Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

மானமுள்ள...
உழவன்

Rainy Day நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்துவங்கினர்

வாகனங்களின் வேகம்
சாலைகளில்
சற்றுக் கூடியிருந்தது

குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்

இவ்வளவு
நேரமாய்ப் போகாதவன்
இப்பொழுது பார்த்தா
செல்லவேண்டும் கடைவீதிக்கு
வாஞ்சையுடன்
வருத்தப்பட்டாள் அம்மா

குளிர்பானம் விற்பவன்
சலித்துக்கொண்டான்

வராந்தாவில் விளையாடிய
குழந்தைகள்
வீட்டினுள் அழைக்கப்பட்டு
கதவு சாத்தப்பட்டது.

"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்

திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!

- உழவன் (INK@audcoindia.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.