Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

மறுபடியும் உன் ஆன்மாவைத் தொட இயலுமா
தாரா கணேசன்
ஒரு ஆழ்ந்த அன்பை இழந்தபிறகு
எல்லாவற்றையும் இழந்தது போலத்தானிருக்கிறது

என் கனவுகளைக்கூட நெருங்காதிருக்கிறாய் நீ
தூக்கமின்றித் திறந்திருக்கும் கண்களில்
உன் நிழற்படம் நிரம்பியிருப்பதை
நீ அறிந்திருக்க இயலாது

என்றேனும் நீ என்னருகில் வருவாய்
மென்மையும் இனிமையுமாய் மகிழ்ச்சி பொங்க
அணைத்துக்கொள்வாய்
முடிவற்ற கனவொன்றின் உறையிலிட்டு மூடிவிடுவாய்

என் வலிகள் மிகுந்த மனம் தாபங்கள் பொங்க
காலத்திற்கும் வெளிக்கும் இடையில் பறக்கும்
இன்னொருமுறை உனது அரவணைப்பில் கரையவும்
இன்னொரு முறை உனது ஆன்மாவின் நெருப்பில் எரியவும்

நினைத்துப் பார்ப்பதற்கு எல்லாம் மிகவும்
எளிதாய்த் தான் இருக்கிறது
யதார்த்தமாகத் தான் இருக்கிறது

- தாரா கணேசன் (dean.avit@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.