Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை
பெயர் சொல்லும் கவிதை
தாஜ்

யாரும் எழுதாத
கவிதை யொன்றை
கண்டுதரும் எண்ணமுண்டு.
உன்னத தரிசனத்திற்கு
பக்திச் சிரத்தை அவசியம்.
எழுதிக் கொள்ளுங்கள்
யாரும் பேசாதப் பேச்சை
எழுதாத எழுத்தை
பார்க்காத பார்வையை.

உங்கள் உள் அறைகளில்
மண்டிக் கிடக்கும்
குப்பைகளின் மக்கிய வீச்சம்
மண்டையைப் பிராண்டும் முன்
கூட்டிப் பெருக்கி முதலில்
ஸ்தலம் பேணுங்கள்.

தட்டுப்படும் நேர்த்தியான
கலாச்சார வட்டங்களை
துடைத்தெடுத்து
உயரத்தில் மாட்டுங்கள்.
நீதி போதித்தப்
புத்தகங்களையெல்லாம்
துடைத்தெடுத்து
பத்திரப் படுத்திவிடுங்கள்.
பாசத்தையும் பிரியத்தையும்
விசேச காலங்களில் பேணுங்கள்.
.
பொக்கிஷ வார்த்தைகளின்
விரயம் தவிர்க்க
இருப்பை திறக்காதீர்கள்.
கொள்கை முழக்கங்களையும்
லட்சிய வேட்கைகளையும்
கண் இழந்து
யாசிப்பவர்களிடம்
மனமுவந்து தந்துவிடுங்கள்.

எட்டி நடைபோடும் நாளில்
இடிபடும் வண்ணப் பூச்சு
மேவும் அழகே அழகு.
கதவுகள் திறந்தே இருக்கட்டும்
ஒளிக்கீற்று மினுக்கும்
சாளரங்களில் தட்டாது
பக்ஷிகள் படபடக்கும் நித்தம்.

- தாஜ் (satajdeen@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.