கவிதை
இனப்படுகொலையினூடே...
தங்கம்
கலைக்கப்பட்டுவிட்டது
தேன்கூடு இரசாயனப் புகையால்
மயங்கி கிடக்கின்றன உயிரோடு
எஞ்சியுள்ள தேனீக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
தன் உறவுகளுடன் முல்லைப் பூ
தேனை சிந்தியபடி அங்கே
தொங்கப்போட்டுக்கொண்டு திரிகிறது
சிங்கவால் குரங்கொன்று
தேனுக்காக நாக்கை.
ராணித் தேனீயை குறிவைத்து
ஊர்ந்து கொண்டிருக்கின்றன
'ரா' பெற்றெடுத்த பல்லிகள்
உருண்டுகொண்டிருக்கின்றன
காலச்(அசோக)சக்கரம் பின்னோக்கி!
மொழிக்கு முந்தைய பாதையில்
விடுபட்டுக்கொண்டிருக்கிறது
தமிழர்களின் மென்மைத்தனம்.
- தங்கம் (thangampandi@ymail.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|