Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

கனவின் விளிம்புகளில்
தாரா கணேசன்
முடிந்து போகும்

தேவதைக் கனவுகள்

வைகறையை வழிமறித்து

இரந்து நிற்கின்றன

தொடர்ந்து நகரும்

காலச்சக்கர வியூகச் சுழற்சியின்

சுடர்ப்பிரகாசம் வியாபித்து

போய்க்கொண்டேயிருக்கிறது

ஞாயிறின் புரவிக்குளம்புகள்

அலட்சியப் ப்ரியம் வழிய

அவசரமாய்த்

தன் வழக்கமான பாதையில்


2.

எப்போதும்

சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே

கிடப்பதேன் விடுதலைகள்?

தொடக்கங்களின் முடிவும்

முடிவுகளின் தொடக்கங்களுமே

தேடல்களின் கருப்பையாகின்றனவா?

புதிய மொழி புதிய தேடல்

புதிய காலம் புதிய பிரபஞ்சம்

என பழையதனைத்தையும்

புதுப்பிக்கும் ஆற்றலுள்ள வஸ்து எது?

தீட்சண்ய பேரெழுச்சிக்கான

கந்தகம் பொதித்த

எனது அக்கினிக்குஞ்சு

எந்த வனத்திலிருக்கிறது?

ஆதியின் வேர்களற்று

அந்தமற்ற சுயம்புவாதல் எப்போது?

3.

கரைகளற்ற அலைகள்

இருளில் எழும்பியாட

பிரளயமொன்றில் கரையும் உலகம்

பிரபஞ்சத்துளியா சமுத்திரம்?

4.

இன்று என் ருதுவனத்தில்

முளைத்தபடியிருக்கின்றன

புதிய விருட்சங்கள்

மகா காத்திரமான முடிசொன்று

அவிழத்தொடங்கியிருக்கும்

இந்த பிரம்மமுகூர்த்தக் கணம்

எல்லாத்தடைகளையும் உடைக்கும்

உத்வேகம்.

- தாரா கணேசன் (dean.avit@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.