Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

இனப்படுகொலையினூடே...
தங்கம்

Vanni கலைக்கப்பட்டுவிட்டது
தேன்கூடு இரசாயனப் புகையால்
மயங்கி கிடக்கின்றன உயிரோடு
எஞ்சியுள்ள தேனீக்கள்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன
தன் உறவுகளுடன் முல்லைப் பூ
தேனை சிந்தியபடி அங்கே

தொங்கப்போட்டுக்கொண்டு திரிகிறது
சிங்கவால் குரங்கொன்று
தேனுக்காக நாக்கை.

ராணித் தேனீயை குறிவைத்து
ஊர்ந்து கொண்டிருக்கின்றன
'ரா' பெற்றெடுத்த பல்லிகள்

உருண்டுகொண்டிருக்கின்றன
காலச்(அசோக)சக்கரம் பின்னோக்கி!
மொழிக்கு முந்தைய பாதையில்

விடுபட்டுக்கொண்டிருக்கிறது
தமிழர்களின் மென்மைத்தனம்.

- தங்கம் (thangampandi@ymail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.