Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

கற்பகம்.யசோதர கவிதைகள்

யாருடனோ யாருடைய குடைகளுக்குள்ளோ
நடந்த தெரு வழியே போகிறார்கள் (றோம்)
மாடுகள் ஓடுற வெளிகள் கடந்து
காடுகள் தேடுற வேட்கை இழைய
இத் தெருக்கள்
அவர்க்காகவே (எமக்காகவே) காத்திருக்கின்றன
உ(எ)ன்னிடம் ஏதோ ஒரு துயரம் இருக்கிறது;
இனிய துயரம்!
சமயத்தில்
வன்மமாய் விச நாக்கு நீட்டிடும்
அரவத்தை மறைத்து விடுகிறாய்(கிறேன்)
உ(எ)ன் கண்களில் உதடுகளில் மூக்கில்
நிலைக்கையில்
முகத்தி லிருக்கிற உலர்வை மறந்து போகிறான்
- இவன்.
இன்றைய மங்கள தினம்
காடுகளை விலத்தி
விரியும் பிரதேச மூலைகள் எங்கேனும்
யாரோ புணர்வதற்காய்க் காத்திருக்கிறது;
அறிவாயா அன்பே?
நகரங்கள் தாண்டி நாம் வந்தது இதற்காக


- கற்பகம்.யசோதர ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com