Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

தொனி
தர்மினி

Sorry சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன
வீதியில் போனவர்களும்
வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்
ஆற்றாமையுடன் நான் சொல்லும் சமாதானங்கள்
அவன் காதுகளிலிருந்து நழுவி காலடிகளில் மிதிபட
என் வீட்டில் ஆதரிக்க ஆளில்லாத அகதியானேன்.

மறுநாள் மெதுவாக வந்தானவன்
என்னிரு கைகள் பிடித்து
ஒற்றைக் காதில் மட்டுமே ஒலிக்க
இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல்
மெல்லச் சொன்னான்
"மன்னித்து விடு"

என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படிக் கேட்கும்?

- தர்மினி(tharmini@hotmail.fr)

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.