கட்டுரை
நான்.....?
விஜயகுமார்
எனக்கான தொடக்கத்தை
எங்கேயோ ஓர் விந்தணு
விரயம் செய்தது ..
எனக்கான தாலாட்டை
எங்கேயோ ஓர் குயில்
கூவிசெல்கிறது...
எனக்கான சுவாசத்தை
எங்கேயோ ஓர் மரம்
சுத்திகரிக்கிறது...
எனக்கான தாகத்தை
எங்கேயோ ஓர் மழைத்துளி
தத்தெடுக்கிறது...
எனக்கான பயணத்திற்காக
எங்கேயோ தைக்கப்படுகின்றன
அனுபவசெருப்புகள்...
எனக்கான அறிவிற்காக
எங்கேயோ வளைக்கப்படுகிறது
ஓர் வினாக்குறியின் விளிம்பு...
எனக்கான காமத்திற்காக
எங்கேயோ உடைகிறது
ஓர் உதிரக்குடம்...
எனக்கான முடிவிற்காக
எங்கேயோ ஈடு செய்கிறது
இன்னொரு தொடக்கம்....
இதில்
எங்கே நான்.....?
- விஜயகுமார் (sweetiepievjy@gmail.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|