Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

புத்தகப் பறவைகள்
சுகிர்தராணி

விற்காது மீந்த பறவைகளை
திரைகிழிந்த அலமாரியில்
அடுக்கி வைத்திருக்கிறேன்
சமயங்களில்
தாய்மை ஊற்றெடுக்க
அவற்றின் சிறகுகளைக் கோதிவிடுவேன்
வரத்தாமதமான
மழைநாளின் இரவொன்றில்
இரத்தம் சொட்டச் சொட்ட
கீழே விழுந்துகிடந்தது ஒரு பறவை
மயிர்க்கால்களோடு பிடுங்கப்பட்ட
அதன் இறகுகள்
கழிவுக்கூடையில் சுருண்டுகிடந்தன
தூக்கத்தின் கைகளில் அகப்படாத
இரண்டு சிறுவர்கள்
பறவைகளை எரித்த நெருப்பில்
குளிர்காய்த்து கொண்டிருந்தனர்
எஞ்சியவை
இருட்டில்மிளிரும் கொடூரவிலங்கின்
கோரப்பார்வையைச் சிந்தின என்மேல்.
பறவைகள் பறவைகளாகாமலிருப்பதன்
இரகசியம் புரிந்தது எனக்கு.


- சுகிர்தராணி

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com