Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

சனாதன தத்துப்பிள்ளைகள்
தனிக்கொடி

கட்டுக் குலையாத
வர்ணக் கொழுப்பில்
மறித்துக் கட்டப்பட்ட சுவர்கள்
நிற்கின்றன கேலிச்சித்திரமாய்

தாமே வேலிகட்டி
இணக்கத்தை மேய்ந்து வந்திருக்கின்றன
ஊருக்குள் வெள்ளாடுகள்

அம்பலப்பட்டது
முப்பிரி நூலைவிடவும் மூர்க்கமானது
சனாதன தத்துப்பிள்ளைகளின் நரம்புகள்

மேனியில் பட்டுவிழுந்த அரசமர நிழல்
தரையை மெழுகுகின்றன கருப்பு ரத்தமாய்

காற்றையும் பிளவுபடுத்த எத்தனித்து எழுப்பிய
மதில்கள், பின்னங்கால் தூக்கிய
நாய்களுக்கு பயன்பட்டதன்றி
வேறொரு.. இல்லை

உறைமாட்டிய கரங்களால்
நீக்கப்பட்ட மின்சாரம்
பன்மடங்காய் கசிந்து பரவுகிறது
சகல நீர்மங்களிலும்

இதுநாள் வரைக்குள் அவர்களின் குறிகள்
புரையோடிய கபாலப் புண்ணிலிருந்த
சீழைத்தான் பிதுக்கி இருக்கின்றன
இனவிருத்திக்கு

பறிமுதல் காலத்திற்கு முன்னதாகத
திருப்பித் தரப்பட்ட அட்டைகளில்
அடையாளப்படுகிறது வந்தேறிகளின் மாற்றுமுகங்கள்

அடிவாரங்களில்,
தோப்புத் துரவுகளில் அடுப்பெரிக்கப்பட
சாம்பல் மேடாய்த் தெரிகிறது மலை!
புகையாய்ச் சூழ்கிறது இருள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.