Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நீயும் நானும்
உதயகுமார்.ஜி

Love உனக்கும் எனக்குமான
இந்த நீண்ட பயணத்தில்
நெருங்கியே நடக்கின்றன
நமக்கான பிரிவுகள்.

நான் வசிக்கும்
பருவத்தில் என்னைப் பார்த்து
பசுமையாய் சிரிக்கின்றன
இலையுதிர் காலங்கள்.

ஆண்டுகள் தோறும்
அடைகாத்து வரும்
நீர்நிலையின் நிசப்தத்தை
கலைத்துப் போகும்
கல்லை போலதான்
உன் புன்னகையும்
என்னைக் குலைத்து
போகின்றன.

வடுக்களில் வழியும் இரத்தத்தில்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

புதியதாய் ஏற்படும் எந்த காயமும்
உன்னைத் தேடுகையில்
நீ தந்ததைப்போல்
பெரிதாய் வலிப்பதில்லை.

நீ கேட்பதை மறுப்பதும்
நீ மறுத்ததைக் கேட்பதும்
என்னால் இயலாத ஒன்று.

நாம் ஒன்றாகப் பயணித்த
அந்த பேருந்துப் பயணத்தை
நினைவுபடுத்துகின்றன.
எனது எல்லாப் பயணங்களும்.

இறுதிவரை புரிவதேயில்லை.

நீ இருப்பதற்கான
காரணமும்
உன்னை இழப்பதற்கான
காரணமும்


- உதயகுமார்.ஜி (nesan_buhk@yahoo.co.in)

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.