Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

வெறுமை
ஸ்ருதி ரமணி

sad பூடகமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை
புரியாத புதிர்தான்
இறுக்கமான அமைதியில்
விரும்பி நிலைக்கும் தனிமையில்
அலைபாயும் எண்ண ஓட்டங்கள்
குவியும் வெற்றிடப் புள்ளியில்
சுற்றிலும் புலப்படாத உருவமற்ற வெளி
உணர முற்பட்டு
உணர்ந்ததாக பாவித்து
உயிர்ப்பித்துக் கொள்ளும் தன் முனைப்பு
புள்ளியே புதிராய்த் தோன்ற
புரிய நிற்பது எது?

தேடுதல்தான் வாழ்க்கை
தேடித் தேடிச் சலிப்பதும்
மீண்டும் மீண்டும் தேடுவதும்!
கைப்பிடியில் இழுபடும்
லகானின் மறுமுனையில்
காலக் குதிரை
கட்டறுத்துக் கொள்ளத்
துடிக்கிறது!
ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றென்ற
புள்ளியை நோக்கிய
பயண இடுகையில்
விரட்டி இழுக்கிறது
வீணாகும் பொழுதுகள்
எவ்வளவுதான் பயணித்தாலும்
எத்தனைதான் தேடி நின்றாலும்
எல்லாமும் அடங்குவது
எங்கென்று சொல்ல?
பிரமையும் பிரேமையும்
பிய்த்தெறியும் வாழ்க்கை!!

- ஸ்ருதி ரமணி (ushadeepan@rediffmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.