Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை
தியானம்
சூர்யா

சிந்தனையின்றி
சிறிது நேரம்
ஒற்றைப் புள்ளிக்குள்
ஓராயிரம கோடி ஒளி வேகததில்
தடுமாற்றமின்றி
நழுவிக்கொண்டு.........
எங்கு போகிறோம்
என்கிற கேள்வியை
புள்ளிக்கு வெளியே
பரிதவிக்க விட்டபடி
கணநேரமா
கற்ப காலமா
என்பதை கணிக்கும்
திறமை இழந்தவனாய்
ஒப்பிட்டு பார்க்க
ஒன்றுமற்ற
கொடுத்து வைத்த
ஏழையாய்.......
கால வெளியை
தரிசித்தபடி
முடிவற்ற எதற்குள்ளோ
மேலேயா கீழேயா
என்றறியா இடையீடன்றி
பயனிப்பவனை
பார்க்க முடியாமல்
உணர்ந்தபடி........
திரும்பிச்செல்ல
மனமில்லா
திகைப்பிற்குள்
என்றென்றும்
எடுத்துச் சொல்ல
வழியறியா
ஆதங்கத்துடனும்
தோல்வி முகத்துடனும்
ஒரு
முழுமையான அடிமை - இங்கு
தலைவணங்கியபடி

- சூர்யா (da.rising.sun@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.