுத்த நிலையிலும் அது 18 பக்கம் பிடித்ததால், நண்பருக்கு வேறு வெட்டிச் செலவு.
பக்கம் பக்கமாக அச்சிடவேண்டிய அவசியம் இல்லையென்பதால், காகிதம், வடிவமைப்பு, அச்சு உள்ளிட்ட செலவினங்கள் ஏதுமற்ற நிலையில், இளம் படைப்பாளிகள் தங்களது கருத்துக்களை இணையம் மூலமாக பதிவு செய்வதென்பது சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு கொடுத்துள்ள கொடை. இதனையே சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில அறிவுஜீவிகள், இத்தகைய நவீன ஊடக வடிவத்தை வசவிலக்கியம் படைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்களோ என்ற சந்தேகம் கடந்த சில காலமாக எனக்குள் வேர்விட்டிருந்தது. தற்போது அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்து, அதுவும் உண்மைதான் என்று உரக்கத் தெரிவித்த எஸ்ராவுக்கு முதற்கண் நன்றி. இதற்காக மட்டுமல்லாமல், பலவற்றிற்காகவும் எஸ்ராவுக்கு நன்றி கூறவும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
காவல் கோட்டம் நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும், அதனை இதுவரையிலும் நான் படித்தறியவில்லை. அதற்கான சிந்தனையும் நேற்றுவரை ஏற்படவில்லை. ஆனால், 'ஆயிரம் பக்க அபத்தம்' எனும் அனர்த்தத்தை (இதனை விமர்சனம் என்று கூற முடியுமா என்பதை காலம்தான் தீர்மானிக்க முடியும்) படிக்க நேர்ந்த பிறகு, நாவலை கட்டாயம் வாசித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கியதற்கும் எஸ்ராவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
நாவலை இன்னும் படிக்காத நிலையில், இந்த அபத்தத்துக்கு எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் எழவில்லை என்றாலும், இங்கு நான் பதிவு செய்ய விழைவது, எழுத்தாளர் பயன்படுத்தியுள்ள விமர்சன(!) வடிவம். 'எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது' எனத் துவங்கும் வரிகளிலேயே குரல் வளையைக் குதறும் ஆத்திரத்தை எஸ்ராவின் எழுத்துக்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. நடுநிலையோடோ, கருத்து விமர்சன நோக்கிலோ எழுதப்பட்டது அல்லவிது என்பதும் தெரிந்து விடுவதால், அதற்குப் பின்னுள்ளவற்றை சீரிசாகப் படிக்க வேண்டியதில்லை என்ற மனோநிலையை முதலிலேயே உருவாக்கியதற்கும் எஸ்ராவுக்கு நன்றி பாராட்ட வேண்டும்.
நாவலைப் படித்துவிட்டு காய்ச்சலில் விழுந்த எஸ்ராவுக்கு, இதனை எழுதும் வரை காய்ச்சல் சரியாகவில்லை என்பது நடுங்கும் வார்த்தைகளில் இருந்து தெளிவாகிறது. நாவலை படிக்க பன்னிரெண்டு நாட்களை எடுத்துக் கொண்டுள்ள எஸ்ரா, இதற்கான விமர்சனம்(!) எழுதுவதற்காக பல்வேறு தரவுகளைத் தேடி பலநாட்களை செலவளித்துள்ளதும் அவரது உழைப்பில் வெளியாகி இருக்கிறது.
ஆயினும், டால்ஸ்டாய், குர்அதுல்துன் ஹைதர், அதின் பந்தோபாத்யாயா என சர்வதேச புகழ்பெற்ற நாவலாசியர்களின் படைப்புகளுடன் ஒப்பிட்டு நாவலின் தரத்தை உரசிப் பார்க்கிறார். இத்தகையோர் படைப்புகளுடன் 'ஆயிரம் பக்க அபத்த'த்தை ஒப்பிடுவதே அதற்கு புகழ் சேர்க்காதா என்றெல்லாம் யோசிக்கும் வல்லமையை எஸ்ராவின் காய்ச்சல்தான் பறித்திருக்கும் என நாம் நம்புவோம்.
எது எப்படியோ... ஒரு காலத்தில் ஊர்சுற்றி எஸ்ராவின் எழுத்து மீது எனக்கோர் ஈர்ப்பு இருந்தது. 'பாபா'வின் கைங்கரியத்தால் அதில் ஒரு சரிவு ஏற்பட்டது. தனது வசனத்தின் மூலம் பெண் கவிஞர் குட்டி ரேவதியை கேவலப்படுத்த முயன்ற 'சண்டகோழி'க்குப் பின்னர் எஸ்ரா எனும் தனிநபர் மீதிருந்த அபிமானம் தகர்ந்தது. தற்போது தன்னை ஒரு வசவிலக்கிய பிதாமகனாக எஸ்ரா வெளிக்காட்டியிருப்பது குறித்து கூற வேண்டுமானால், அவரது எழுத்தில் உள்ளபடியே "தமிழ் இலக்கியச் சூழலில் என்ன அபத்தம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதை யார் தடுக்க முடியும்?"

Tamilvaanan
2009-02-16 07:43:00
tamilvannan2000@yahoo.com

Ayoo Paaavam G.Kannan Naaval aasiriyar eavi vittavar pol therigiradhu, Eluthu Adiyaalaga Irupaar Pola therigiradhu. Indha Ayyiram Pakka Abatham allathu Aayiram Pakka Akkaporu Enru kooda sollalaaam adhu kurithu pala thagavalgal tharavugal innum oru sila naatkalil vara ullathu. Indha abathathirukku eppadi Ananda Vikutan Virudhu kodaukapattadhu ena Anada Vikatanil Visaranay Nadaipetru Varugiradhu. Prapanjan avargalukku eppadi kurippugal kodukapattu avaray Veliyiittu Vizha vil pesa vaythargal enbadhay patriyum avar viray vil katturay elutha ullarrr...... Idhu ponra Jaathiya Mosadi Prathigal Kattudaytha S.Ramakrishnan ukku nanrigal pala, Paratukkal pala........

udayasankar
2009-02-16 08:21:00
udaya.rail@aol.com

This Novel is a big shame to the Left literature movement in Tamilnadu.i have read this writer Su.Venkatesan's article in keetru some time before on Uthapuram Issue. when he is so openly glorifying Caste and Kallar's its a wide open question to all readers. He is on which side of the WALL now....... Dalit or the Hegemonic Caste........ Oppressor or the Oppreseed. Dont waste the time and money of readers.......... You have parties who celebrate caste all gates are open there for such HOOLIGANS

manikandan s
2009-02-16 09:44:00
smani007@gmail.com

காவல் கோட்டம் என்னும் அயிரம் பக்கக ஜாதிய அபத்தத்தை எப்படி தமிழினி பதிப்பகம் பதிப்பித்தது என்பது பெரும் கேள்வியாய் நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அந்த பதிப்பகத்தின் நம்பகத்தன்மைக்கு பெரும் கலங்கம் ஏற்பட்டுள்ளது. ஜாதியத்தால் இத்தனை குழப்பங்கள் சமூகத்தலத்தில் நிலவுகிற சுழலில், மதுரை போன்ற தென் தமிழக நிலத்தில் தீண்டாமை தான்டவமாடுகிர காலகட்டத்தில்.......... ஆயிரம் பக்கத்தில் நாயக்கம்மார் வரலாறு, கள்ளர்களை போற்றும் வீர வரலாறு என்பது அபத்தங்களின் உச்சம். அதுவும் இடதுசாரி இயக்கத்தில் (கடும் ஸ்தாபன கட்டுக் கோப்புகள்) இருந்து கொண்டு இதை எழுதும் துனிவு எப்படி ஒருவருக்கு வருகிறது என்பது குழப்பத்தின் ஊற்றுக் கண்னாய் தொடங்குகிறது. நாயக்கர் சங்கம் செய்யத் துனியும் ஒரு கேடு கேட்ட பணியை இன்று ஒரு இடதுசாரி செய்து முடிப்பது பெரும் தந்திரம் தானே.
இந்த நாவலின் பிரதியை எடுத்துக் பல லட்சம் பனமாக்கும் திட்டமும் சென்னையில் நடைபெற்று வருகிறது. நாயக்கர் சங்கம் மூலம் இதனை விநியோகிக்கும் திட்டம் அடுத்து செயல்பட துவங்கி உள்ளது. இந்த நாவலை முன்வைத்தி ஏற்கனவே சு.வெங்கடேசன் பல லட்சத்தை அபேஸ் செய்துள்ளார். ஏராளமானவர்களிடம் தரவுகளை திருடியவர், மதுரையில் ஒரு தனி நபரிடம் மட்டும் 2 லட்சம் ருபாய்க்கு புத்தங்களளை சுவாகா செய்துள்ளார், இதைவிட கூத்து என்ன வென்றால் அவர் "நாவல் எழுதிகிறேன்.... நாவல் எழுதிகிறேன்" என கட்சி பணி- இயக்க பணியை கடந்த ஐந்து ஆண்டுகள் செய்யவேயில்லை என இயக்காத்தார் பலர் பொருமுகின்றனர் ..... இதற்கு முழு ஒத்தாசைகளை செய்து கோடுத்தவர் நம் "ச.த" அவர்கள், ஜாதிடத்தை பிளந்துகட்டுகிற ஆதவன் தீட்சன்யா இந்த நாவல் பற்றி என்ன கூறுகிறார் என பொறுத்திருந்து பார்போம்.

karuppasamy
2009-02-16 09:49:00
karuppu_hsr@yahoo.co.uk

ஆ.இரா.வெங்கடாசலபதி இன்றுவரை தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறு துண்டு பிரசுரத்தை கூட அங்கிகரித்ததில்லை ஆனால் காவல் கோட்டம் என்னும் நாலலை அவர் அங்கிகரித்வுடன் அதுவே பெரும் சந்தைகம் எழுந்தது. உடன் நம் நன்பர்கள் மத்தியில் இது பற்றி விவாதித்தோம் ஒரு ஆய்வுக் குழுவை நியமித்தோம், அது MIDS க்கு சென்று வெற்றியுடன் திரும்பியது. ஆ.இரா.வெங்கடாசலபதியின் ஜாதி சான்றிதலுடன் நன்பர்கள் திரும்பினார்கள், இந்தியாயில் எந்த அரசு அலுவலத்துக்கு சென்று சில நூறுகள் வெட்டினால் தான் தஸ்தாவேஜ்கள் தானே நடந்து வரும் தானே. வெங்கடேசம் நாயக்கர் என்பது ஊர் அறிந்த உன்மை, இல்லையெனில் ரத்தம் சொட்ட சொட்ட் நாயக்கம் மாறு வரலாற்றை எழுத இயலுமா. பதிப்பித்த தமிழினி பதிப்பக அதிபர் வசந்தகுமார் நாயக்கர் என்பதும் புலன் விசாரனையில் தெரியவந்தது, நாயக்கர் வரலாற்றை பதிப்பிக்க நாயக்கமார் தானே இத்தனை பெரும் கடன் பட முடியும். அடுத்து நம் தமிழ் இலக்கிய தர சான்று அதிகாரியும், காலச்சுவடு கண்ணனுக்கு பின் அவர் மூளையாக செயல்படும் ஆ.இரா.வெங்கடாசலபதியும் ஒரு நூறு சதவிகித அக்மார்க் (இல்லை அப்படி யென்றால் இப்போழுது மதிப்புக் கிதையாது- ISO900002 தர சன்று பெற்ற) நாயக்கர் என்பது இப்பொழுது ஓர் அறிந்த ரகசியம்.

அது தான் டா என்ன இந்த ஆள் காரியம் இல்லாமல் இந்த அபத்தத்தை வந்து தூக்கி பிடிக்கிறானேனு ஒரு சந்தைகம். சோழியன் குடுமி சும்மா ஆடாது. அது சரி நாம் மார்க்ஸ் சொன்ன படி அனைத்தையும் சந்தைகிப்போம் அது நம்மை மெய்மை நோக்கி இட்டுச் செல்லும்..........................

Udayachandiran
2009-02-16 10:19:00
nilamengumtamil@yahoo.com

மார்க்சிஸ்டுகளின் அபத்தம் ஈழ பிரச்சனை நலைபாடு துவங்கி ஜாதிய நாவல்களை இயக்கமே கொன்டாடுகிற நீண்டு கிடக்கிறது. மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர்கள் எவரும் இதனை படித்துவிட்டார்களா என்பது தெரியவில்லை.

மதுரை மாவட்டத்தின் பல கிராமங்களில் சுடகாட்டுக்கு பாதையில்லை, தலித்துகள் மலம் கழித்தால் குலத்தில் கழுவ அனுமதியில்லை, பள்ளியில் தலித் சிறுவர்களுக்கு அனுமதியில்லை, தலித்துகள் தேர்தலில் நின்றால் கொலை, ரெட்டை டம்ப்ளர் என ஒரு பெரும் பட்டியலை தீன்டாமை ஒழிப்பு இயக்கத்தார் வெளியிட்டது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்ர்ந்த்து ஆனால் அந்த இயக்தார் தான் இப்பொழுது காவல் கோட்டம் பறைசாற்றும் இந்த தீண்டாமையில் ஜாதிய போலிஸான கள்ளர்களின் வீர சரித்திரத்தை மலிவு விலைக்கு 590 அல்ல 450 க்கு தமிழகம் எங்கும் விற்று வருகிறார்கள். “ஏமாற்றுகிறிர்கள் அல்லது ஏமாறுகிரீர்கள்”. இனி உங்கள் பாடு..................

அடுத்த மாதம் சு.வெங்கடேசன் தலைமையில் ச.தமிழ்செல்வன் ஒரு மாபெரும் ஜாதிய நாவல் முகாம் ஏற்பாடு செய்யவிருக்கிறர் என தகவல் கிடைத்தால் ஆச்சரிய படுவதற்கு இல்லை. எல்லா ஆதிக்க சாதிகலும் மார்க்சிஸ்ட் கட்சியில் பன பலத்துடன், வாக்கு பலத்துடன் ஊடுறுவியபின் எல்லா வீர வரலாறுகளும் எழுதுவதும் சரிதானே. வாக்குகளை மனதில் வைத்து நடத்தப்படும் அரசியலும் இலக்கியமும் இந்த சமூகத்திற்கு பெரும் கேடுகளே.

vetry
2009-02-16 10:35:00
vetty@37.com

தமிழநாட்டுல இப்பபதுசா நெறய்ய பேரு கலாய்க்கிறாங்க.
நல்லாத்தானிருக்கு.
ம்... நேரந்தா சரியாயில்ல.

அகராதி
2009-02-17 01:24:00
akaraathi@gmail.com

//வெளியான நாலு நாளில் அதைப் படித்து விகடன் விருதுக்குத் தேர்வு செய்த அந்த மகானுக்கு இந்த ஆண்டின் சிறந்த வாசகர் விருது தரலாம்.//

விகடன் விருதுகள் குறித்து தனியே ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதலாம்.
சிறந்த தொலைக்காட்சி விருது விஜய் டிவிக்கு.. சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி விருது கலைஞர் (தொலைக்காட்சியில் உடன்பிறப்புகள்) ரசித்துப்பார்க்கும் மானாட மயிலாட நிகழச்சிக்கு..

reader
2009-02-17 02:38:00
reader@writer.net

நான் இந்த நாவலை வாங்கவோ, அல்லது படிக்கவோ இயலாத நிலையில் உள்ளவன். எனினும் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி அவசர அவசரமாக இப்படி
ஒரு விமர்சனத்தை எழுத வேண்டிய தேவை என்ன?. காலச்சுவட்டில் சலபதி
எழுதியதற்கு எதிர்வினையா இது. இதே எஸ்.ரா ஜீவாவிற்காக உருகி உருகி
அஞ்சலி எழுதியவர். ஜீவாவின் படங்களில் இல்லாத அபத்தமா. இல்லை பாபாவில் இல்லாத ஒன்றா?. இவர் வசனம் எழுதிய சண்டைக் கோழி, உன்னாலே உன்னாலே எத்தகையவை. உலக சினிமாவை‘கரைத்து குடித்தவர்' எழுதிய லட்சணம் எது என்று தெரியாதா?. நாவலுக்கு விருது கிடைப்பதில் அரசியல்
என்றால் எஸ்.ரா விகடனில் தொடர்ந்து எழுதும் போது உலகில் எல்லாம்
சரியாக இருந்ததா?. அப்போதெல்லாம் நல்ல பிள்ளையாக விகடன் வெளியிட்ட
அபத்தங்களை விமர்சிக்காமல் வாய்முடி இருந்தவர் இப்போது இப்படி ஏன் எழுத
வேண்டும். பிழைப்பிறகாக சமரசம் செய்து கொண்டு சம்பாதிப்பவர்கள் தாங்கள் சம்பாதிக்க முடியாத இடங்களில் அறம் பேசுவது போல்தான் எஸ்.ராவின் விமர்சனம் இருக்கிறது.

இவர்கள் எல்லோரும் சுய நலம் சார்ந்த செயல்பாடுகளை 80%, பிற (இலக்கியம் இத்தியாதி 20%) செய்கிறார்கள். இந்த 20%ல் சிலர் இலக்கியம் 10% சிலர் இலக்கியம் 5% சிலர் இலக்கியம் 2% செய்கிறார்கள். 100%த்தை நம்மிடம்
இலக்கியம் நான் கலைஞன், இலக்கியவாதி என்று விற்கிறார்கள். நாம்தான் இந்த இலக்கியவாதிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவு இந்த
அக்கப்போர்களிலிருந்து விலகி நின்று எக்கேடு கெட்டால் என்ன என்று வாசகர்கள்
விட்டு விட வேண்டும்.

துரை
2009-02-17 02:39:00
durainyani@satyam.com

ஆனந்த விகடன் விருதுக்காக 4 நாட்கள் நாவல் வாசிக்கப்படவில்லை, அங்கு நடந்து வரும் விசரனையில் அது சில மணி நேரம் புரட்டியப் பின் குடுக்கப்படட்தாக தெரிய வந்துள்ளது. எவரும் தேர்வுக் குழுவில் வாசிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. பின் அது எப்படி பேரம் பேசப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. வேறு ஒரு நாவல் தேர்வு செய்யப்பட்டு அதனை எழுதியவரை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர் அனுப்பட்டிருந்த நி¨யில் நிகழ்த பேரம் பற்றிய தகவல்கள் விரைவில் அம்பலமாகும்.............. முகத்திரை கிழியட்டும்...........................

‘பூ’ திரைபடத்தின் கதையை எழுதிய ச.தமிழ்செல்வனுக்கு ஆனந்த விகுடனின் சிறந்த கதை விருது கொடுக்கப்படதும் பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. வெயிலோடு போய் சிறுகதை எழுதி 30 ஆண்டுகள் கழித்து அதற்கு விருது என்றால் இத்தனை ஆண்டுகள் ஆனந்த விகுடனில் எவரும் அதனை படிக்கவில்லையா, இல்லை எவருக்கும் இப்படி ஒரு கதை இருப்பதே தெரியாதா. 30 ஆண்டுகளுக்கு பின் அதனை முற்றாக மாற்றியமைத்து திரைகதையை உறுவாக்கியவருக்கு அல்லவா விருது நியாயப்படி கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்,,,, இதிலும் பேரமா.........

“ஒரு வேலை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக இருக்குமோ” அய்யா விகுடன் பானியே தனிதான்..........

reader
2009-02-17 02:53:00
reader@writer.net

'டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவர் சிறப்புநிதி நல்கை பெற்று கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். அவரது கட்டுரைகளும் ஆய்வும் உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்றவை. குறிப்பாக Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, "An Ode to an Engineer" in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் பெரும்பான்மை இவரது ஆய்வின் ஆதார தரவுகளே. ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருப்பது வருத்தமளிக்கிறது'

ராமகிருஷ்ணன் இங்கு பாண்டியனை குறிப்பிட என்ன தேவை என்பது எனக்குப் புரியவில்லை. பாண்டியன் பூக்கோவின் சிந்தனைகளை, பூக்கோ முன்வைத்த கோட்பாட்டு சட்டகங்கள் உட்பட பல நவீன/பின் நவீன ஆய்வாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.நிகழ்காலத்தினையும் தன் ஆய்வுகளில் கொண்டு வந்துள்ளார், கள ஆய்வு மூலம்.இலக்கிய பிரதியில் அவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை எழுதுபவர்தான் தீர்மானிக்க வேண்டும்.வெங்கடேசன் சில சான்றுகளை/னூல்களை அறிய அவர் பாண்டியனின்
கட்டுரை, நூற்களை பயன்படுத்தியிருக்கலாம். மற்றப்படி பாண்டியனின் எழுத்து
எஸ்.ரா வகை இலக்கியவாதிகளின் கண்ணோட்டத்திலிருந்து மாறுபடும் சமூக
அறிவியல் எழுத்து. இதை பாண்டியனை படித்தவர்கள் அறிவார்கள். பெயர்
உதித்தல் மூலம் பிறரை முட்டாள்களாக சித்தரிக்கும் காரியத்தை எஸ்.ராமகிருஷ்ணன் எப்போது கைவிடுவார்?

kayalvizhi
2009-02-17 03:10:00
kaatuppuu@gmail.com

Hats off to S.Ramakrishnan.............. these fellows are to be kicked off from literature...... Exploiting others works is a big crime and is agianst humanity, Even in this 21st century these kind of intellect thefts is really a big curse on literature. why dont these guys just go around and do some other work? Caste is killing people day by day and these people want to reconstruct and glorify caste.. oh alas.. we think reading and understanding our environs is the need of the hour, bu these fellows want to waste our time and steal our money too........................

Netrikann
2009-02-17 03:21:00
vetrimaran@yahoo.sg

வாங்கய்யா வாங்க இங்கு ஆனந்த விகுடனுக்கு இனையான வேகத்தில் மற்றோரு வாசிப்பு புயல் வந்து விட்டார். அவர் reader@writer.net என்கிற பெயரில் சில குறிப்புகளை செயதுள்ளார். அவர் 17-2-2009 2:38 மணிக்கு நாவலை படிக்கவில்ல்லையாம் ஆனல் 17-2-2009 2:53 மணிக்க்கு நாவலை படித்துவிட்டு எல்லாத்தையும் புட்டு புட்டு வக்கிராராம். அட எத்தனை பெயர் இப்படி கிளம்பீர்கேங்க

go by the text and not by the writer, matter ukku vaapaa

Venilla
2009-02-17 03:32:00
whitemoon@yahoo.co.in

பாண்டியன் விட்ல தீ பிடிச்சா அவர் தான் வந்து தீயை அனைக்க வேண்டுமாம், மற்றவர்கள் இல்லாம் வேடிக்கை பார்கனுமாம். சுப்பர் நியாய வாதிக்கு கீற்று வாசகர் சார்பாக வாழ்த்துக்கள். கீற்று வாசகர்கள் அத்தகையவர்கள் அல்லர். நீர் வெங்கடேசனின் வழக்கறிஞ்ர் போல் உள்ளது. ஆனந்த விகடன் தேர்வு குழுவை கவனித்ததுபோல் உப்மையும் அவர் கவனித்து விட்டார் போல் உள்ளது. அது தான் நீர் 2.38 – 2.53 க்குள் படித்துவிட்டீர் போல் உள்ளது.

Keetru Nandhan
2009-02-17 06:01:00
editor@keetru.com

இணையதளத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் கட்டற்றதுதான். ஆனால், அதை தரம் தாழ்ந்த, ஆதாரமற்ற விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் கேலிக்குள்ளாக்காதீர்கள். கொள்கைகளை, செயல்பாடுகளை மட்டுமே விமர்சிக்கவோ, விவாதிக்கவோ வேண்டுமென வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தவறான மின்னஞ்சல், பெயர்களைத் தருவதையும் தவிர்க்குமாறு வேண்டுகிறோம்.

Natarajan Eathiraj
2009-02-17 10:05:00
ethinatarajan@yahoo.co.in

இது ஒரு நல்ல விமர்சனமில்லை.இது விமர்சனம் எழுதும் முறையுமில்லை.

எஸ்.ராமகிருஷ்ணன் வாசகர் இரா.சென்றாயன்
2009-02-17 08:05:00
sens1968@yahoo.co.in

15 பக்க அபத்தம்
சரித்தர நாவலை விமர்சனம் பண்ண துல்லியமாக நாள், நேரம், இடம் சொல்லிவிட்டு உடுத்தியிருந்த ஆடை வகைகள், சாப்பிட்டது சோறா? கூழா? என்பதை ஏன் குறிப்பிடவில்லை? (காய்ச்சலாக இருந்ததால் கஞ்சியும், ஊறுகாயும்தான் சாப்பிட்டு இருப்பீர்கள்.)
காய்ச்சலில் குளறுபடி என்று உளறியிருக்கிறதை வாசித்தேன். எதிர்நிலையில் எழுத வேண்டும் என்பதற்காகவே எழுதிய உங்களின் பிடிவாதம் உங்களுடைய தரத்தை குறைத்துள்ளது. உங்கள் இலக்கியத்தை விமர்சனம் செய்யும் போது உங்களின் வழுக்கைத் தலையை சொல்வது மாதிரி இருந்தது.
"மிலிட்டரியில் வேலைபார்த்தால்தான் கடினமான காவல்கோட்டை நாவலை வாசிக்க முடியும்"
"தெருவோரம் சாட்டையால் அடித்துக் கொள்கிற மாதிரி"
"நாவலை படிப்பது - விதி வலியது - தண்டனை மாதிரி"
இயல்பான வசனங்களையெல்லாம் மூளை கசக்கி இணைத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு எது பிரச்சனை? ஆனந்தவிகடன் பரிசு அறிவித்ததா? நூல் வெளியீட்டு விழா பல இடங்களில் நடந்ததா? நாவலில் ரிக்கார்டு, தஸ்தாவேஜூ இருக்கக் கூடாதா? தெருவில் போகிற, வருகிற, ஊர்ஊராய் சுற்றி அலைந்து பார்த்ததை பதிவு செய்துகொண்ட ஆனந்தவிகடன் உங்களை கைவிட்டுவிட்டது என்ற கவலையா?
நுண்மான் நுழைபுலம் கொண்ட எழுத்தாளர், சாமான்யனும் வாசித்த நெடுங்குருதி நாவலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே!
மழை பெய்தால் பனிதான் இருக்காது. குளிர், கடும் குளிர் இருக்கும். நீங்கள் கவலைப்படுகிற பூனைகளிடம் கேட்டுப்பாருங்கள். இந்த இயற்கை அறிவுகூட உங்களிடம் ஏன் இல்லை. காரணம் தலைக்கனம்.
தரமான எழுத்தாளர் நீங்கள், அதற்கு முன் நல்ல வாசகராக இருக்கப் பாருங்கள். ஐயா, தொ.ப.அவர்களை துணைக்கு அழைக்கிறீர்கள். இடதுசாரிகளின் நாட்டுப்புறத் தெய்வங்களின் மீதான மதிப்பீட்டை கேள்வி கேட்பதற்கு முன்னால் தொ.ப. அவர்களின் கட்டுரைகளை வாசியுங்கள், நிதானத்துடன்.
நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பது முன்னோர்கள் இறந்த இடங்கள் அல்ல; பலி பீடங்கள். அதை வணங்குவது, கொண்டாடுவது சாதிய குறியீடல்ல; இறந்து போனவர்களை நினைத்து வணங்குவது நமது பண்பாட்டின் தொன்மம். இது யாருக்கும் தீங்கு ஏற்படுத்தாது.
கோட்டைச் சுவரில் இருந்து தெய்வங்களின் சிலைகளையும், இந்துத்துவ கதாநாயகன் ராமனின் இல்லாத பாலத்தையும் ஒப்பிட்டு பேசுகிற மனோநிலை கொண்ட எழுத்தாளரே! பா.ஜ.கவின் மதவெறியை எதிர்த்து ஒரு கட்டுரை கூட எழுதியதில்லையே ஏன்? அப்படி எழுதும்போதாவது காய்ச்சலோடு எழுதாதீர்கள். இல்லையென்றால், சங்கரமடத்தின் நிர்வாகி என்று காலம் சொல்லும்.
நிறுவனமாக்கப்பட்ட செவ்வியல் தெய்வமும், உழைப்பாளிகள் கும்பிடும் தெய்வமும் ஒன்றல்ல. இப்படியே உங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே போனால் நேரம் இருக்காது. உங்களின் மனோநிலையை இலக்கியத்தின் மூலம் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன். உங்களின் விமர்சனம் தன் உடல் வலிமைக்கு சம்பந்தமில்லாமல் பறந்து பறந்து அடிக்கிற ரஜினி சாரின் படத்துக்கு வசனம் எழுதியது மாதிரி இருக்கிறது.

kones
2009-02-17 08:09:00
s_kones2000@hotmail.com

இருள்களின் புலம்பல்

இருள்கள் அனைத்தும் ஒன்று கூடியுள்ளதற்குக் காரணம் அவற்றுக்கு தற்போது பயம் வந்து விட்டது. களவுகளின் சாட்சியமாக இருந்த அவற்றிக்கு இப்போதுதான் உண்மையிலேயே பயம் பிறந்துள்ளது. தங்களின் ரகசியம் வெளியாகி விட்டதாகவே அவை இப்போது கூக்குரலிடுகின்றன.
....
அனைவரையும் மிரட்டி வந்த இருள்... தற்போது பயத்தால் நடுக்கங் கொள்கிறது. இருளின் மனதில் என்னன்னவோ சிந்தனைகள். துணைக்கு யாரை அழைக்கவென்று புரியாமல் பிதற்றுகிறது. இருளுக்கு அருகாமையில் இருக்கின்றன நட்சத்திரங்கள். ஆனால் அவையெல்லாம், வெளிச்சம் சிந்துகின்றன என்பதால், அதன் மீது இருளுக்கு நம்பிக்கை இல்லை. காரணம் கேட்டால், நட்சத்திரங்கள் சூரியனிடம் இருந்து வெளிச்சத்தை கடன் பெறுகின்றன என்று கூறும் இருள், அதற்காக நட்சத்திரங்கள் சூரியனுக்கு நன்றி பாராட்டுவதே இல்லை என்று புலம்புகின்றன.
...
எப்படியாகினும் இருளின் வாழ்க்கை இடைக்காலம்தான். எப்படியும் சூரியன் வந்து விடும் என்பதை புரிந்து கொண்ட இருள், அதற்குள் எதையாவது குழப்பத்தை உண்டாக்க முடியுமா என முயற்சிக்கின்றன. மெகா போனின் வாயை காதென்று நினைத்து கிசுகிசுவென ரகசியம் பேசுகின்றன. ரகசியம் என்றே நம்பி, அதனை யாரிடமாவது கூறிட வேண்டும் என தலையில் கனமேறி மயங்கி அலைகின்றன. தான் மட்டுமே ரகசியக் காப்பாளன் என்றுக் கொண்டே ரகசியங்களை அனைவரிடமும் சொல்லித் திரிகின்றன.
--
இப்போது இருள்களுக்கு வந்த பயத்துக்குக் காரணம் தன்னைவிட பலசாலியான ஒருவன் வந்துள்ளதாக அவற்றுக்கு கிடைத்த தகவல்தான். அது உண்மைதானா என்று சற்றேனும் எட்டிப் பார்த்த இருள்தான், அதனை முழுமையாகப் பார்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் புலம்பித் தவித்து வருகிறது. இது தெரிந்து கொண்ட குற்றுயிரும், குறையுருமாக ஆங்காங்கே சுற்றித் திரிந்த இருள்கள் அனைத்தும் பயந்துபோன இருளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டன. ஆனால், எது எப்போது காலை வாரிவிடும் என்ற கூடுதலான பயமும் சேர்ந்து கொள்ள, இருள் தற்போது படாத பாடு பட்டு வருகிறது.
...
இருள் எப்போதும் இருளாகவேத்தான் இருக்கிறது. வெளிச்சம் வந்தால் பயந்து பாய்ந்தோடி விடுகிறது.

tamil selvi
2009-02-17 11:09:00
tamilselvi@yahoo.com

Ithu ennada aniyayam, oru pirathikku oru ethir vinai koodave koodathu enbathu eppadi sariyagum? S.Ramakirushnan appadi enna eluthi vittar thavaraga? Idathusari eluthalargal ethai eluthinaalum athu vedhamo? Su. Vengatesan enna oru maha rishiya? Avarai vimarsippathu avvalavu pava kariyama? communist katchi tholargal onnum deva kumarargal illai, appadi avargalukku oru ninaippu iruppathu madiri thondrugirathu.

Sundarrajan
2009-02-18 12:01:00
maratamizhan@rediffmail.com

அன்புள்ள ச. ராமகிருஷ்ணன் அவர்களே வணக்கம்

உங்களுடய காவல் கோட்டம், ஆயிரம் பக்கம் அபத்தம் படித்தேன். நான் இதுகாலமும் தமிழ் இலக்கியவாதிகளை பற்றி வைத்திருந்த கருத்தை உறுதி படுத்தி விட்டீர்கள். அந்த கருத்து என்னவென்றால், "யாராவது ஒரு நல்ல படைப்பு எழுதிவிட்டால் அதை எப்பாடு பட்டாவது கலங்க படுத்திவிடுவது என்பது தான்."
நீங்கள் உண்மைலேயே ஒரு நேர்மையான விமர்சகர் என்றால் உங்களை அழைத்த அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் போயி உங்களுடய கருத்தை பதியவைதிருக்க வேண்டும். இப்படி இணய தளங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு "வீர உரை நிகழ்த்த கூடாது".

உங்களுடய விமர்சனகள் அனைத்தும் சுத்த அபத்தம். எதுவுமே ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த நாவலை முழுவதும் படித்தவன் என்ற முறையிலும், ஒரு இல்லக்கிய விமர்சனங்களை வைப்பவன் என்ற முறையிலும் உங்களுடய விமர்சனங்களை படிக்கும் பொழுது தனி மனித வசையே அதிகம் இருப்பதாக எண்ணுகிறேன். உங்களுடய பொறாமை பொதிந்த முகத்தை காட்டிவிட்டீர்கள். உங்களை ஒரு நல்ல இலக்கியவாதியாக நினைத்திருந்த மக்களுக்கு, உங்களுக்குள்ளும் இப்படி ஒரு மனிதர் ஒளிந்து இருக்கிறார் என்று சொல்லிவிட்டீர்கள்.

காவல் கோட்டம் என்கிற இந்த படைப்பு, பலராலும் ஒரு வரலாற்று நாவல் என்று போற்றப்படுகிறது. ஆனால் நான் இதை வரலாற்று நாவலாக பார்க்கவில்லை, இதை ஒரு வரலாற்றை மிரட்டும் படைப்பாக பார்க்கிறேன். ஏனென்றால் இதுகாலம் வரை வரலாற்று நாவல் என்றால், ஒரு பிரமாண்டம் இருக்கும். சான்டிலேயன், கல்கி போன்றோரின் படைப்புகள் இதைப்போன்ற பிரமாண்டங்களை பட்டியல் இட்டன. “சோழ படைகள் மிகவும் தயாராக இருந்தன, அவர்களுடிய காலாட்படை மதுரை முதல் மாயவரம் இருந்தது, அவர்களுடிய ஐம்பத்தி ஆயிரம் யானை படையும், ஒரு லட்சம் குதிரை படையும் இருந்ததை பார்த்து எதிரி மன்னன் அஞ்சி நடுங்கி புறமுதுகு காட்டி ஓடினான்" போன்ற வார்த்தை ஜாலங்களே நிறைந்து இருந்தன. உண்மையில் கோட்டைக்குள்ள முழுவதும் இருபத்தி இயயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இதற்க்கு முன்னால் வந்த அத்துணை வரலாற்று படைப்புகள் எல்லாம் போர் வீரர்களை போருக்கு அனுப்பிவிட்டு அந்தபுரங்களுக்கு சென்ற மாமன்னர்களை பேசியது. ஆனால் சு. வே அவர்களின் இந்த படைப்பு சாதரண மக்களை பேசியது. ஒரு சண்டையில் காயம்பட்டு இருக்கிற தன்னுடய கணவனிடம், வேல் கம்பை எடுத்து கொடுத்து " உசிரு இருக்கிற வரைக்கும் கருப்பு காவல்ல களவு போகக்குடது" என்று சொன்ன சாதரண சடச்சிய பற்றி பேசுகிறது. இந்த அணுகுமுறை தான் வரலாற்றை மிரட்டுகின்ற நாவல் என்ற பெயர் எடுத்து கொடுத்து உள்ளது.

நீங்கள் குடுத்து இருக்கிற ஒரு ஒரு வார்த்தைக்கும் என்னால் பதில் எழுத முடியும், ஆனால் நீங்கள் நாவலை விமர்சனம் செய்யவில்லை, அந்த படைப்பாளி மீது உள்ள பொறாமையே வார்த்தைகளாகி வெளிவந்துள்ளது.

ஒரே ஒரு உதாரணத்திற்கு உங்களுடய "குளறுபடி இரண்டை" எடுத்து கொள்ளுவோம்: “மீனாக்ஷி, சந்தா சாகிபால் ஏமாற்றப்பட்டு நஞ்சு குடித்து உயிரை விட்டாள்” என்பது தான் வரலாறு. அதை சாமிநாத ஐயர் எழுதினாலும் சரி, சு.வே எழுதினாலும் சரி, அப்படி தானே எழுத வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது? வரலாற்றை மாற்றி எழுதுகிற "ஆதிக்க சக்தி" இல்லை சு.வே அவர்கள்.

ஆகவே நானும் உங்களை போல் ஒவ்வரு வார்த்தைக்கும் பதில் எழுதி என்னுடய தரத்தை குறைத்து கொள்ள விருப்பமில்லை.

சு.வே அவர்களின் படைப்பில் சாதியை தூக்கி பிடித்திருப்பதாக உள்ளிர்கள், நீங்கள் தமிழ் நாட்டில் தான் உள்ளிர்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. தமிழகத்தை அதுவும் தென் தமிழகத்தை பற்றி எழுதும் பொழுது சாதியை பற்றி எழுதாமல் எப்படி எழுத முடியும்.?

நீங்கள் நிறைய இடத்தில், இது வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு என்று எழுதி உள்ளிர்கள், வரலாறு என்பதே அதுதானே, இது கூடவா தெரியவில்லை. ஆனந்த பாண்டியனை காப்பி அடித்து உள்ளதாக கூறுகிறிர்கள், ஒரு உண்மை என்னவென்றால் ஆனந்த் அவர்களுக்கு முன்னாலேயே, சு.வே அவர்கள் களப்பணியை முடித்து விட்டார்கள் என்றும், சு.வேவின் பல விவரணைகள் தனக்கு உதவி உள்ளதாக ஆனந்த் அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டு உள்ளார்கள்.

இன வரைவியல் கண்ணோட்டத்தில் இதை பார்த்தால், முனைவர். சலபதி அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிரரர் "கள்ளர்களை பற்றி ஒரு அற்புதமான ஆராய்ச்சியை மேற்கொண்டு, ஒரு படைப்பை படைத்த லுய் டுமொன்ட் சு..வேவிடம் பாடம் படிக்க வேண்டும் என்று". இனவரவியலின் ஆசான் சிவா சுப்ரமணியன் அவர்கள், இது ஒரு பிரமாண்டமான படைப்பு என்று பதிவு செய்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் இந்த நூலை முழுவதும் படித்தவர்கள்தான். இதில் இருந்தே நீங்கள் மட்டும் தான் ஏதோ வெறுப்போடு இதை படிடீர்கள் என்ற வார்த்தை பொய் ஆகிறது..

இந்த நூலை பழிக்கிற, மன்னிக்கவும், பொறாமையில் பழிக்கிற உங்களை போன்றவர்களுக்கு பதில், மாவோ சொன்னது தான்.
"மக்களின் எதிரிகள் எதை புகழ்கிரர்களோ அதை நாம் இகழ வேண்டும், மக்கள் எதிரிகள் எதை இகழ்கிரரோகளோ அதை நாம் புகழ வேண்டும்". ஏன் என்றால் இது மக்கள் காவியம், மக்களை பற்றி வந்த காவியம், ஆகவே இதை இகழ்கின்றவர்கள் மக்களை இகழ்கிறார்கள்.

இருட்டுக்கும், இருளுக்கும் உள்ளை வித்தியாசத்தை இவர் காண்பிக்கிற விதம், களவுக்கும் திருட்டுக்கும் உள்ள வித்தியாசம் எப்படி கையாள பட்டிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுதும், களவு என்பது ஒரு நெறிமுறைக்கு உட்பட்டது என்பதும், இருள் என்பது அந்த ஒரு இன குழு மக்களிடம் எப்படி பார்க்கப்பட்டது என்பனவற்றை படைத்திருப்பது, அவருடய இன வரைவியல் பார்வைக்கு ஒரு சலாம் போட வைக்கிறது.

உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் அவர் எழுத வேண்டும் என்றால் அவர் ஏன் தனியாக ஓர் படைப்பை படைக்க வேண்டும்? உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் எழுதுங்கள் அவரும் எழுதி இருக்கிறார், வாசகர்கள் தீர்மானிக்கட்டும் எது நல்ல படைப்பு என்று?

உங்களிடும் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இந்த எதிர்வினையை உங்களுடய இணையத்தில் வெளிஇடவும்.

உங்களை போன்ற "இலக்கியவாதிகள்" உள்ள இந்த காலகட்டத்தில் இப்படி பட்ட ஒரு மாபெரும் நாவலை படைத்தற்காக சு. வே அவர்கள் மீது வருத்த படுகிறேன்.

அன்பே இல்லாமல்

சுந்தரராசன்

sakthi
2009-02-18 02:14:00
msakthi@gmail.com

கொபம் கள்ளாஸ மீதா? காவல் கொட்டம் மீதா? உபபாண்டவாஸ படைத்த உண்மத்தரின் பிதற்றல்
எம்.சக்திஃ கொவை
'ஆத்திரக்காரனுக்கு பஜத்தி மட்டு' இதன் அhஸத்தத்தை (!hஸவதாரி வருடம் மாசி மாதம் 4 ம் தெதிஃ !பாஸ 20 நள்ளிரவஜ 11 மணி) இதற்கு மெல் மிகச்சரியாக விபரம் டிசால்ல எ!;ரா பொல் நான் தொஸந்த படைப்பாளி அல்ல. உ';கள் டிமார்pயிலஸ டிசால்லுவதானாலஃ; நான் காவல் கொட்டம் வாசித்த சாமான்யன் மட்டுமெ. ச.தமிர்; டிசல்வனைப் பொல மிலிட்டரிக்காரனுமல்ல. பரமசாமானியன். ஊhஸ சுற்றும் பஜராணத்தை உருப்பொட்டு வாசித்து எ!;ரா மெல் மரியாதை டிகாண்டவன். இன்றுதான் ஓhஸ உண:மை உரைக்கிறதுஃ ஊhஸசுற்றிய பஜராணம் வாசிக்காதிருந்திருந்தால் ஒரு வெளை உருபட்ழருக்கிலாம் தான்.
இருபத்து ஷன்று வருடஃ அனுபவத்தில் நீ';கள் பன்னிரண்டு நாள் பழத்த நாவலை ஐந்தெ நாளில் தூக்கம் டிதாலைத்து பழத்து விட்டென். டிசம்மாந்து பொன வாசிப்பனுபவம் தான் ஏற்பட்டது. (ஏடினன்றால் நான் எ!;ரா பொல் முன்னனி நாவல் ஆசிரியன் அல்லஃ டிவ';கடெசன் பொட்ழக்கு வந்து விட்டாரெ? ஏன்று வயிற்டிறரிச்சல் படுவதற்கு)
சாலையொரம் சாட்டையால் அழத்துக் டிகாள்வiதைப் பாhஸத்த எ!;ராஃ ஷச்சு முட்ட குழத்து விட்டு வசைமாரிகளால் முகம் சுளிக்க வைக்கும் மனிதனைப் பாhஸத்தது இல்லையா? அது பொன்றதெ உ';கள் வசைமாரிஃ எ!;ராவிடம் நாவலைப் பழத்து பஜலம்பிய மகானுபாவாஸ யாhஸ எனப் பஜரிந்து டிகாள்ள முழயவில்லை. (தமிர்கத்தில் இன்னும் சில வயிற்டிறரிச்சல் பார்ட்ழகள் உண்டு பொல).
எனது முதல் வாசிப்பெ சாண்ழல்யன்ஃ விக்கிரமனின் பராக்கிரம சரித்திர நாவல்கள் தான். அதிடிலல்லாம் டிதன்படாத சாமான்யர்கள் கதாநாயகாஸகளாக உலாவருகிறாhஸகளெ காவல் கொட்டத்தில்? ச்செஃ உ';களிடம் பொய் ஊhஸ நியாயம் பெச முழயஜமா என்ன? நூற்றாண்டுகளாக தமிர்கத்தின் ஷலை முடுக்குகளில்ஃ சாவஜ வீடுகளில்ஃ மாhஸகர்pப் பனிப்டிபாபுதில் மகாபாரதமும்ஃ இராமாயணமும் கிராமம் தொறும் உலா வருகிறதெழூ மல்லா';கிணறிலும் உண்டுதானெ? "வுரை ஏறிக்கொர்p பிழக்க முழயாதவன்ஃ வானத்தைக் கீறி வைகுண்டமா பொவான்?.
மதுரைக் கடைகளில் எக்!;ட்ரா லாhஸகூ; பொல தமிர்pனி எ!;ராவஜக்கும் சை!; வைத்திருந்ததாமெ? அதற்கும் பொட்ழ வந்து விட்டதெ? பாவம்ஃஎன்ன டிசய்வீhஸ? மாநாட்டுப் பந்தலில் கீற்று டிதரியாமல் வெசூ;ழ விரித்து ஒப்பனை டிசய்தவன் டிதார்pல்நுட்பம் டிதரியஜமா எ!;ரா? (உ';களிடம் பொய் கெட்டெனெ? அது உiர்க்கும் மக்களின் ஒப்பனையல்லவா?)
ஊhஸதொறும் விர்h எடுக்கிறாhஸகள் என்று வெறு கவலைப்படுகிறீhஸ ஏன்? உ';களைச் சீந்துவாhஸ யாருமில்லையா? எதுடிவான்றும் சு.டிவ.ஏற்பாடு டிசய்த விர்h இல்லையெஃ உiர்க்கும் மக்களுக்காக காப்பியம் படைத்தொனுக்குஃ உiர்ப்பாளிகள்ஃ அவாஸகளின் தொர்hஸகள்ஃ டிகாண்டாடுகிறாhஸகள்ஃ இன்னும் வுத்தாடுவாhஸகள். உ';களுக்குத்தான் பிரச்சாரம் டிசய்ய உயாஸ குழயினாஸ உள்ளனரெ? பிறகு ஏன் டிபாறாமைத் தீயில் டிபாசு';குகிறீhஸ.
இன்னும் டிபாறாமைப்பட ஒன்று டிசால்கிறென்ஃ நாவலைப் பழத்த சாமான்ய வாசகன்ஃ நான் அறிய டிசாந்த டிசலவில் 10ஃ 20 என வா';கித் டிதரிந்தொhஸக்டிகல்லாம் தருகிறாhஸகள் கொவையில்! டிதரியஜமா? கொவை "hனி வுட டிசான்னாhஸ "நான் அறிய தமிர்;நடை டிகா";ச எபுதுவொரில் இதுவரை எ!;.ராமகிருசூ;ணன் மட்டும்தான். சு.டிவ';கடெசனின் தமிர்;நடை அவரையஜம் மி";சிவிட்டது என்று" ஒருவெளை இந்த விசயம் உ';களுக்கும் எட்ழவிட்டதொ? நா";சில் நாடனைத் டிதரியஜமா உ';களுக்கு? அவரும் 10 பெருக்கு பஜத்தகம் (காவல் கொட்டம்) வா';கிக் டிகாடுத்தாராம்.
அவரும் தமிர்கம் அறிந்த படைப்பாளிதான். ஆனால் மாhஸக்சி!;ட் கட்சி இல்லைதானெ? பிறகு அவருக்கு வந்த அந்த ரசனைஃ அவாஸ டிபாருத்திப் பாhஸத்த நாவலின் உண்மைகள்ஃ உ';களால் உணர முழயவில்லையெ? உணரப் பிழக்கவில்லையா?
நாவலக்கு ஒரு டிவளியீட்டு விர்hதான் மரபா? ஓழூ நீ';கள் மரபஜகளின் காவலரா? இப்பொது தானெ விசயம் பஜரிகிறது. மன்னாஸகளின் அழடியாற்றி வந்த மரபஜகள்ஃ மக்களை நாழத் திரும்பஜகிறதெ? என்ற தவிப்பஜதான் இல்லையா? நாவல் விற்றுத் தீருமளவஜ இல்லை ஐயாஃ சாமானியனைப் பிழத்த பீடை டிதாலையஜமளவஜ டிதாடரும் பொதுமா? தமிர்; இலக்கியச் Nர்லில் என்ன அபத்தம் வெண்டுமானாலும் நடக்குமொ? ஓழூ நீ';கள் உ';களை நினைத்துச் டிசால்லிக் டிகாண்ழுராக்கும்.
சில பாhஸவைக்கொளாறுகள் ழூ
இது டிரண்டும் டிகட்டான் வகை என்கிறீhஸ. பிறகு முதல் பகுதி நாயகஸக மன்னாஸ வரலாறு என்கிறீhஸ. ஓழூ உ';கள் பாhஸவையில் சரித்திரமும்ஃ வரலாறும் வெறு வெறு பொல – உ';கள் கையில் கொனாhஸ தமிர்ஸ உரை இல்லை பொலும். உ';களுக்கு நாவல் மெல் கொபமா? கள்ளாஸ மெல் கொபமா?
சரிஃ கம்மவாருக்கும்ஃ டிகால்லவாருக்குமான சாதி உட்பிரிவஜக் குர்ப்பத்தை சரி டிசய்யத்தான் நீ';கள் பிறப்டிபடுத்தீரொ? மாலிக் காப{ரைப் பற்றி உ';களுக்கு நிறைய டிதரிந்திருக்கிறது. நாயக்காஸ வரலாற்றின் டிவளிச்சமும் பஜரிந்திருக்கிறது. கள்ளாஸகள் மெல் கடு';கொபமும் உண்டு பொல் டிதரிகிறது. (நீடிரன்ன டிசய்வீhஸ பாவம்ஃ நீ';கள் பிறந்த பகுதியில்ஃ உதிரத்தில் ஊறிய பர்டிமார்p (கள்ளடினன்றால் உண்ட வீட்ழல் முகடுபாhஸப்பான்) என்று உ';கள் டிபரியவாஸகள் டிசால்லித் டிதாலைத்திருப்பாhஸகள். சரித்திர நாவலின் இலக்கணம் அறிந்த டிபரியவரெஃ அதை உள் வா';கிய உத்தமரெஃ இலக்கியத்தின் பணி எது என்று டிதரியஜமல்லவாஃ பிறடிகன்ன பெனாவை எடுத்து ஒரு கம்மவாhஸ கொட்டமாவது படையஜ';கள்.
டிகாலம்பியா பல்கலைக்கர்கத்தில் பணியாற்றிஃ சிறப்பஜ நிதி நல்கை டிபற்று (யாரிடம்!) அவரது கட்டுரை உலக அர';கில் (இ';கல்லழூ) மிகுந்த கவனம் டிபற்றுவிட்டதாம். அந்த ஆனந்த் பாண்ழயன் தரவஜகளெ ஆதாரமாக்கும். அதற்கு நன்றி டிசால்லவில்லையாக்கும். பொகிற பொக்கைப் பாhஸத்தால் "அஃ ஆஃ இஃ ஈ" என டிசால்லிக் டிகாடுத்ததால்தானெ தமிர்; எபுத முழந்தது. அந்த ஆசிரியரை மறந்த பாதகத்தையஜம் டிசய்து விட்டாhஸ என்று டிசால்லு';களென்ஃ ஆதாரத்தரவஜகள் இருந்தால் இப்பழ கள ஆய்வை வைத்தும் எபுதக்வுடாது என்பீர் என்ன டிசய்திருக்கலாம்? பெசாமல் எ!;ராவிடம் பஜ+@ப் எழட்டராகி பொய்விடலாம் டிவ';கடெசனஃ; இல்லையா? (பாவம்ஃ அப்பழயாவது தவறு டிசய்தால் கை வாக்கில் இரண்டு டிகாட்டு வைத்துஃ கொபத்தை தணித்துக் டிகாள்வாhஸ).
டால்!;டாயின் "பொரும்ஃ வார்;வஜம்" ஷலம் என்ன டிசால்ல விளைகிறீhஸ. உட்காhஸந்த இடத்திலிருந்து கற்பனை ஷலமெ ஓhஸ நாவல் எபுத வெண்டும் என்கிறீராஃ அப்பொதும் என்ன டிசால்வீhஸழூ (Nனியத்திலிருந்து எப்பழ சரித்திரம் படைக்க முழயஜம். பல வரலாறுகளைத் தெழப் பாhஸக்க வெண்டும். அந்த உiர்ப்பிக்கு துப்பில்லை என்பீhஸ. சொரட்ஃ உபராஃ உச்சாலியா பொன்ற ப";சாபிஃ மராத்தி நாவல்களை பழத்த எவருக்கும் இது அபத்தம் என்பது டிதரியஜம் என்கிறீhஸ. பிறகு ஏன் ஐயா சாமான்யன் எவனும் பழத்ததாக டிதரியவில்லை என சலித்துக் டிகாண்ழுhஸ.
குளறுபழ ஒன்றில் மாலிக்காப{hஸ படைடியடுப்பை கற்பனை டிசய்ய முழயவில்லை என்கிறீhஸ? ஆனாலஸ நாவலை வாசித்த எனக்கொ 25 வயது கருப்பனின் காவல் வீரமும்ஃ நிறைமாத காஸப்பினி சடச்சியின் "கருப்பன் உள்ளவரை களவஜ பொகக் வுடாது?" என்ற காவல் தாஸமமும் தான் நினைவில் நிற்கிறது. (அய்யய்யொஃ எ!;ராஃ நாவலில் எந்த கதாபாத்திரமும் டிந";சில் நிற்கவில்லை என்றாரெ? டிகா";சம் உளறிட்டெனொ?
குளறுபழ 2 ல் எ!;ரா எடுத்தாண்ட பஜத்தக';களையஜம்ஃ அதன் பக்கத் தகவல்களையஜம் பாhஸத்தால் சிரிப்பஜத்தான் வருகிறது? பொகிற பொக்கில் பாhஸத்தால் ஒவ்டிவாரு வாhஸத்தையையஜம் தமிர்ஸநாட்ழல் பாடநூல் பஜத்தக';களில் உள்ளது. அதை ஒன்றாம் வகுப்பிலிருந்து பழத்ததை வைத்துதான் இவ்வளவஜ டிபரிய நாவல் படைத்தாhஸ என்பீரொ? கட்ழ';ஃ பெ!;ழ'; வெலையாக்கும்ஃ இதை விமாஸசித்தால் நூறு பக்கமாகுமாம்ஃ அடடாழூ நாவலைப் பழக்க பன்னிரண்டு நாள் இல்லைஃ குறை கண்டுபிழக்கஃ அதற்கு ஆதாரம் தெடஃ ஆகியிருக்கிறது. (அய்யய்யொழூ அடுத்து ஆவணக்காப்பக மெலாளாஸகள் உசூhhஸழூ)
சு. டிவ. திருமலை நாயக்கருக்கு உதவிய இத்தாலியரைப் பற்றி வுறவில்லையாம்ஃ எதற்கு எ!;ரா? அதைத்தான் கண்டுபிழக்க நீhஸ இருக்கிறீரெ? "மiர் டிபய்த இரவில் குளிரிருக்காது" என்பது பொல் நாவலில் நிறைய இட';களில் துருத்திக் டிகாண்டுள்ளதாம்ஃ அப்பழயா?
"மர';களைக் டிகாண்டு கொட்டை கட்ழனால் அதனுள்ளெ டிநருப்பிருக்கும் என்று டிதரிந்தவனுக்குஃ எதைக் டிகாண்டு கொட்டை கட்ழனாலும் அதனுள்ளெ Nர்ஸச்சி மறைந்திருக்கும் என்று டிதரியாமலெ பொய்விட்டது" என்று வாஸணனையில் ஓhஸ உண்மைக் கருத்துரு இருக்கிறதெ? அதற்கும் எ!;ரா ஏதாவது பஜத்தகம் வைத்துள்ளீhஸ தானெ?
குளறுபழ 5- ல் நாகமநாயக்கருக்கு எப்பழ இன்றைய தமிர்ஸ டிதரியஜம் என்று கெட்கிறீhஸ பொலும்ஃ பரவாயில்லை. அன்றைய டிதலு';கில் அவாஸ எபுதினால் நீ';களும் அவரும் மட்டும் பழத்துக் டிகாள்ளலாம்ஃ பிரச்சனை இல்லை பாரு';கள்.
நாவலில் முன்னூறு ஆண்டுக்கு முந்தைய வணிகாஸகள்ஃ விர்hக்கள்ஃ பர்";சட';குகள்ஃ பந்த டிவளிச்ச இரவஜகளும் டிதளிவாக இல்லை என்கிறீhஸ ஏன்? உ';கள் பிரதியில் டிவள்ளைத்தாள்களும் அதிகமாக வந்து விட்டதாக்கும்.
குளறுபழ 8 ல் டிசவ்வியல் டிதய்வ';களை ஒப்பிட்டு நாட்டாhஸ டிதய்வ நம்பிக்கைகளைக் டிகாண்டாடுகிறாhஸ என கண்ழக்கிறீhஸஃ பரவாயில்லையெ! சமீபகாலமாக ப{நூல் சகவாசம் அதிகம் பொலும்ஃ பொட்டுக் டிகாடுக்கும் வெலையஜம் கச்சிதமாக வருகிறது. சு.டிவ.வின் கட்சியினரிடம் டிசால்லி கட்டம் கட்ழவிடுவென்ஃ என மிரட்டுகிறீராக்கும். கவனிக்காமல் கிடக்கும் காட்டுக் கொவில்தானெ என யாரும் கும்பிட்டு விட முழயாதாக்கும். சமகால நாட்டாhஸ டிதய்வ';களைக் கும்பிடக்வுட வெண்டாம். கிடா டிவட்டுக்கு வுட எ!;ரா பொயிருக்க மாட்டாhஸ பொல. அவ்வளவஜ பி!p.
மதுரைக் கொட்டை இழக்கப்படும்பொது எப்பழயிருந்தது? மக்கள் எவ்வளவஜ பொஸ? ராயல் ஆசியாட்ழக் டிசாசைட்ழயின் ரிக்காhஸட் வால்ய{ம்ஃ மதுரை மாவட்ட மிசூpனரி வரலாறு என்று உதாரணம் வெறு. (இப்பழத் தெழக் டிகாண்ழருந்தால் 12 நாள் என்னஃ 12 வருசூம் ஆனாலும் ஆகும்).
அய்யாஃ எ!;ரா அவாஸகளெஃ தாதுவருசப் ப";சம் குறித்த பதிவஜஃ அதனால் ஏற்பட்ட பஜலப்டிபயாஸவஜஃ கட்டாயக் குழயெற்ற முகாம்ஃ ஊமத்துறையின் ப';கு பற்றிய ஒரு பக்கம்ஃ பொhஸக்களத்திலிருந்து மலக்குர்pக்குள் இறக்கப்பட்ட சக்கிலியாஸஃ கட்டாய குழயெற்ற முகாம்ஃ ஊமத்துரையின் ப';குபற்றிய ஒருபக்கம்ஃ பொர்க்களச் சாதியாயிருந்து மலக்குர்pக்குள் இறக்கப்பட்ட சக்கிலியாஸ சரித்திரம்ஃ காவல் முறை ஒர்pத்து காவல் நிலையம் அமைக்க ஆ';கிலெயன் பட்ட ஐம்பதாண்டு கசூ;டம். Nர்;ச்சிஃ என எதுவஜமெ உ';களுக்கு சரித்திராமாய்ஃ உண்மைகளாய்ஃ படவில்லை பொலும்.
சரித்திரத் தகவல் என்றால் தரவஜகள் திருடப்பட்டது என்கிறீhஸஃ உண்மையிருந்தால் கற்பனை வளம் இல்லை என்கிறீhஸஃ டிகால்லவாருஃ கம்மவாரு ப';கு குறித்து டிசான்னால் உட்சாதிப்பகையை தூண்டுகிறாhஸ என்கிறீhஸஃ கள ஆய்வஜ டிசய்தால் அப்பழயெ தரக்வுடாது எல்லாருக்கும் நன்றி டிசால்லவில்லைஃ அயல்நாட்டு பல்கலையில் நிதியஜதவி டிபற்று ஆய்வஜ டிசய்யவில்லை என்கிறீhஸ. சரித்திர வாஸணனை இருந்தால் சினிமா உல்டா என்கிறீhஸஃ ஒரு வெளை தான் திரட்ழய ஆதாரத்தரவஜகள் குறித்து சு.டிவ.எபுதினால் ஒரு கெ!; பொடு';களென்ஃ அதை வைத்து டிகா";ச நாளாவது பிரபலமாகலாம். உ';களுக்கு கள்ளாhஸகள் மெல் கொபமா? அல்லது காவல் கொட்டம் நாவல் மெல் கொபமா? சி.ழ. ஆக்ட் அத்தியாயத்தில் நீ';கள் டிசால்லுகிற கீர்க்குயில்குழயில் (நாவலில் தூதனூhஸ) அது அமலான விதம் தானெ இருக்கிறது. இந்தியாவில் 160 சாதிகளுக்கு அது அமலான விதம் வுற வெண்டுமானாலும் வுறலாம். பாவம் அதைப்பழக்க உ';களுக்கு 160 டிகூன்மம் வுட பொதாதெ ஐயா? ஒருவெளை உ';களை கசூ;டப்படுத்தக் வுடாது என்ற நல்ல எண்ணத்தில் விட்டு விட்டாரொ டிவ';கடெசன்? வெலராமஷாஸத்தி டிவளிப்படுத்திய கொபம் கள்ளாஸகளுடையதா? மறவாஸகளுடையதா?
பொகிற பொக்கைப் பாhஸத்தால் நீ';கள் கள்ளருக்கும்ஃ மறவருக்கும் உட்சாதிச் சண்டையை இபுத்து விடுவீhஸகள் பொல? 'உக்கிரமான டிவளிப்பாடு' என்றால் என்ன என்பதற்கு வெறு இலக்கணம் வுட வைத்திருப்பீரொ? பாதிரிமாhஸ கழதம் டிவற்றுத் தகவல்கள் என்கிறீhஸகளெஃ அப்பழயானால் விசய "hனத்துடன் டிவ';கடெசன் கழத';களை மாற்றி எபுத வெண்டும் என்கிறீரா? நாயக்காஸகளால் வார்;வஜ டிபற்றவாஸகள்தான் கள்ளாஸகள் என்ற சித்தரிப்பதாகக் வுறுகிறீhஸகளெழூ மதுரை நகரக்காவலை நாயக்க மன்னாஸ தரவில்லை என்று டிசால்கிறீhஸகளா? அதற்கும் ஏதாவது ஆதாரம் வைத்துள்ளீரா? களப்பிராஸ காலப் படைடியடுப்பில் காஸநாடகப் பிரதெசத்திலிருந்து கள்ளாஸகள் வந்ததாக சான்று ஒன்று உள்ளதெ? அதை மறுத்துவிட்டு வெண்டுமானால் பஜதிய சான்றுகளைக் காட்டு';கள்ஃ நா';கள் பஜரிந்து டிகாள்கிறொம்.
இப்பழ வன்மம் டிகாண்டு வாளஸவீசும் அளவஜக்கு நாவலில் என்னதான் உ';களைப் பாதித்துவிட்டது. சகபொட்ழயாளனை சகித்துக் டிகாள்ளாத டிபாறாமைதான் டிவளிப்படுகிறது. என்னடிசய்வதுஃ காவல் கொட்டம் நாவலை வாசித்துஃ வாசிப்பனுபவம் ஏற்பட்டதால் இனிமெல் உபபாண்டவம் வுட உதாசீனம் டிசய்யப்படும் பொலஃ பரவாயில்லை. மாற்றுமுகாம் டிசல்ல துண்டு பொட்டு இடம் பிழத்துக் டிகாள்ளு';கள். இடதுசாரி எபுத்தாளன் ஒருவன் படைப்பஜ வந்தால்ஃ அதுவஜம் அபுத்தமாக இருந்தால்ஃ பலரும் ஏன் பதறுகிறீhஸகள் என்று பஜரியவில்லை?
23 ஆண்டுகால வாசிப்பில் நீ';கள் எந்தக் குப்பையையஜம் வாசிக்க வில்லையாக்கும். ஆர்ஸமணத்தெடல்ஃ பின் டிதாடரும் நிர்ல்கள்ஃ பித்தெறியவரின் பிதற்றல் என தமிர்; இலக்கிய உலகு எத்தனையொ கண்டுள்ளது. ஆனால்ஃ நீ';கள் மட்டும் கண் ஷழக்டிகாண்ழுராக்கும். காவல் கொட்டம் பாhஸத்தால் காய்ச்சல் வரும் என பயம் காட்டுகிறீரொ? வாசித்தறிந்த பல படைப்பாளிகளைஃ எளிய சாமானிய வாசகாஸகளைப் பாhஸத்து விட்டென். அவாஸகள் நன்றாகத்தான் உள்ளாhஸகள். இடம் விட்டு நகர வெண்ழயவாஸ நீ';கள் என்பதால்ஃ உ';களுக்கு காய்ச்சல் வருவது நியாயம் தான். ஒன்றைப் பஜரிந்து டிகாள்ளு';கள். ‘விதி வலியது’ என்று நீ';கள் நம்பஜ';கள். 'சதி' யின் வலிமையை நா';கள் பஜரிந்து டிகாள்வொம்.
காவல் கொட்டம் நாவலை விவரம் டிதரியாமல் பழத்து விட்டதாக உ';களால் பாராட்டு டிபற்று விட்டென். எனவெ தான் அந்த 'நன்றி'க் கடனை தீhஸக்க வெண்ழயதாகிவிட்டது. விகடனுக்கெ விருது தரத்தகுதி வாய்ந்த வித்தகரல்லவா நீ';கள். பரவாயில்லை கடைசியில் உண்மையைத்தான் ஒத்துக் டிகாண்ழுhஸஃ ஆம் எ!;ரா.
"மரண வாக்குஷலத்தில் எப்பொதுமெ உண்மையாகத்தான் டிசால்வாhஸகளாம்" குற்றவியல் சட்டமெ டிசால்கிறது. நீ';களும் அதுபொல இறுதியில் உ';களையஜம் அறியாமல் ஒத்துக் டிகாண்டதற்கு நன்றி. "இது டிவ';கடெசனின் முதல் நாவல் என்கிறாhஸகள்ஃ அது இன்னமும் பயத்தை அதிகப்படுத்துகிறது" சத்தியமெவகூயதெ பாhஸத்திருக்கிறீராஃ உ';கள் பஜதிய நண்பாஸகளைக் கெளு';கள்ஃ விளக்கம் வெண்டுமானால் டிகூயமொகன் வுட டிசால்வாhஸ. உ';கள் பயம் சரிதான்ஃ முதல் நாவலெ இப்பழ என்றால்ஃ நீ';கள் எப்பழ இனிமெல் தாக்குதல் பிழக்கப் பொகிறீhஸ? உ';கள் பயம் நியாயம் தான்.
எ!;. ராமகிருசூ;ணன் அவர்களெழூ
ஒவ்டிவாரு வினைக்கும் சமமான எதிhஸவினை உண்டாமெ? அதையாவது உண்மை என நம்பஜவீhஸகளா? அறிவியலைப் பஜறந்தள்ளினால்ஃ அறிவாhஸந்தாhஸ உம்மைப் பஜறந்தள்ள வாய்ப்பிருக்கிறது என எண்ஙகிறென் 'சாமானியன் தானெ?' என தாண்ழப்பொனாலும் ச';கடம் ஒன்றுமில்லை ஐயா. சா!;திரம் அறிந்தொhஸஃ ஆராதிப்பொhஸ உம்மை அரவணைத்துக் ட

புதூர் சிபி
2009-02-18 02:51:00
pudursiphy@gmail.com



தமிழகத்தில் நாவல் இன்னும் தமிழில் வரவில்லை என்ற கூக்குரல்கள் ஓய்ந்தபாடில்லை. ஞானபீடங்களும், சாகித்ய அகடாமிகளும் வழங்கும் விருதுகள் குறித்த விமர்சனங்களும், அரசியல் காழ்ப்புணர்வுகளும் குறைந்தபாடில்லை.

அத்தகைய வெளிப்பாடு தான் ராமகிருஷ்ணனின் விமர்சனம் என்ற பெயரில் வெளியான பதிவு. நாடோடி வாழ்க்கையை விட்டு குளுகுளு அறையில் கதைவிவாதத்தில் ஈடுபட்டு வந்த ராமகிருஷ்ணனை மீண்டும் பல தரவுகளைத் தேடி மீண்டும் நாடோடி வாழ்க்கை தள்ளிய வகையில் சு.வெங்கடேசனின் நாவல் வெற்றி பெற்றுவிட்டது என்று அர்த்தம்.

இடதுசாரி எழுத்தாளன் இப்படி எழுதலாமா என்ற கேள்வி எழுப்பும் ராமகிருஷ்ணன் என்ன கருத்தியல் கொண்டுள்ளார் என்பதை இதுவரை சொல்லவில்லை. அவருடைய கதையில் வெளியான "ஆல்பம்" படம் இடதுசாரி மனோபாவம் கொண்ட இளைஞன் ஒருவன், காதலிக்காக கொள்கையை விடுவதாக சித்தரிக்கப்பட்டது. அவர் தற்போது இடதுசாரி கட்சி குறித்து கவலைப்படுகிறார். என்னே அக்கறை !

பிறந்த குழந்தை எடுத்தவுடன் தவக்கும். பிறக்கும் நிற்க முயற்சிக்கும். அதன் பிறகு நடக்கும். சு.வெங்கடேசனின் முதல்நாவல் முயற்சி என்பது நிற்க முயற்சி செய்வதற்கான குழந்தையின் முயற்சி. நிற்க முயற்சிக்கும் குழந்தை தவறி விழும் போது பெற்றோர் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களும் தாங்கிப்பிடிப்பது தான் மரபு. இருபத்தி மூன்றாண்டு கால இலக்கிய அனுபவம் வாய்ந்த ராமகிருஷ்ணன், சக படைப்பாளியின் முதல் முயற்சிக்கு உற்சாகமூட்டாவிட்டாலும், ஊறுவிளைக்காமல் இருந்திருக்கலாம். "காவல்கோட்டம்" சரித்திரமும் இல்லை. நாவலும் இல்லை என கருத்துக்கந்தசாமி போல தனது எண்ணகிலேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்பு நண்பர் ராமகிருஷ்ணன், இந்த நாவலை காய்ச்சலோடு படித்தார் என்று எழுதியிருந்தார். உண்மை தான். உள்ள காய்ச்சலோடு தான் படித்துள்ளார்! அவருக்கு வாழ்த்துக்கள்.

suriya
2009-02-18 12:54:00
suriya_1984@yahoo.co.in

plagiarism
Content scraping is a phenomenon of copy and pasting material from internet websites, affecting both established sites ,worksand blogs.

Free online tools are becoming available to help identify plagiarism , and there is a range of approaches that attempt to limit online copying, such as disabling right clicking and placing warning banners regarding copyrights on web pages. Instances of plagiarism that involve copyright violation may be addressed by the rightful content owners sending a DMCA removal notice to the offending site-owner, or to the ISP that is hosting the offending site.

It is important to reiterate that plagiarism is not the mere copying of text, but the presentation of another's ideas as one's own, regardless of the specific words or constructs used to express that idea. In contrast, many so-called plagiarism detection services can only detect blatant word-for-word copies of text.
Kaaval koatam is a latest tamil example

Indra
2009-02-18 01:22:00
indrani@gmail.com

Its just the history of a school text book. Many historical facts are baseless and with errrors. I dont know how these facts are deciphered or if we ask questions they might even say this is pure fiction. any how not to waste time which is precious.
How ever atleast one sq.km of forest would have been razed down for this book. Every literary work whould have a basic sincerity which should make an appeal and chemistry in the reader. this text lacks the basic appeal.

madhurai kannan
2009-02-18 07:29:00
mad_kannan@yahoo.com

பாப்பாபட்டி- கீரிப்பட்டியில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியவர் என அறியப் படுகிற மதுரையின் முன்னால் மாவட்ட ஆட்சியர் இப்பொழுது மும்மரமாய் மற்றோரு காரியத்தில் ஈடுபட்டுள்ளார். அது இந்த தேர்தலை 12 ஆண்டுகள் நடத்தவிடாமல் செய்த கள்ளர்களின் வீர வரலாற்றுக்கு பரப்புறையாற்றூம் வேலை. காவல் கோட்டம் நாவலின் அனைத்து விழாக்களிலும் அவர் தான் முதல் ஆஜர்.
அக்டோபர் 30 ஒரு நாள் அயே மதுரை மக்களால் சகிக்க முடியவில்லை, தேவர் அன்று சட்டம் ஒழுங்கை சமாதியிலிருந்து எழுந்து வந்து தன் கையில் வைதுக்கொள்கிறார், காவ்யா பதிப்பகம் தொடர்ந்து தமிழினியும் இப்படி தேவம்மார் துதிபாடலில் ஈடுபடுவது காலத்தின் அவசியதானா என்பதை சிந்தித்தல் அவசியம்.

gayathri
2009-02-18 07:30:00
gaya_123@gmail.com

ஐந்து ஊர்களில் காவல் கோட்டம் மாநாடுகள் நடத்தியாகி விட்டது. அது அத்தனையும் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமனம் அளவுக்கு எல்லாம் ஆடம்பரமானவை அல்ல. தமிழகத்தின் பல பெரும் படைப்பாளிகளை வரவழைத்து அவசர அவசரமாக புகழாரங்கள் (முடி)சூட்டியாகிவிட்டது. புகழுரைகள் 25 அய் தான்டுகிறது, கூச்சம் இல்லாமல் அதை கேட்டாகிவிட்டது. ஆனால் ஒரு விமர்சனத்தை எழுதியவருக்கு இத்தனி எதிர்ப்பா. இது தான் அந்த படைப்பின் மீது பெரும் சந்தைகத்தை கிழப்புகிறது. கருத்துச் சுதந்திரம் என்பதன் அர்த்தம் கூட தெரியாத்வர்களாக உள்ளார்கள் என்பது பெரும் வருத்தமே. பின் ஜனநாயகத்தின் அர்த்தம் இவர்களுக்கு எப்படி தெரியும்.

ThaMuYeSa Sunda
2009-02-18 07:31:00
sunda-knj@aol.com

இவருடைய கலாச்சாரத்தின் அரசியல் வெளியிட்டு விழாவில் "இந்த புத்த்கத்திற்கும் கட்சியின் நிலைப்பாடுக்கும் சம்பந்தம் இல்லை, இது சு.வெ யின் சொந்தக் கருத்து(கதை) " என அப்பொழுதைய சிபிம் மாநில செயலர் சங்கரய்யா அறிவித்தார். காவல் கோட்டம் வெளியிட்டு விழாவில் சிபிம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ண்ண," இந்த நாவல் தலித்துகள் தொடர்புடைய கட்சி நிலைப்பாடிற்கு நேர் எதிராக உள்ளது, இதை ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து சிபிம் கட்சி தன்னை இவரின் செயல்பாடுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதை வெலிப்படையாகவே அறிவித்து வருகிறது.

Ramu
2009-02-18 10:26:00
eelamuyire@gmail.com

Some problem with this article, Why is it removed from the main page so soon? Seems there is some problem with its posting here.......Please put this in the home page . even articles which apppeared after this are staying in the list.. whats up? Nandhan

Pandiarajan
2009-02-18 11:00:00
pandiaraj_78@sify.com

எஸ்.ரான்கிருஷ்ணன் காவல் கோட்டம் நாவலைப் பற்றி ஒரு மிக நேர்மையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பொது வெளியில் புழங்கும் யாதொரு படைப்பு மீதும் அப்படி விமர்சனத்தை முன்ன்வைக்க அனைவருக்கும் ஜனாயகத்தில் பூரன உரிமை உண்டு. அந்த விமர்சனம் நாவல் பிரதியை பற்றி மட்டுமே பேசுகிறது. அது எவ்வாறு இடதுசார்களுக்கு எதிரானது, இடது சாரி பிதாமகர்களான பி.ராம்மூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்களின் போராட்டத்தை எவ்வாறு இந்த நாவல் கொச்சைப்படுத்துகிறது என்பது துவங்கி பல அடுக்குகளில் ஆதாரங்களை பார்வைகளை முன்வைக்கிறார். எங்கும் அவர் சு.வெ யின் மற்ற ப்டைப்புகள் பற்றி பேசவில்லை.
ஆனால் இங்கு பாருங்கள் எஸ்.ரா வின் கட்டுரையை பற்றி பேச துப்பு இல்லாமல்- பாபா, சண்டைகோழி, குட்டி ரேவதி என இவர்கள் இங்கு பீத்ற்றூவது சு.வெ வகையறார்களின் இயலமையை காட்டுகிறது.
சு.வெயின் மற்ற படைப்புகளைப் பற்றியும் அவர் இதுவரை செய்துள்ள மற்ற பல மோசடிகள் பற்றியும் அவரும் அவரது புதிய நன்பர்களும் பேசத் தயாரா.
பாவம் வாசகர்கள் அவரின் திருட்டு பற்றிய இரண்டாவது கட்டுரை இது. முதல் கட்டுரை உங்கள் நுலகத்தில் எப்பொழுதோ வந்துவிட்டது. ஆட்சித் தமிழ் புத்தம் எவ்வாறு எல்லாம் திருடப் பட்ட ஒரு மோசடி பிரதி என்பது உங்களுக்கு விழங்கும். சு.வெ யை பற்றி கூறினால் அது கீற்று வாசகர்களின் நேரத்தை வனடிப்பதாகும்.

manimaran
2009-02-18 11:01:00
nellai_maran@ymail.in

கட்-அவுட் சரிந்தால் அதை துக்கி ஒரமாக போட்டுவிட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது நடைமுறை. ஆனால் இந்த கட்-அவுட்டுக்கு ச.தமிழ்செல்வன் மட்டும் இப்படி முட்டு கொடுத்து அடம் பிடிப்பது அவர் மீதும் பெரும் சந்தைகங்களை ஏற்படுகிறது.
அவரது தமுஎகசவின் தோழர்கள் தான் இந்த விமர்சனத்தை தங்கள் சொந்த செலவில் (இத்ற்கு அவர்கள் எவறும் நிதி திரட்ட வேண்டும் என காத்திருக்கவில்லை, தன்னிச்சையான இயக்க செயல்பாடு என்பது இதுதானோ) எஸ்.ரா வின் விமர்சனத்தை நகல் எடுத்து ஒவ்வோரு ஊரிலும் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வழங்கியும் வருகின்றனர். தொலைபேசியிலும் பலர் தொடர்ந்து பரிந்துறை செய்து வருகின்றனர். தமுஎகச தோழ்ர்கள் இத்தனை மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு அவர்களை எது ஈர்த்துள்ளது என்பது ஆய்வு செய்ய வேண்டிய விஷ்யமே.
தமுஎகச வின் ஒரு மாநில முக்கியஸ்தர் 200 தொலைபேசி அழைப்புகளை ஒரே நாளில் செய்து இந்த மகிழ்ச்சியை பரிமாரியதை பார்த்து அவரது மலைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கே செண்ருவிட்டார்.
என் வீட்டிற்கும் இங்கு உள்ள அனைவர் வீட்டிற்கும் இந்த பிரதியை ஒரு தோழ்ர் வந்து விநியோகித்து சென்றார். ஆச்சர்யம் ஒரு துண்டுபிரசுரத்தை நீட்டினாலே பணம் கேட்கும் அவர் முதல் முறையாக பணம் எதும் பெறாமல் சென்றார். என் தூக்கம் களைந்த்து.

Tamilvaanan
2009-02-18 11:38:00
tamilvannan2000@yahoo.com

Pandiarajan or pandiaraj_78@sify.com......... Pls facilaite us to reach the UNGAL NOOLAGAM article on Aatchi Tamil Plagiarsism ,which months issue is it send us typed file or details ablout. Or do one thing send it to keetru . if it is at keetru we can share it even more easliy...... Ushar ayya Ushar

udayasankar
2009-02-19 12:01:00
uadya.rail@aol.com

Pudur Sirpi paavam Ramakrishnan in eluthukalay padithirukka maatar pol therikiradhu. avaradhi akthavilasam 54 vaarangal tamilin miga sirandha padaipali galay pattiyalittu kaatiyadhu, adhil pala naavalgal ullaner, Vaakiyangain Saalai, Vilithiruppavan Iruavu thunvangi 10 ukkum merpatta noolgal avar Samakaala Padaippugal, Samakaala Eluthaalargal ay angeegarikkum vagayil eluthiullarrr.
Konjam soolal patri therindhu kondu eluthinaal nallathu, Alladhu naam eluthum Writer patri yavvadhu therindhirukka veandum., Thideerena Ilakiya Soolakul eri kuthithu Irulin payathil Ularakoodathu

s manikandan
2009-02-19 12:30:00
smani007@gmail.com

“தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை. மாறாக தொ.பரமசிவத்தின் நுட்பமான பதிவுகள் அப்படியே உருமாற்றம் பெற்று நாவலில் ஆங்காங்கே பொருத்தபட்டிருக்கின்றன என்பது தான் கொடுமை.”
இவை எஸ்.ராம்கிருஷ்ணனின் வரிகள்.
அவை நூத்துக்கு நுறு உன்மை என்பதை நன்பர்கள் அழகர்கோவில் நுலின் ஆதாரத்துடன் நேற்றூ ஒப்பிட்டு பார்த்தனர். மேசடி பிரதி என்றவுடன் வாசகர்களுக்க்கே ஒரு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது போல் உள்ளது. நன்பர்களே நம் நேரம் வீனாகிறது. நல்ல பல பதிவுகள் புதிதாய் கீற்றில் வந்துள்ளது. வாருங்கள் அங்கே இடம்பெயரலாம். குலத்தில் குழிக்க சென்ற சிறுவர்கள் வீட்டை மறந்து அங்கேயே தங்கிவிடும் போது பிரம்ப்டன் வரும் அம்மா போல் உள்ளது உங்களை அழைத்து செல்லும் மனநிலை.
அது எல்லாம் சரி, “களவு பற்றி நாவல் எழுதலாம், களவு செய்து நாவல் எழுதக்கூடாது” இது யாருடைய வரிகள் என்பதை தமிழின் கூர்மையான வாசகர்கள் இந்த சொற் தொடரை வைத்து அவதாணித்துக் கொள்வார்கள்.

karrupasamy
2009-02-19 03:56:00
karuppu_hsr@yahoo.co.uk

தமிழ்நாட்டில் எவனுக்க்கு வரலாறு தெரியாது என்ற தொனியில் பிரதியிம் வரிகள் வார்த்தைகள் நெடி நாசியில்யெரும் உறுவாக்கப்பட்டுள்ள்என்பதுதான்அதன் மப்பில்தெரிகிறது. சில பாடநூல்கள் கிடைத்தவுடன் அவற்றை கண்டுபிடிப்பாக மாற்றும் அவசரம் அவருக்கு இருக்கும் போல் உள்ளது.
1)Fullarton s Gazetteer
2).Edgar Thurston, "The castes and Tribes of south India,
3) The Madura Country - A manual - J..H..Nelson, Asian Educational Services New Delhi, Madras.
4) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
5) The History of Tinnevelly by Rev R Caldwell,
6) History of Military transactions - R Orme
7) Louis Dumont - A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP
8) Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, "An Ode to an Engineer" in Waterlines:
9) The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference
10) Alagar kovil- Tho.Paramasivam MKU Publications
11) Notes of Baskaradass
12) Short stoires of Konangi
13) Nedunkuruthi – S.Ramakrishnan
14) Jesuit Records
15) kutraparambarai (kootanchoru) – Vela Ramamoorthy
16) பட்டியல் இன்னும் உள்ள் 200 மணி நேரம் இந்த தகவல்களை கதையாக கூறியவர் பற்றிய முழுகதை மார்ச முதல் வாரம் வெளிவரும். ( அவரின் ஆஸ்துமா இருமலின் அதிர்வுகளுடன்)
இந்த நூல் ஆசிரியர்களில் (உயிருடன்) பலரும் இந்த திருட்டை ஒப்புக்கொண்டு மன்னித்துவிட்டாலும் முத்துசாமி தேவருக்கு இவர் செய்த துரோகம் இவரை துரத்திக்கொண்டே இருக்கும்.

Meygandan
2009-02-19 03:58:00
meyvalichalai@cresent.net.in

msakthi@gmail.com paavam avarin pulambal galay yaarum madhikka mudiyavilai, ithani peria ethirvinaya, thunivu irundhaal avar oru katturyaya eluthalaam, Su.Ve avarukku eludha yevalavu rate kuduthaar, allathu munru peyar utkarndhu room pottu ethirvinay kana discsn nadhathii yoskirangalamey adhu yevangal thanooo

jafar
2009-02-19 04:05:00
mylai_jafar@in.com

பாவம் தமிழ்செல்வன் தோயர், பனை மரத்திக்கு கீத நின்னு பால் குடிச்சவன் போல், களவு செஞ்சான் பாரு அவங்கூட நிக்கங்காட்டி அவரு தர்ம் அடி வாங்க சோர்ல கஷ்டமாகவும் கீது ஜாலியாவும் கீது.., மதுரை காரனுங்க செளத் காரணுங்ஞ்லே பேஜாருபா.. பாலிடிக்ஸ்சா கீதுபா,

Selvi
2009-02-19 08:12:00
usilaiselvi@yahoo.co.in

ஒவ்வொரு தமுஎச கூட்டத்திலும் கோனங்கி, ஜெயமோகனை திட்டி திட்டி வசை பல முமாரிப் பொழிந்து தான் இவர் பல பதவிகளை அடைந்தார். அப்பொழுதே அந்த வாதங்கள் வெத்தான கூச்சலாக உனர்ச்சிப் பெருக்காக அர்த்தமற்ற பீதற்றலாகவே இருக்கும். நம் ஊரில் அடுக்கு மொழியில் பல வருடங்களை அடுக்கி பல புதிய பெயர்களை கூறினாலே மிரண்டு விடும் பொதுஜனம். ஜெயமோகனை ஆர்.எஸ்.எஸ் காரர் அவ்ர் இவர் என அவர் பாடிய பாடல்கள் நாலாயிரம் பிரபந்தத்தை தாண்டும், பின் கொஞ்சம் நாள் அவரிடம் சென்று இனையத்தில் செமத்தியாக அடியும் வாங்கியது ஊர் அறியும்.
அந்த ஆர்.எஸ்.எஸ் காரர் தான் இந்த காவல் கோட்டத்தை சரிபார்த்துக் கொடுத்தார், அவரை இனை ஆசிரியர் என போடும் அளவுக்கு பல மாதங்கள் அவர் இந்த பிரதியில் வேலை செய்துள்ளார் என்பதை சு.வெ யால் மறுக்க முடியுமா. ஆர்.எஸ்.எஸ் காரர் இடதுசாரியின் பிரதிகளை செம்மைப்ப்டுத்திக் கொடுப்பது, அட டா டா என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். நாளை இடதுசாரிகள் தங்கள் கட்சி அறிக்கைகளை ஜெயமோகனை விட்டு எழுதிவாங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படியெனில் ஒரு வேலை ஆ.எஸ்.எஸ் - இடது முரண்பாடு முடிவுக்கு வந்துவிடுமோ.ஜெயமோகன் பார்த்துக் கொடுத்த வேலைக்கு அவருக்கும் ஒரு நன்றி கூட இல்லை. நன்றி போட்டால் ஜெயமோகன் கோபித்துக் கொள்வார் ‘பதிப்பாசிரியர்’ தான் சரி.
அனைவரும் ஆன்ந்த பான்டியனை பற்றியே பேசினால் சுந்தரபாண்டியன் கோபித்துக் கொள்ளப் போகிறார்? அவரையும் கொஞ்சம் கவனியுங்கள் வாசகர்களே!!!!!

Subramanian
2009-02-19 08:33:00
subra_1974@yahoo.com

கள்ளர்களை இந்த நாவல் மிக மோசமாகவே சித்தரித்துள்ளது. இன்னும் நுட்பமாக இதை வாசிக்கவும். ஜாதிய புத்தகங்கள் பெரும் சிக்கல் தான். இன்று அவைகளை எழுதுவத்ற்கு உள்நோக்கம் என்ன????????

ChandraKesavan
2009-02-19 08:41:00
kesavan007@aol.com

கள்ளர்கள், நாயக்கர்கள் ஆகிய இரு சமூகங்கள் குறித்த அடிப்படை அறிவுகூட இன்றி இந்த பிரதி எழுத்ப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வு பற்றிய மானுடவியல் நோக்கினால ஏராலமான புத்தகங்கள், ஆய்வு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அனால் அவைகள் எதுவும் ஆசிரியர் கனக்கில் கொள்ளவில்லை போல் தெரிகிறது. என்னத்தையோ எல்லாம் போகிறப் போக்கில் உளரி கொட்டுகிறார். He has shown both the Nayakas and kallas in bad light, when you handle such sensitive history you ahould also know in which era you are writing this and understand its repercussions.What would be the role of this text in this post colonial context.
நான் அதை செய்தேன் இதை செய்தேன் என எங்கள் தலையில் புத்தகத்தையும் கட்டிவிட்டார். எங்கள் நன்பர்கள் பலரிடம் ஏராளமாக பனத்தையும் ஆய்வு செய்கிறென் என பெற்றுள்ளார். பெரும் ஏமாற்றுப் பேர்வழியாய் இருப்பார் போல் உள்ளது.
கீற்றில் உள்ள பின்னூட்டங்கள் அதற்கு சான்றாய் விழங்குகிறது. அம்பலப் படுத்திய கீற்று க்கு நன்றிகள் பல. தமிழ் இலக்கியத்தின் செலுமைக்கு இது போன்ற மனம் திரந்த மதிப்பிடல்கள் அவசியமாய் உள்ளது.

Maarichamy
2009-02-19 08:43:00
mari4321@hotmail.com

1.இத்தனை பெரும் புத்தகமே வாசகரின் மீது ஒரு பெரும் வன்முறையே.
2.கள்ளர்கள் வீர வரலாறு என்று எதுவும் கிடையாது. சுதந்திரப்போராத்த்தின் போது இன்று அராஜகம் புரியும் கள்ளர்களின் முன்னொர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் காலம் காலமாக யாராவது ஒருவருக்கு அடிமையாக இருந்தவர்களே. சும்மா போஸ் அவர்களை வைத்து இங்கு படம், முத்துராமலிங்கத் தேவர் வழிபாடு என வண்டியை ஒட்டி வருகிறார்கள்.
3.பாவம் அவர்கள் அடியாளாக இன்று அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சேவகம் செய்துவருகிறார்கள்.
4.மற்றபடி இன்று நடந்து வருவது எல்லாம் அவர்களை வாக்கு வங்கியாக கருதி நடத்தப்படும் மலிவான அரசியலே. அப்படி அவர்களை வாக்குகளாக கருதி காக்காய் பிடிக்க எழுதப்பட்டதாகவே தெரிகிறது காவல் கோட்டம்.

வெண்புறா
2009-02-21 12:21:00
artvenpura@gmail.com

எஸ்.ராமகிருஷ்ணனின் பதினாலறைப் பக்க இறுமாப்பு

பட்டயம் :
பிரபஞ்ச மகா எழுத்தாளர், வாள் முனையிலும் கூர்முனையான திரைப்பட வசனகர்த்தா, ஈரேழு உலகத்திலும் ஈடு இணையற்ற இலக்கிய விமர்சகர், அருமை அண்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்.
(சந்திராயனும் எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் இலக்கியக் கடவுளாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதால் இவ்வளவையும் எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது.)

பீடங்கள் :
உங்களைப் போல் அனுபவமும், திறமையும், எழுத்தாற்றலும் இல்லாமலேயே எவ்வித சிரமமும், அலுப்புமின்றி (மிலிட்டரியில் வேலை செய்வதாக எனக்குக் கனவுகூட வந்ததில்லை) உங்களுக்கு முன்பாகவே காவல்கோட்டம் நாவலைப் படித்து முடித்த சாமான்ய மனுசன் நான்.
பொதுவாக நண்பர்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால் நலம் விசாரிப்பதுதான் மரபு. ஆனால் நாவலைப் படித்தவுடன் உங்களுக்கு வந்த காய்ச்சலுக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். உங்களுக்கு மட்டுமல்ல, "நாங்கள் மட்டுமே இலக்கிய பிரம்மாக்கள்" என்று மூளையைச் சொறிந்து விட்டுக் கொண்டிருக்கும் எழுத்துச் சக்கரவர்த்திகள் எல்லோருக்குமே காய்ச்சல் வரும் என்று முன்பே எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் மட்டும்தான் உண்மைணை வெளியே சொல்லிவிட்டீர்கள். ஒருவேளை மற்றவர்களுக்குப் பேதி புடுங்கியிருக்கக் கூடும் என்பதால் வெளியில் சொல்ல வில்லை போலும்.

விமர்சனம் குறித்து ஒரே ஒரு பார்வை :
வெளியிடப்பட்ட எந்தவொரு படைப்பையும், விமர்சிக்கின்ற உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால் "காவல்கோட்டம் என்னும் ஆயிரம் பக்க அபத்தம்" - என்று தலைப்பிட்டு (தலைப்பு ரொம்ப நீநீநீளும் என்பதால் நாற்பத்தேழு பக்கத்தைக் குறைத்துவிட்டீர்களாக்கும்!) அது நாவலே இல்லையென்று ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் போக்கு பாசிச குணமின்றி வேறில்லை. "அது அப்படியிருக்கிறது பாருங்கள்", "இது இப்படி இருக்கிறது பாருங்கள்" - என்று நாவலை வரித்து போட்டு வரிக்கு வரி பேன் பார்ப்பதும், "அதை எழுதவில்லை", "இதை எழுதவில்லை" என்று குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போன்று 'எழுதாத நாவலுக்கு' பதினாறு பக்கத்தை வீணடித்திருப்பதும், அலுத்துச் சலித்து படித்து முடிப்பதற்குள், இன்னொரு முறை இலகுவாக காவல்கோட்டத்தைப் படித்து முடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒரு வழியாய்! இந்த நாவலை அருள்கூர்ந்து படித்து முடித்திருக்கிறீர்கள். இதில் விடுபட்டதாக நீங்கள் நினைக்கும் பகுதிகளை, நீங்களே ஒரு நாவலாக எழுத முன் வந்தால் யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! நீங்கள் எழுதினாலும், அதிலும் விடுபட்ட பகுதிகள் ஏராளமிருக்கும். அவ்வளவு ஏன்? இதுவரை நீங்கள் எழுதிய எல்லாவற்றிலுமே அது நிரம்பியிருக்கும். காரணம், இதுவரை எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத வரலாறுகள் அனைத்தையும் கற்றுணர்ந்து, எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் இன்று வரை பிறக்கவுமில்லை, இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை!

சில சந்தேகங்கள் சில கேள்விகள் :
1. "எப்படிப் படித்தாலும் நகர மாட்டேன் என்கிறது, ரோடு ரோலர் மாதிர் என்றார். எனக்கு அவரது உவமை பிடித்திருந்தது" - என்று சிலாகிக்கும் உங்களுக்கு, உங்கள் நண்பரின் ஒற்றை வார்த்தை இலக்கியமாகத் தெரிகிறது. ஆனால்....
இருள் குறித்து, (அதென்ன கோணங்கி மொழி! - இந்த சேதி கோணங்கிக்குத் தெரியுமா?) கோட்டையிடிப்பு குறித்து, தாதுப்பஞ்சம் குறித்து, வேட்டை குறித்து, ஜல்லிக்கட்டு குறித்து நாவல் முழுக்க பக்கம் பக்கமாய் எழுதப்பட்ட வர்ணனைகள், உவமைகளில் ஒன்று கூட உங்களுக்கு பிடிக்காமல் போனது தற்செயலானதா? அல்லது மன சுகவீனத்தாலா?
2. "ஒரு மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று விரும்பினால், எளிய வழி அவனுக்கு காவல்கோட்டம் நாவலை வாங்கித் தந்துவிட வேண்டியதுதான்!" - என்ற உங்கள் வாக்குலத்திற்கு மிக்க நன்றி! ஓரு வேண்டுகோள், நாவல் பரபரப்பாக பேசப்பட்டு, பல பிரதிகள் விற்றுத் தீர்ந்து தற்போது மதுரையில் நாவல் கிடைக்காததால், எனது பிரதியைக் கேட்டுத் தொந்தரவு செய்யும் நூற்றுக்கணக்கான வாசக நண்பர்களைத் தண்டிக்க விரும்புகிறேன். தயவு செய்து முதற்கட்டமாக ஒரு நூறு நாவல்களை வாங்கித் தருகிறீர்களா? பணம் கொடுத்து விடுவேன்.
3. "செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியே போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது, அந்தக் கொடுமைதான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது" - என்று சு.வெங்கடேசனின் புத்தகம் குறித்து மிகச்சரியாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரு சிறு திருத்தம். அந்த புத்தகம் நாவல் அல்ல... ஆய்வு நூல்! தலைப்பும் கூட காவல்கோட்டம் அல்ல.... கலாச்சாரத்தின்அரசியல்! அடடா, இவ்வளவு விவரமாக(!) கூறிய நீங்கள் இன்னொரு விவரத்தையும் கூறினால் மிகவும் உதவியாய் இருக்கும்... இந்த, பெர்த் சர்ட்டிபிகேட், டெத் சர்ட்டிபிகேட் மாதிரி ஸ்டோரி சர்ட்டிபிகேட் ஏதாச்சும் இருக்கா? அதுக்கு யாரு அத்தாரிட்டி? என்னென்ன விதிமுறைகள்னு கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா?
4. "நாவலைப் பற்றி பேசுவதாக ஏதோவொரு குருட்டு தைரியத்தில் ஒத்துக் கொண்டு விட்டேன்..." என்றும், "நல்லவேளையாக வெளியீட்டு விழாவுக்கு போகவில்லை" என்றும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் எழுதியிருக்கிறீர்கள். போகட்டும். எனது கேள்வி இதுதான். 'நாகரீகம்' என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?

கும்பி எரியும் அதிமேதாவிகளின் கடைசி ஆயுதம் :
போகிற போக்கில் கொளுத்திப் போடுவது சிலருக்கு கை வந்த கலை. நீங்கள் எழுத்தாளர் என்பதால், கொளுத்தியதை எழுத்தில் போடுகிறீர்கள்.
"சாதி உட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சி", "பச்சையான மதவாதம்" - என்று முடிகிற வார்த்தைகள், நாவல் குறித்த தனது எழுத்து எங்கே போனியாகாமல் போகுமோ என்ற அச்சத்தில் வெளிப்பட்டதாகவேத் தெரிகிறது. குறிப்பாக, கோட்டையிடிப்பின் போது, நாட்டார் தெய்வங்கள் குறித்த விமர்சனப் பார்வையில் இருந்து விலகி, ராமர் பாலப் பிரச்சனையோடு முடிச்சு போடுவதும் (ஓஹோ! இதற்குப் பெயர்தான் மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சு போடுவதா?) நிறுவனமாக்கப்பட்ட செவ்வியல் கடவுளர்களையும், மனிதர்களாய் வாழ்ந்து மடிந்த நாட்டார் தெய்வங்களையும் ஒரே தட்டில் வைத்ததோடு மட்டுமல்லாமல், நாட்டார் தெய்வங்களால் மட்டுமே சாதியம் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அது இல்லையென்றால் சாதி சவக்குழிக்குள் போய்விடும் என்பது போலவும், ஒரு எஸ்ரா வகையறா அரசியலை முன் வைத்து பார்ப்பனியத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.
மேலும்...
"இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்ட மக்கள், இன்று தனது சக மனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும், அவர்கள் அடிப்படை உரிமையை பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரைப் பகுதியில்தான் நடந்து வருகிறது என்கிற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை" -என்று பதினாலு பக்க சாக்கடைத் தண்ணீரிலிருந்து ஒரு நாலுவரியை வடிகட்டி, தலித் மக்களுக்காக கண்ணீர் வடிக்கிறீர்கள்.
ஆனால் ஒரு உண்மையை நீங்கள் மறந்து விட்டீர்கள். அல்லது மறைக்கப் பார்க்கிறீர்கள். நீங்களே சொல்வது போல் 'இடதுசாரி எழுத்தாளரான' நாவலாசிரியரும், அவர் சார்ந்த இயக்கமும்தான் இதே மதுரைப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் கூட தலித் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை, ஆதிக்க சாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில உரிமைகளைப் பெற்றும் தந்திருக்கிறார்கள்.
எனவே, நீங்கள் என்னதான், எழுத்துக் கண்ணீர் வடித்தாலும், காவல்கோட்டம் நாவல் காலம் கடந்து நிற்கும்.

முன்குறிப்புடன் சில பின்குறிப்புகள் :
"காவல்கோட்டம் நாவலில் பாராட்டும்படியாக எதுவும் இல்லையா என்று கேட்பது புரிகிறது" - என்று வரியைப் படித்தவும், அப்பாடா, கடைசியிலாவது பாவப்பட்ட இந்த நாவலுக்காக, மனமுவந்து ஸ்ரீலஸ்ரீ ராமகிருஷ்ணஜீ, மிகுந்த இரக்கக் குணத்துடன் ஏதோ இரண்டு வரி பாராட்டப் போகிறார் என்று அடுத்த வரிக்குள் நுழைந்தேன். ஆஹா! என்ன ஆச்சரியம்! நாவலைத் தூக்கிக் கடாசிவிட்டு "காவல்கோட்டம் போன்ற நாவலைக் கூட விபரம் தெரியாமல் படித்துவிடக் கூடிய நீதான் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவன்" என்று என்னை உச்சிமோந்தவுடன் அப்படியே புல்லரித்துப் போய் நிற்க!அதே கையோடு, "ஆதிக்கம் கைமாறலாமா?" - என்று ஆனந்த விகடனைப் பார்த்து நறநறவென பல்லைக் கடிக்கிறீர்கள்.
ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டே பின் குறிப்புகள் என்றிருந்த கொட்டையெழுத்துக்குக் கீழே இருந்த முதல் இரண்டு வரியையும், கடைசி இரண்டு வரியையும் வாசித்த போதுதான் பதினாறு பக்கத்துக்கான மொத்த அர்த்தமும் புரிந்தது.
1. கவனக்குறைவால் ஒரே அத்தியாத்தை இரண்டு தடவை சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒன்றை படித்தாலே போதும் என்கிற 'நிதானம்' கூட இல்லாமல் நாவல் முழுவதையும் நீங்கள் படித்து முடித்தது.
2. வெங்கடேசனெல்லாம் நாவலா எழுதப் போகிறான் என்ற அதீத நம்பிக்கையுடன் நீங்கள் இருந்த வேளையில்... மதுரைக் கோட்டை இடிபடும் போது எழுந்த தூசிகளின் நெடியை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து, குபீரென பீதியைக் கிளப்பியது.

madhikumar
2009-02-21 07:41:00
madhikumar22@yahoo.com

அன்புள்ள ஜெயமோகன்,
வெண்ணிலை, காவல் கோட்டத்திலிருந்து சிறு பகுதிகளை வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன், என்றாலும் வெண்ணிலை அளவுக்கு என்னால் காவல் கோட்டத்தோடு சட்டென்று ஒன்றிப் போக முடியவில்லை. மதுரையைச் சார்ந்த என்னால் மதுரையின் மாதிரியைக் கூட காண இயலவில்லை. காவல் கோட்டம் பற்றிய திரு.ராமகிருஷ்ணனின் விமர்சனத்தில் பட்டவர்த்தனமாக ஒரு வாசகனின் உணர்வுகள் சொல்லப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். உங்களது பார்வைக்கு..

http://www.sramakrishnan.com/view.asp?id=231&PS=1
http://www.sramakrishnan.com/view.asp?id=232&PS=1

–கார்த்திக் முருகன்.

Vishweswaran
2009-02-21 08:59:00
visu.tamilan@gmail.com

Dear S.R, read your article. In the recent past, there are a few writers crowing themselves as rulers in the tamil literary world. You may also have the opinion that, you may be one of those. By emerging of a new, young and the really research oriented, Sri S.Venkatesan and his work in the filed of writing a novel 'Kaaval Kottam', I think, has really disturbed your entire standing.
By only imagination, a creation can be called as novel. By adding so many historical events, the real social history coupled with a beautiful language and presentation can be really called as 'Historical Novel'. You may be agreeing that for a historical novel you need, not only imagination but also so many informations, documents, records, proofs.
In this context, for 'Kaaval Kottam' it also requires so many such proofs, documents. While using such documents or any other supportive matterials, if you say, those have been stolen, I really pitty upon for your ignorance.
It is natural and I can understand an young writer, that too his first work, which has overtaken all the other works done by so many novelist like you, would have strong impact in the tamil literary world.
In the name of criticism, do you think you have done fair on the novel. I think I cannot expect such moral or laid down ethics in the area of criticism from you as you have not putforth any of your comments inside the subject, but went on to explore the writer and his associates are belonging to which of the castes and creeds etc., I really feel asshamed of your apporach in name of critisism.
You may have to bowout from the literary area if you are continued to have such behaviour.
I have also read so many reactions against your writeup. From that I believe, writers of your sort will be thrown out by emerging of hundreds of works by Sri S.Venkatesan and hundreds of Venkatesans on the blossoms.
With this you should curtail, such of your behaviour.
Try to concentrate on your the next work. Keep cool. Try to do something better than 'Kaaval Kottam', if you can. Otherwise kindly shut all your mouths.
With warm greetings

Udayachandiran
2009-02-22 08:42:00
nilamengumtamil@yahoo.com

1."கோனங்கி இருபது ஆண்டுகளில் அடைய முடியாத வாசகப் பரப்பை, சு.வெ நாவல் வந்த பத்து நாட்களில் அடைந்து விட்டார்"
2. "காவல் கோட்டம் வெளிவந்த மூன்று மாதங்களில், தமிழில் வெளிவந்த நாவல்கள் எல்லாம் துவம்சமாகிவிடும்"
இது போன்ற திட்டமிட்ட பல முழக்கங்களுடன் தான் நாவல் பிரச்சாரம் துவங்கியது. இந்த நாவலின் பதிப்பாசிரியராக ஜெயமோகன் விழங்குவதால் இந்த முழக்கப் பிரச்சாரத்தை தன் மெளனத்துடன் எதிர் கொள்கிறார். அல்லது இன் நேரம் எஸ்.ரா வை மிஞ்சும் அளவுக்கு பெரும் படைப்பை படைத்திருப்பார்.
இது போண்ற முன் முடிவு கொண்ட இன்னும் ஏராலமான 'பஞ்ச் டயலாக்' களை எழுதி இலக்கிய சுப்பர் ஸ்டார் ஆகிவிட தான் தோழ்ர்கள் என்னியிருந்தார்கள் போல் உள்ளது. தலையாரி விட்டில் திருடப் போனவன் கதையாகி விட்டது.
இலக்கியம் படைப்பவர்களுக்கு நேர்மை, சமூகத்தின் மீது அக்கறையும் காதலும் அடிப்படை தேவை. பதவிகளும் அதிகாரப் வெறியும் கண்களை மூடிவிடுகிறது. எழுதியவுடன் அமைதிக்காப்பதே எழுத்தாளனுக்கு சாலச்சிற்ந்த்து. அது தவிர்த்து செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் எழிய வாசகன் மிது பெரும் வன்முறையே. அவசர விழக்களும், அவசர விமர்சனும் ஆகிய இரண்டுமே இவ் விஷ்யத்தில் பிழையாகிவிட்டது.

Thangabalu University of Madras
2009-02-22 08:45:00
thangam@unom.ac.in

ஆய்வாளர்கள் தான் இந்த சமுகத்தின் அறிவுத் தளத்தில் பெரும் பங்காற்றி வருபவர்கள். இந்த ஆய்வாளர்கள் தான் காடு, மலை, கிராமம் என ராகுல்ஜியின் வாரிசுகளாக இந்த பிவியெங்கும் அழைகிறார்கள். மக்களை சந்திப்பது உறையாடுவது, ஆவணன்களை சேகரிப்பது என அது ஒரு பெரும் தவம் போல் காலவெளிகள் கடந்து இயங்கும் ஒரு அரூப நிலை. ஆனால் அவர்களுக்கு வரலாற்று நெடுகிளும் எந்த மரியாதையும் கிடைப்பதில்லை.

அப்படியான பல சமூக ஆய்வாளர்கள் நம் காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். ஆ.சிவ்சுப்பிரமணியன், வேதாச்சலம், தொ.பரமசிவம்- மறைந்த தோழர்கள் வானமாமலை, கோ.கேசவன் என பலரையும் இங்கு சொல்லலாம். இவர்களை கொன்டாடுவது தான் இந்த காலத்தின் அவசியமான செயல்பாடு. மனவை முஸ்தபா, அருளி என்கிற பெரும் மகான்களின் தொலைபேசி எண் கூட இங்கு யாருக்கும் தெரியாது.

அதை விடுத்து யாருடைய படைப்பை யார் (திருடுவது) கையகப்படுத்துவது என இங்கு நடைபெறும் சன்டை கேளிக்கூத்தானது. உயிரோடு இருப்பவனின் அனுமதி இல்லாமலேயே அவனது கல்லீரலை எடுத்து சந்தைப் படுத்துவது போல் அல்லவா இருக்கிறது இந்த கூத்துக்கள்.
ஒரு அடிக்குறிப்பு, பத்தக பட்டியல் என முற்றும் துறந்த முதல் படைப்பாக காவல் கோட்டம் விழங்குகிறது. இது நாவல் ஆசியரின் 'ஏழாவது ஜென்மம்' போல் உள்ளது. அப்ப தானே இத்தனை ஆண்டு சரித்திரத்தை அவரே சாட்சியமாக இருந்து எழுத இயலும்.

K Elangovan
2009-02-22 08:47:00
elangovan_k@in.com

எஸ்.ராமகிருஷ்ணன் பின் நவினத்துவ கருவிகளைக் மிக நல்ல முறையில் மிகுந்த நுனுக்கங்களுடன் பதிவை செய்துள்ளார்.இதை விட காட்டமான பல இலக்கிய விமர்சனங்கள் கடந்த பத்தாண்டுகளின் தமிழ் சுழலில் வெளிவந்துள்ளது. சுந்தர் ராமசாமியை ஒர் சிறுகதைக்காக வன்கொடுமை தடுப்பு சடட்த்தின் கிழ் கைது செய்ய வேண்டும் என குரல்கள் அழுத்தமாய் இருந்த்து. விமர்சனத்துறையில் பின் நவினத்துவம் வழங்கும் கட்டற்ற சுதந்திரத்துக்கு இவை சான்றாய் விழங்குகிறது.
ஆனால் இந்திய சுழலில் அது இத்தனை ஆண்டுகளுக்கு பின் தான் சாத்தியமாகிறது என்பது நாம் பின் தங்கியுள்ளதை தான் வெளிச்சம் இட்டு காட்டுகிறது. பின் காலனித்துவம் இன்னும் புதிய வெளிகளை சாத்தியப்படுத்துயுள்ளது. அதன் துனையுடன் காலணிய தஸ்தாவேஜ்களை நாம் கட்டுடைகக் வேண்டும். அப்படு செய்யும் போழுது எஸ்.ரா குறுப்பிட்டுள்ள பல ஆங்கிள் நுல்கள் ( குறிப்பாக Asian Educational Society யின் அனேக நுல்கள்) தவுடு பொடியாகும்.
இன்று நமக்கு உடன் தேவை பின் காலனித்துவ அனுகுமுறையுடன் கூடிய ஒரு பிரத்யேக சிந்தனைப் பள்ளியும் ஆய்வாளர்களும்.

Bharathi
2009-02-25 04:09:00
salembharathi@ymail.com

"1995ம் ஆண்டு வெளிவந்த ஜெயமோகனின் 'நாவல், என்ற ஆய்வு நூலில் சுமார் 122 ஆண்டு கால தமிழ் நாவல் வரலாற்றின் அனைத்து நாவல்களையும் நிராகரித்தார். முழுமைபெற்ற நாவல் தமிழில் எழுதப்படவேயில்லை என்று கூறிய இவர் சில முக்கிய நாவல்களை பட்டியலிட்டு அவையும் நாவலுக்கான முயற்சிதானேத் தவிர நாவல் இல்லை என்கிறார். ஒரு படைப்பாளியையும் அவருடைய சாதனையையும் நான் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகவோ, அலட்சியம் செய்திருப்பதாகவோ கூறிவிட முடியாது என்றும்துணிந்து கூறினார்.
இவர் ஏன் இப்படி கருத்துக்களை முன்வைக்கிறார், இதற்குள் இருக்கும் உண்மை என்ன என்பதை கண்டறிய சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 'விஷ்ணுபுரம் ', 'பின்தொடரும் நிழலின் குரல் ' ஆகிய இரண்டு நாவல்களை எழுதிவிட்டு 'எனது இரு நாவல்களை சர்வதேச புகழ் பெற்ற பல நாவல்களின் தரத்தைவிட மேலானது என்று தயங்காமல் கூற முடியும் என்று ஜெயமோகன் கூறியபோது பல பூனைகள் கோணிப்பையில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறின. "
இவை சாட்சாத சு.வெ உதிர்த்த வரிகளே. அவர் காவல் கோட்டம் புத்தகத்தின் பதிப்பாசிரியர் ஜெயமோகனை பற்றி செல்லமாக எழுதி தமுஎச வில் பல பதவிகளை அடைந்ததற்கு உதவிய வீரியம் மிக்க கஞ்சா புகைக்கு நிகரானவை இவை. சு.வெ இந்த வரிகளை நிதானத்தில் எழுதியிருந்தால் கட்டாயம் ஜெயமோகனின் காலடியில் தன் பிரதிகளை சமர்பித்திருக்க மாட்டார். ஆனால் இங்கே அவர் ஜெயமோகன் செய்த காரியத்தை நகல் வடிவில் செய்து வருகிறார். பலரையும் வைத்து வெளியிட்டு விழாக்களில் தமிழ் சுழலில் வெளிவந்த நாவல் அனைத்தையும் கொச்சை படுத்தி வருகிறார். அடேங்கப்பா இப்ப கோணிப்பையில் இருந்து ஒரே நேரத்தில் பூணைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கிறது.
நன்றி: ஜெயமோகன், சு.வெ, தமிழ்.com

Dr.M.Buvaneswaran
2009-02-26 02:15:00
buvaneswaran@ymail.com

காவல் கோட்டம் என்கிற நாவல் அபத்தமா? அபூர்வமா?
முனைவர். ம. புவனேஸ்வரன்
விரிவுரையாளர்
சமூக விலக்கம் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையம்
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி - 627 012.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்கிற நாவல் இன்றைக்குக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 600 ஆண்டு கால வரலாற்றை ஒரு எழுத்தாளன் அந்த காலம் முழுவதும் போர் முனையிலும், கலவிலும், காவலிலும் அனுபவித்து ரசித்து வாழ்ந்ததுபோல் அவ்வளவு அழகான ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார். அப்படிப்பட்ட வரலாற்றைக் கடந்து ஊடுறுவி உருவாக்கப்பட்டுள்ள அந்த நாவலை இவ்வளவு கடுஞ்சொற்களாள் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அந்த விமர்சகர்களின் பின்னனியை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 1980களில் வெளிவந்த பாரதிராசாவின் வேதம் புதிது என்ற திரை நாவலும் இதை விட கடுமையான விமர்சனம் செய்யப்பட்டது. ஏன்! அந்த இயக்குனர் பிறந்த மண்ணிளும் கூட ஒரு பிரளயத்தையே உருவாக்கிவிட்டது. அதே போல் இன்றைக்கு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் கொல்லவாருகளுக்கும் வல்லார்களுக்கும் சண்டை மூட்டிவிட முயற்சிப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

விஜயநகரப்பேரரசு தொடங்கி கைரேகைச்சட்டம் வரை அது பதித்திருக்கிற தடம் வரலாற்றையே புரட்டிப்போடுகிறது. காவலும், கலவும், இருளும் யாருமே சிந்தித்துக்கூட பார்க்க முடியாத வகையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எழுத்தறிவே இல்லாத ஒரு இனம் போர்க்குணத்தோடு மதுரையை கட்டிக் காத்த வரலாற்றை அந்த மக்கள் சந்தித்த பேரின்னல்களை, அடக்குமுறையை, உயிர்பலியை, வறுமையை, ஒரு நேர உணவுகூட கிடைக்காத கொடுமையை 600 பக்கம் பேசுகிறது. அப்படிப்பட்ட ஒரு நாவலை ரோடு ரோலர் என்றும், லூயி துமோவிற்கு நன்றி சொல்லவில்லை என்றும், அமெரிக்கப் பேரராசிரியரான சு.வெ.வின் நண்பருக்கு நன்றி சொல்லவில்லை என்றும், பலபத்திகள் வரலாற்றுப் புத்தகங்களில் அப்படியே உள்ளது என்றும் அங்கும் இங்கும் தேடித்தேடி அலைந்து சொத்தை காரணங்களைக் கொண்டு கடுமையான வார்த்தை பிரவாகங்களால் சுட்டெரிக்க முயல்வது துரதிஸ்டவசமானது. அது விமர்சரின் கர்வத்தையே காட்டுகிறது அல்லது 1039 பக்கத்தில் வரலாற்றை பதிவுசெய்த சு.வெ.விற்கு கர்வம் வந்துவிடக்கூடாது என்பதற்காக விமர்சிக்கப்பட்டதாகத்தான் பார்க்கமுடிகிறது. மானாவாரி பூமியில் கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து 10 வருடத்திற்கு ஒரு முறை கடுமையான பஞ்சத்தை சந்தித்து வாழ்ந்து வந்த அந்த மக்கள் கூட்டத்தின் வரலாற்றை கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் இந்த அளவிற்கு விரிவாக விவரிக்க முடியாமல் போன அந்த மக்களின் களவுக்குப் பின்னால் இருக்கிற மனிதாபிமான அடிப்படையிலான வாழ்வுரிமை போரட்டத்தின் நியாயத்தை அது பிசிரின்றி படம் பிடித்திருக்கிறது.

என்னைப் போன்றவர்கள் சும கால வாழ்வில் இந்த பகுதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரு 10 ஆண்டுகாலம் பின் தங்கிப் போய்விட்டதற்கான காரணத்தை இந்த 38 வயது வரை தேடி அலைந்தும், ஆராய்ந்தும் கண்டுபிடிக்க முடியாமல் போன பதிலை இந்த நாவல் வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஏன் இன்னும் கள்ளநாட்டில் உள்ள 8 நாடு 24 உபகிராமத்திலும் மக்கள் உயர்கல்வி பெற முடியாமல், அல்லது பெறவிரும்பாமல் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை தருகிறது இந்த நாவல். முரட்டு தைரியத்தையும், இரவையும் தெரிந்து வைத்திருந்த அளவிற்கு அறிவியல் நுட்பமே இல்லாத அந்தப்பகுதி மக்கள் ஐரோப்பிய வெள்ளையர்களின் ஏகாதியத்திய வெறியை எதிர்த்து ஆயிரமாயிரம் உயிர்களை மாய்த்திருக்கிறார்கள். ஐரோப்பியக்காரனின் ஆட்சி முறையும், நிர்வாகமுறையும் மற்ற மக்களுக்குப் புரிந்து அளவோ அல்லது அவர்கள் ஏற்றுக்கொண்ட அளவோ இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனோடு எங்கள் முன்னோர்களுக்கு ஏற்பட்ட விரோதமே இன்று வரை எங்களை பின்னடைவை நோக்கியே பயனிக்க வைத்திருக்கிறது. ஆங்கிலேயனுக்கு எதிராக இந்த மக்கள் சிந்திய ரத்தம் தான் எங்கள் பகுதியெங்கும் மண் செம்மண்ணாக மாறிப்போயிருக்குமோ! அந்த செங்குருதியின் ரத்தத்தில் விளைந்த தானியங்களை உண்டு வாழ்கிற எங்கள் மக்களுக்கு இன்று வரை அந்த ஆங்கிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற உணவு ஊட்டப்பட்டுக்கொண்டே இருப்பதால் தான் அவன் உருவாக்கிவிட்டுப் போன மெக்காலயே கல்வி முறையை முழுதாக ஏற்றக்கொள்ள முடியாமல் 10 ஆண்டுகள் பின்தங்கிப்போனோம் (அதுவும் எங்களைப் போன்ற உயர்கல்வி பெறும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கு மட்டும்தான்) இந்த வரலாற்றை வெங்கடேசன் எழுதினால் ஏன்? உங்களுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது.

மதுரையின் வரலாற்றோடுதான் பிரமலைக்கள்ளர்களின் வரலாற்றை பதிவு செய்யமுடியும். மதுரை என்றால், மங்கம்மா, மீனாட்சி, திருமலை நாயக்கர் வரலாற்றை எழுதவேண்டி வரும். மேலும், திருமலைநாயக்கரைப் பற்றி அந்தப்பகுதி மக்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்களோ அதைத்தான் வெங்கடேசன் பதிவுசெய்திருக்கிறார். இதற்கு, வேறு எந்த அர்த்தமும் கற்பிக்கக்கூடாது (வேண்டுமெனில் கள்ளநாடு முழுக்க பயனித்து ஆய்வு செய்து பிறகு இதையெல்லாம் விமர்சனமாக வைக்கலாம்)

மதுரை கோட்டை இடிக்கப்பட்டதும், பாம்பன் பாலம் கட்டப்பட்டதும், அந்த இனக்குழு மீது பொய் வழக்குப்போட்டு வேலை வாங்கியதையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். அதையெல்லாம் விட்டு விட்டு வசதியாக சில விசயங்களை மட்டும் விவாதிப்பது என்பது எப்படி சரியாகும். மதுரையில் முதன்முதலில் ஆரப்பிக்கப்பட்ட கச்சேரிக்கும் கலெக்டர் பங்களாவுக்கும் சேர்த்தே காவக்கூலி வாங்கியதையும், காவக்கம்பு, நிலையால் கம்பு, மொண்டிக் கம்பையும், கண்ணம்போடுவதையும், காற்றின் ஓசையையும், இருளையும், பறவைகளின் கீச்சொலியையும், ஆந்தைகளின் அளறலையும் அது எடுத்தியிம்பியிருக்கிற கவிதை வரிகளை ஏன் விவாதிக்கவில்லை. இருள் யாருக்கும் சொந்தமானதும் இல்லை. அது சு.வெ.வின் வார்த்தைகளால் வடிக்கமுடியாததும் இல்லை. களவைப்பற்றி கள்ளர்களே அறிந்திறாத வகையில் வர்ணிக்கத் தெரிந்தவனுக்கு இருளை களவாடவேண்டிய அவசியமில்லை. இருளுக்கும் பொருளுக்கும் நடுவில் ஓசையின்றி இருக்கும் உலகில் இயங்கிக்கொண்டிருந்தவர்களை தன் ஒவ்வொரு திசுவிலும் அறிந்திருந்த வெங்கடேசன் இருளையும் நிலவையும் ரெட்டியக்கெடுத்த வெள்ளியையும் எங்கிருந்தும் எடுக்கவேண்டியதில்லை.

விமர்சகர் வாசித்த புத்தகத்தில் கடைசி அத்தியாயம் இரண்டு முறை இருந்தது அதையும் வாசித்து தொலைக்கவேண்டியிருந்தது என்கிற விமர்சனத்தில் இருக்கிற விஷமத்தனத்திற்கு எழுத்தாளன் பொருப்பாளியல்ல. கைரேகைச்சட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 90,000 பேரில் 30,000 பேர் இந்த பிரமலைக்கள்ளர் இனக்குழுவைச்சேர்ந்தவர்கள். இதன் விளைவாக இரண்டு தலைமுறையினரை பறிகொடுத்த, அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு இனக்குழு இந்தியாவிலேயே பிரமலைக்கள்ளர் இனக்குழுவாகத்தான் இருக்கமுடியும். இந்த ஒடுக்குமுறைகளை எந்த ஒரு வரலாற்று ஆசிரியரும், இலக்கியவாதியும், எழுத்தாளரும் பேசாத விசயத்தை சு.வெங்கடேசன் பேசியிருக்கிறார். 1970களில் சமஸ்கிருதமயமாக்கப்படாத ஒரே இனக்குழு என்ற காரணத்திற்காக மட்டுமே பிரமலைக்கள்ளர்களை லூயிஸ் துமோ என்கிற பிரான்சு ஆய்வாளர் ஆய்வுசெய்து எழுதினார். அந்த புத்தகம் 1980ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புசெய்யப்பட்டது. அதற்கு பிறகு அந்த இனக்குழு சந்தித்த வலியை, வேதனைகளை, துக்கத்தை, பிரச்சினைகளை அவர்களின் சமூகச்சூழலோடு பதிவு செய்திருக்கிறார் வெங்கடேசன். இந்த நாவலையும், இதன் மீது எழுப்பப்பட்டுள்ள விமர்சனங்களையும் அந்த மக்களின் சாமானியன்வரை எடுத்துச்செல்லவேண்டிய கட்டாயம் எங்களைப்போன்றவர்களுக்கு இருக்கிறது.

manikuravan
2009-02-26 06:29:00
manikuravan@yahoo.in

``1980ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புசெய்யப்பட்டது. அதற்கு பிறகு அந்த இனக்குழு சந்தித்த வலியை, வேதனைகளை, துக்கத்தை, பிரச்சினைகளை அவர்களின் சமூகச்சூழலோடு பதிவு செய்திருக்கிறார் வெங்கடேசன``. ?????? அது எப்போ. எந்த பக்கத்திலே இருக்கு..``

பேராசியரே நீங்களாவது நாவலை படித்துவிட்டு எழுதக்கூடாதா? காவல்கோட்டம் நாவலில் 1980 அப்புறம் உள்ள வலி வேதனை எங்கய்யா எழுதப்பட்டுள்ளது. இப்படி யாரோ சொல்லி பதில் எழுதும் வேலைக்கு சும்மா இருந்தால் எருமை மாட்டை சவரம் செய்ய போகலாம் தானே.

Kannapan
2009-02-26 05:33:00
sudalai_msu@sancahrnet.in

பாவம் புவனேஸ்வரன் சார் அவருக்கு இந்த நாவல் எழுதப்பட்டதற்கு பின்னுள்ள அரசியல் தெரியாது. அவர் எங்கள் பல்கலைகழகத்திற்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. அவரது சமூகவியலின் புரிதலின் அளவு என்ன என்பது அங்கு பயிலும் என் போன்ற மானவர்களுக்கு தான் தெரியும். அவருக்கு இது போல் எழுதவும் தெரியாது, அவர் நாவலை இன்னும் படிக்கவும் இல்லை. எதை எதையோ உளறிக் கொட்டியிருக்கிறாஎ. அவர் போன்ற ஒரு பேராசிரியர் எழுதினால் நல்லது என்று ஆசிரியர் கருதியிருப்பார்கள் போல் உள்ளது. பாவம் புவனேஸ்வரன் சார் அவரும் அவரது சமூகத்தாரையும் எப்பொழுதும் சிந்திக்க விடாமல் அடியாட்களை போல் வைத்திருப்பது தான் ஆதிக்க சாதிகளின் திட்டம்.
நாயக்கர் சங்கத்திடம் பெரும் தொகைப் பெற்று, அந்த சங்கம் இட்ட கட்டளைப் படி திருமலை நாயக்கர் பிறந்த நாள் அன்று காவல் கோட்டம் மதுரையில் வெளியிடப்பட்டதை அவர் அறிய மாட்டார். புவனேஸ்வரன் சார் ஆய்வு தேவை தான் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன் , அது இந்த நாவல் எழுதப் பட்ட பின்னனியை பற்றியது. உங்களை போன்ற பேராசிரியர்கள் அதை செய்தால் உங்களுக்கு எங்கள் வரிப் பணத்தில் குடுக்கப்படும் சம்பளத்திற்கு பிரயோசனமாக இருக்கும். மன்னிக்கவும் சார் இது பல்கலைக்கழகம் அல்ல இனைய தளம் நான் ஜனநாயகத்தை சுவாசிக்கும் ஒரே இடம் இதுவே, அந்த தைரியத்தில் தான் இந்த எதிர்வினையை எழுதுகிறேன். சார் உங்களுக்கு நேரம் இருந்தால் பாலயங்கோட்டை சென்று தொ.பா அய்யாவிடம் உறையாடுங்கள் அது உங்கள் பார்வைகளை மேம்படுத்த உதவக்கூடும்.

Tamiliniyan
2009-02-27 11:39:00
eelamuyire@gmail.com

"ஆறு நுற்றாண்டு கால மதுரையின் வரலாற்றைப் (1310-1910) பின்னணியைக் கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், ஜாதி வெறி கண்ணோட்டங்களுடன் இது வரை எழுதப்பட்ட வரலாற்று பிரதிகள் அனைத்தயும் திரட்டி அதில் கிளரிய உப்புமா தான் இந்த நாவல். வரலாற்று பக்கங்களில் தங்கள் வாழ்வை தொலைத்து தகவல்கள் திரட்டிய பல காலனிய வரலாற்று அறிஞர்களின் மூளையை, ரத்தததை களவாடியதில் தான் இந்த நாவல் சாத்தியமானது.

சாதிய பெருமையை பேசும் பல திருப்புமுனைகள், வளமான தஸ்தாவேஜ் லாரி லோடுகள், கூர்மையான சுயநலம் கொண்ட இருட்டடிப்புகள், பதவி சுகத்தில் கனக்கும் மெளனங்கள் உள்ளுறை அர்த்தங்கள்....

நாயக்கர் பெருமைக்காகவே பதுக்கப்பட்ட பல கள்ளர் சமூக ஆவணங்கள், வழக்கம் போலவே அழிக்கப்பட்ட தலித் வாழ்வு- அவர்களது வரலாற்று பங்களிப்புகள் என நாவலில் உள்ள ஒரு ஆதிக்க வெறியை வாசகனின் கற்பனைக்கு இடம் விடாமல் நாவல் ஒரு பேர் இறைச்சலாக 18 முனிகளின் சாபமாக தொடர்கிறது. தமிழ் புனைகதையில் இது காறும் இப்படி ஒரு தஸ்தாவேஜ் லோடு சாத்தியப்பட்டதில்லை. இது மற்றுமோர் அடிப்படைவாத- பாசிச சாதனை."

அடுத்த பதிப்பில் நாவலின் அட்டையில் இந்த வரிகள் இடம் பெற்றால் வாசகனுக்கு அது சுலுவாய் இருக்கும்.

(டவுன் லோடு போல் இந்த பதிவின் வாயிலாக "தஸ்தாவேஜ் லோடு" என்கிற வார்த்தையை தமிழ் பினைவுலகிற்கு என பங்களிப்பாக வழங்குகிறேன். இந்த நாவலை என் துறைக்காக வாங்கி வந்தோம், இப்பொழுது HOD இதை ஏற்க மறுக்கிறார் இந்த மாதம் சம்பளத்தில் ரு.530 அவுட்(10% கழிவு போக), அது சரி அதை வைத்து நான் என்ன செய்வது )

Tamileniyan
2009-02-28 01:41:00
tamileniyan_G@infosys.com

களவும் அதில் ஈடுபட்ட அந்த சமூக மக்களையும் கொச்சைப்படுத்துகிறது இந்த நாவல். வரலாறு நெடுகிலும் துருட்டும் அது சார்ந்த வாழ்வை ஏற்றுக் கொண்டவர்கள் கள்ளர்களில் 5% ஆனவர்கள் கூட கிடையாது. குறிப்பாக எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் கள்ளர் சமூகத்தில் பிறந்தவர்களே. நாங்கள் வம்பாடுபட்டு உழைத்து கஞ்சி குடிக்கும் சம்சாரிகள், விவசாயக் கூலிகள். சீமக்கருவேலையை வெட்டி மூட்ட போடுவது, உழவு, தார் ரோட்டு வேலை, கட்டிடத்தில் வேலை, வட இந்தியாவுக்கு சென்று முறுக்கு சுடுதல் என எங்கள் வேலை தேடி அலைந்த கால்கள் வடை சுடுவது, டீ கடை, மூடை துக்குதல் ( லோடு மேண்) என பரினாமம் பெற்றுள்ளது. எங்கள் வாழ்வு வரலாறு நெடுகிலும் அவலம் சுமந்த ஒரு நரகமாகவே உள்ளது. ஆனால் எங்கள் சமூகத்தில் சில கருங்கலிகள் அடியாட்களாக, தார் பாய், லாரி டையர் திருட்டு என திருட்டும் அதிகார வர்க்க கைகூலிகளாகவும் இருப்பது தான் பிரச்சனையிம் ஆரம்பம். இவர்கள் உருவாக்கி உள்ள அவப் பெயரால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு உள்ளுரில் வேலைக் கிடைப்பதில் கூட பெரும் பிரச்சனைகள் உள்ளது. திமுக, அதிமுக, மதிமுக, தேதிமுக என இங்குள்ள கம்யுனிஸ்டு கட்சிகள் வரை ஜாதி பார்த்து வேட்பாளரை முடிவு செய்தல் என்கிற காரணத்தால் எங்கள் கள்ளர் சமூக ஆட்களுக்கு மதுரை மற்றும் தென் மாவட்டகளில் சிறு பதவிகள் வழங்கி அவர்களின் காட்டுமிராண்டித்தனமான குனத்தை தக்க வைக்கும் வேலை இடைவிடாது நடந்து வருகிறது. அதை தான் இந்த நாவலும் செய்கிறது. கள்ளர்களை கொம்புசீவி விடுகிற காவாலித்தனமான வேலையின் மற்றோரு வடிவம் இது. கள்ளர் பெண்கள் பற்றிய பாலியல் பதிவுகளில் கூட நேர்மையில்லை உள்நோக்கம் உள்ளது.

நான் BITS PILANI யில் படிக்க சென்ற போது கூட பலரும் என ஜாதியின் மூர்க்கம் கருதி முதலில் பழக மறுத்தார்கள், இப்பொழுது நான் வேலை செய்யும் மென் பொருள் நிறுவனத்திலும் அதே Stigma தொடர்கிறது.
மாடு திருடுவது சரி அது என்ன ராஜ களவு, ஏதோ மதுரை பிரதேசம் முழுவதும் மாட மாளிகைகளால் நிரம்பி வழிந்தது போல் சித்தரிப்பது, அதில் இவர்கள் ராஜ களவி செய்தார்கள் என்ற பேத்தல் எல்லாம் ரோம்ப ஒவர். களவைக் கூட மானுடவியல் பார்வையில் பார்க்க தவறிய நாவல் அதை Romantisize செய்கிறது. எங்கள் மேலுள்ள கரைகளை நாங்கள் வெவ்வேறு Profession's க்கு சென்று கழுவ முயலும் நவீன காலத்தில் மீண்டும் எங்களின் சேற்றை வாரி அடிக்கிற வேலை. அதிகார் வர்கத்தின் சதிகள் தொடரட்டும் முற்போக்கு முகமூடிகள் முகமாய் மாரட்டும்.

NAGA SUNDARAM
2009-03-01 08:00:00
puduvaignanakumaran@gmail.com

காவல் கோட்டம் எஸ் .ராமகிருஷ்ணனின் விமரிசனம்
காவல்கோட்டம் குறித்த எஸ்.ராவின் விமரிசனம் ஏற்கத்தக்கதோ நாகரிகமானதோ அல்ல. ஒரு சக படைப்பாளியின் உழைப்பை ,உணர்வை ,நோக்கத்தை ,பார்வையைப் புரிந்து கொள்ள மறுத்து அவரது படைப்பை விமரிசனம் செய்வது இலக்கிய அறமாகாது .மணிமாறனின் மறுப்புரை சற்று காரமனதுதான் என்றாலும் எஸ்.ராவின் அபத்த விமரிசனத்தை எதிர்கொள்ள அந்தகாரம் அவசியமாகிறது .மணிமாறனின் மறுப்புரை மீது கூறியுள்ள தோழர்கள் தேவையில்லாமல் தமுஎச மீதான .அதன் மற்ற படைப்பாளிகள் குறித்தும் தங்கள் ஆற்றாமையை அழுதிருக்கிறார்கள் ,பாவம் . அவர்கள் புலம்பலுக்கு ஒரு வாய்ப்பு ,போகட்டும்புதுச்சேரியில் நடந்த காவல் கோட்டம் அறிமுக விழாவில் வா.கீதா நூலின் குறைநிறைகளை மிகத்ளிவாகவே பதிவு செய்தார்.சு. வே ஏற்புரையில் கீதாவின் கருத்துகளுக்கு சரியான விளக்கமளித்தார். ஆனால் கண்ணனின் உரை நூல் குறித்த சரியான பார்வையாக குறைகளைக் கூட நேர்மையாக பதிவு செய்யவில்லை . தமிழினி மூலம் வெளியிட்டதால் சு.வெ . வின் படைப்புக் கற்பையே அவர் கேள்விக்கு உள்ளாக்கினார் பலரும் பாராட்டும் நூலின் நடையையே அவர் புரிந்துகொள்ளவில்லை . கி ராஜ நாராயணனும் நூலின் மைய ப்பார்வையை சரியாகவே புரிந்துகொண்டு பாராட்டினர் .ஆனால் வாசகர் காயத்ரி புதுசேரி கூட்டத்தில் ஏதோ பேசப்பட்டது மறைக்கப்பட்டது போல் குறிப்பிடுகிறார்.முர்போக்குப்படைப்பளிகளின் எழுத்துகளுக்கு எதிர்மறையான விமரிசனம் ஒன்றும் புதிதல்ல. பிற்போக்கு, நற்போக்கு, வியாபாரப்போக்கு என்று பலரின் அபத்தமான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் புறந்தள்ளிதான் வளர்கிறார்கள் .

Shaji
2009-03-01 09:42:00
shaji_007@yahoo.com

கி.ரா நயினாவுக்கு பிற நாயினாக்களுக்கும் மையக் கருத்து நன்கு புரிந்துள்ளது என்பது தான் மொத்த விமர்சனத்தின் மையக் கருத்து. முற்போக்கு, பிற்போக்கு, வியாபாரப்போக்கு என யார் செய்தாலும் திருட்டின் பெயர் திருட்டு தானே.
தொ.பா வின் அழகர் கோவில், சத்தியநாத ஐயரின் நாயக்கர் வரலாறு, லுயிஸ் துமந்தின் சவுத் இந்தியன் சப் காஸ்டு, வம்சாவழி என தன் கைக்கு கிடைத்த சரக்கை எல்லாம் அதை வைத்திருந்தவ்ர்களிடம் அபேஸ் செய்து, பின்னர் அதன் ஆசிரியர்களிடம் பிரதிகளை உறுவி எடுத்து அந்த காகிதங்கள், புத்தம அட்டைகளை வைத்து தான் மதுரையை பற்றிய கட்-அவுட் தயாரிக்கப்பட்டுள்ளாது.
இப்பொழுது நம் கேள்வியே, இலக்கிய அறம் என்றால் என்ன??? உழைப்பு என்றால் என்ன??? நேர்மை என்றால் என்ன??? பார்வை என்றால் என்ன???
அப்புறம் தமுஎச படைப்பாளிகள் இந்த பிரதி குறித்து என்ன கருதுகிறார்கள் என்பது மிகவும் எளிமையான கேள்வி? இந்த ஜாதிய பிரதியை அவர்கள் ஏக மனதாக ஆதரிக்கிறார்கள் என்றால் அதனை அறிவித்துவிட்டால் பிரச்சனை முடிந்து விடுகிறது. ஜாதிய பிரதிகள் குறித்த உங்கள் நிலைப் பாட்டை இலக்கிய வாசகர்கள் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.
மார்க்ஸ், லெனின் எழுதிய தொகுதிகளை அடுக்கி வைத்து படம் காட்டினால் இனி நடக்காது, கொஞ்சம் அதை வாசிக்க முயற்சியுங்கள் இல்லை காலமும்-வரலாறும் என்றும் உங்களை விடுதலை செய்யாது.

Vijaykumar
2009-03-01 09:43:00
kumarnilavu@gmail.com

நன்பர்களே Great Surpirse இந்த மாத தீராநதியில் எஸ்.ரா எழுதிய ஆயிரம் பக்க அபத்தம் புத்தக விமர்சனம் உள்ளது.

Marxist Durainyani
2009-03-02 06:28:00
durainyani@satyam.com

இன்டர்நெட் வாசகர்கள் கவனத்திற்கு, காவல் கோட்டம் தொடர்பா ஆர்.எஸ்.எஸ் வைதீக அம்பி ஜெயமோகன் ராமகிருஷ்ணனை பற்றி ஏதோ உளறிக் கொட்டிவிட்டு அதற்கு உடன் மன்னிப்பும் கோறியுள்ளார் :

அன்புள்ள ராமகிருஷ்ணன்,

உங்கள் கடிதம் கண்டேன். வெங்கடேசன் உங்களுக்கு தகவல்கள் அளித்து உதவினார் என்பது நான் ‘செவி வழியாக’ கேள்விப்பட்டதுதான். உங்கள் நூல்களிலும் கட்டுரைகளிலும் நீங்கள் வெங்கடேசனை குறிப்பிட்டிருக்கிரீர்கள் .ஆகவே நம்பி விட்டேன். உங்கள் மறுப்பை நம்புகிறேன். அந்த குறிப்புக்காக தாங்கள் மனம் வருந்தியிருந்தால் மன்னிக்கவும்

நீங்கள் குறிப்பிட்ட சில நூல்கள் என்னிடம் உள்ளன. ஆவணங்களை படித்து வருகிறேன். ஆனால் ஜெகதீசன் அவர்களின் நூல்களில் எனக்கு பெரிய ஏமாற்றம் உன்டு. அதை முன்னரே எழுதியிருக்கிறேன்
ஜெயமோகன்

அது எப்படி அய்யா ஒரு போலி இடதுசாரியின் திருட்டு படைப்பி குறித்து வந்த விமர்சனத்திற்கு ஒரு வைதீக ஆர்.எஸ்.எஸ் நம்பி வந்து இத்தனை வீராப்பாக ஜால்ரா தட்டுகிறார்.

Je
2009-03-02 09:35:00
Je_che@yahoo.ci.in

1310-1910 வரை போகும் இந்த படைப்பில் ஒரு தலித கதாபாத்திரம் கூட இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது. மதுரையை சுற்றிய அத்தனை ரானுவச் சாலைகளும் பறையர்களால் போடப்பட்டது, மீனாக்ஷியம்மன் கோவிலை கட்டியதில் உடல் உழைப்பு செலுத்தியது யார்? என்பது போன்ற கேள்விகள் ஏன் அந்த காலத்தை பார்க்கும் ஒருவருக்கு படவேயில்லை. நாயக்கர்கள் கரிசல் பூமியை தேர்ந்தெடுத்து அதில் பருத்தி விவசாயத்தை துவங்குவதற்கு யார் அடிப்படையானவர்கள் என்பது தெரியுமா? நாயக்கர்களின் படையில் பெரும் பகுதி எந்த சமூகத்தார் இருந்தனர் என்பது போன்ற அடிப்படைகள் கூட இந்த நூலில் இல்லை.
ஆக இது ஒரு திட்டமிட்ட ஜாதிய, அதுவும் குறிப்பாக தலித்திய இருட்டடிப்பு பிரதியாகவே விழங்குகிறது. உலகமே மக்கள் வழி வரலாறுகளாக மொத்த வரலாற்று நூல்களையும் திருத்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் இப்படியான ஒரு ஜாதிய வெறிபிடித்த பிரதி உறுவாகியுருப்பது இந்த காலத்திற்கே அவப் பெயராக உள்ளது. இப்படி ஒரு பிரதிக்கு எப்படி இலக்கிய மூலாம் பூச இத்தனை பேர் முயலுகிறார்கள்?
ஜெயமோகன் இப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்பது எதிர்பார்த்த்து தான். மதத்தை இதுவரை தூக்கிப்பிடித்தவர், மதம் எனும் பிரம்மாண்டத்தை காக்க அதன் அடிப்படை அஸ்தீவாரமான ஜாதியை கேட்டிப் படுத்தும் வேலையில் தான் ஈடுபடுவார் ஜெயமோகன்.

Chandiran
2009-03-03 02:03:00
chand_ooty@yahoo.co.sg

"காவல்கோட்டம் நான் இன்னும் வாசிக்கவில்லை. என் மனநிலை வாசிப்பு எல்லாமே இப்போது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில எழுத்துக்களில் மாட்டிக்கிடக்கிறது. இது என் வழக்கம். ஒரு குறிப்பிட்ட சூழலில் உள்ள எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசித்தபின்னர்தான் விடுபடுவேன்."
இவை சாட்சாத காவல் கோட்டம் பதிப்பாசிரியர் ஜெயமோகனின் வரிகள். திருடியவன் அகப்பட்டவுடன் பங்களி பதுங்கி தப்புது போல, நம்மவர் இப்ப ஜகாவு ஆகிறார்.
காவல் கோட்டத்திற்காக எஸ்.ராமகிருஷ்ணனை சாடியவர் இப்ப காவல் கோட்டத்தையே வாசிக்கவில்லை என போட்டாரே ஒரு போடு.......... இதற்காக இந்த வருடத்தின் "ஒ போடு" விருதை ஞநியிடம் ஜெயமோகனுக்கு வழங்க கீற்று வாசகர்கள் பரிந்துறைக்களாம்.

Jegadeesan Aroor
2009-03-07 07:09:00
jeg_vck@gmail.com

"இங்குள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் இன்று முற்போக்கு இயக்கங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஜாதி எவ்வாறு எல்லாம் ஊடுறுவியுள்ளது என்பதனை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பல நவீன தத்துவங்கள் உலக மனங்களை வித விதமாய் சீர்படுத்தும் வேளையில் பொதுவுடமைவாதிகள் ஜாதியை தூக்கிப்பிடிப்பது மிகுந்த நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்துகிறது. தேர்தல் அரசியலில் கை நனைத்த பிறகு மெல்ல மெல்ல தங்கள் வீரியத்தை இழந்து இன்று ஜாதியை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரிக்கும் இழிநிலை இடதுசாரிகளின் வரலாற்றில் கரும்புள்ளியாக படர்ந்து வருகிறது. தோழர்களே ஜாதி ஒரு பெரும் அபினி தான் என்பதை மறந்துவிடாதீர்கள், அதனை உங்கள் தேவைக்கு ஏற்ப வளர்க்கவோ, ஒழிக்கவோ செய்வது வரலாற்றுப் பிழையாகிவிடும்"

Kirubaakaran
2009-03-08 03:00:00
kriuba_hcl@yahoo.co.uk

ஆயிரம் பக்க ஜாதிய அபத்தம்
தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படி ஜாதிய அபத்தங்களை சுமக்கும் இழுவான பிரதி இது வரை உருவான தில்லை, இந்த பிரதியின் உள்நோக்கங்களை நன்பர்களின் வாயிலாக அறியும் போது இலக்கியம் இவ்வாறு எல்லாம் பயன்பாடு டையதா என்பது ஆச்சரி யமாய் உள்ளது. இலக்கியம் ஒரு உன்ன தமான அனுபவத்தை வாசகனும்க்கும் அதனை எழுதிய வனுக்கும் வழங்குகிறது. அந்த அனுபவத் துக்குள்ளும் மலிவான உள்நோக்கங்கள் புகுத்தப்படுவது வருத்தம் தருகிறது. இப்படி இழி நோக்கம் கொண்ட ஒருவரே அதனை படைக்கும் காலத்தில் நிறைய வாசிக்கும் படியால் திருந்தி மனம் மாற பல வாய்ப்பு இருந்திருக்க வேண்டும். கைதிகள் பலரை சிறைச்சாலை நூலகங்கள் மாற்றியுள்ளதை நாம் அறிவோம். புத்தகங்கள் நம் நன்பர்களாக இருக்க வேண்டுமே தவிர நம் மனதில் வெறி யுட்டும் நஞ்சாக அவை மாறக் கூடாது.
இன்று வெளியாகும் பல தரம் தாழ்ந்த நூல்கள் சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் ஒரு வர்க்கத்தின் சம்பளத்தை கபளிகரம் செய்யும் நோக்கம் கொன்டது. சினிமா, நுகர்வு பொருட்கள் என மோசடிகள் இலக்கியம் வரை எங்களின் சட்டை பையை பின் தொடர்கிறது.
Plagiarism is the use or close imitation of the language and ideas of another author and representation of them as one's own original work. This is one of the best examples of Plagiarism in Tamil. For this Kaval koatam will be surely remembered

Jerome
2009-03-09 09:12:00
pondy_jerome@gmail.com

முற்போக்கு முகமூடிகளுடன் சில கருப்பு ஆடுகள்- இலக்கியத்திலும் அப்பட்டமான திருட்டுகள்
எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி" நாவலில் இருந்து பல சம்பவங்கள் அப்பட்டமாக களவாடப்பட்டுள்ளது, ஏறக்குரைய 6 அத்தியாயங்களில் வரும் சம்பவங்கள் அப்படியே நகல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டை பார்க்கும் போழுது கி.ரா வின் நாவலில் வரும் நிகழ்வை திருடிய இயக்குநர் பாரதிராஜா நீதிமன்ற வழக்கை சந்தித்து பெரும் தொகையை கட்டியது ஞாபகம் வருகிறது. CopyRight, Plagiarism சார்ந்த சட்டங்களை கடுமையாக்கினால் தான் இது போன்ற திருட்டுகளை ஒடுக்க முடியும்.

Yaal KANNAN
2009-03-15 08:38:00
yaal_kannan@yahoo.co.sg

எஸ். ராமகிருஷ்ணனை பிச்சாவரம் கார்னிவலுக்கு அழைத்த போது அவர் மதுரையில் நடக்க இருக்கும் ‘காவல் கோட்டம்’ விமர்சனக் கூட்டத்துக்கு வருவதாக ஒப்புக் கொண்டு விட்டதால் அங்கே செல்ல இருப்பதாகச் சொன்னார். அப்போதே எனக்கு கௌளி சொல்லியது; சொர்க்கத்துக்கு அழைத்தால் நரகத்தைப் பற்றிப் பேசுகிறாரே என்று. நான் நினைத்தபடியே நடந்து விட்டது.

1000 பக்கங்கள் கொண்ட அந்த நாவலைப் படிப்பதற்காக அவருக்கு இரண்டு வாரம் செலவாகி இருக்கிறது. கடைசியில் பார்த்தால் நாவல் என்று வெளி வந்திருக்கும் அது ஒரு காகித பண்டல். ராமகிருஷ்ணனின் வாழ்வில் 14 நாட்கள் வீண். கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்தப் பதினான்கு நாட்களைத் திரும்பப் பெற முடியுமா என்பது என்னுடைய கேள்வி.

நம்முடைய வாழ்வின் பொன்னான நேரத்தை இப்படியெல்லாம் வீணடித்துக் கொள்ளலாமா?

யாரோ ஒரு முன்பின் தெரியாத ஆள் ஆயிரம் பக்கங்களுக்கு எதை எதையோ கிறுக்கி நாவல் என்று சொல்லி உங்கள் கையில் கொடுத்தால் அதை வாங்கிப் படித்து விடுவதா? அந்த நபருக்கு அதை எழுத ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கலாம்; அல்லது பத்து ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். அதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணனின் நேரமும் அந்த ஆளின் நேரமும் ஒன்றா?

இங்கே இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். சாலைகளில் நின்று கொண்டு பிட் நோட்டீஸ் கொடுப்பார்களே; அதை வாங்கிப் படித்திருக்கிறீர்கள்தானே? சென்னை புத்தக விழாவில் முக்குக்கு முக்கு நின்று அம்மாதிரி பிட் நோட்டீஸ்களை விநியோகித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் ஒரு மனிதர் கூட அதை வாங்க மறுத்து நான் பார்த்ததே இல்லை. மிகச் சில பேர் மட்டும் அதை வாங்கி, அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விஷயத்தைப் படிக்காமலேயே கசக்கிப் போடுவது உண்டு. அதனால் என்னிடம் நோட்டீஸ் கொடுத்த அன்பர் “தயவுசெய்து படித்து விட்டுக் கசக்கிப் போடுங்கள்” என்ற விண்ணப்பத்துடனேயே கொடுத்தார். ஆனால் நான் வாங்கவில்லை.

நான் இங்கே சொல்லப் போகும் விஷயத்தை உங்களில் எத்தனை பேர் நம்புவீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை என் வாழ்நாளில் ஒரு நோட்டீஸைக் கூட நான் வாங்கியதில்லை. “வேண்டாம்” என்று சொல்லி மறுத்தே வருகிறேன்.

காரணம்?

அது பிட் நோட்டீஸாகவே இருந்தாலும் நான் என்ன படிக்க வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர பிட் நோட்டீஸ் கொடுப்பவன் அல்ல. காவல் கோட்டம் என்பது ஒரு ஆயிரம் பக்க பிட் நோட்டீஸ். அவ்வளவுதான்.
CHARUNIVEDITHA has written in his site about this Kavalkoatam ..,



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP