Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

எழுதாக்கவிதை
யரலவழள

Writing அந்த மேசையின் மேல்
நேற்று
ஏற்றிவைத்த மெழுகுவர்த்தி
எரிந்தெரிந்து உருகிவிட்டது
கோப்பையிலிருக்கும் தேனீர்
ஆடைபடிந்து ஆறிவிட்டது
டிக்டிக்கித்துக்கொண்டிருந்த கடிகாரம்
சாவியின்றி நின்றுவிட்டது
மேலேயிருக்கும் காலதரின் வழியே
உட்புகுந்த ஒளிக்கற்றையின் பரவலில்
அறையில் படிந்திருக்கும்
தூசி தெரிகிறது
தூரத்தில் தொங்கும்
பூச்சுப்போன கண்ணாடிக்குள்
சிவந்து வீங்கிய கண்களோடு
என் முகம் தெரிகிறது
தொடைக்குக் கீழிருக்கும் கால்கள்
உணர்வற்றுவிட்டன
தூவலைப் பிடித்திருந்த விரல்களில்
தழும்புகள் விழுந்துவிட்டன
சொற்களைத் தேடித்தேடி
சேர்ந்த மூளை
களைத்துவிட்டது
எனினும்
இன்னும் அந்தக்கவிதை
எழுதப்படாமலேயே இருக்கிறது

-யரலவழள ariaravelan.k@gmail.com

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.