கவிதை
எனக்கான வார்த்தை சில்வண்டு
உன்னிடம் சொல்லிவிடவென்று
உருவாக்கி வைத்த வார்த்தையொன்று
சொல்லப்படாமலேயே காத்திருக்கிறது
உனை கடக்கையில்,
வழக்கமான புன்னகையில்,
மணிக்கனக்கான உரையாடலில்,
ஒரு பொழுதினில்
என் கண்களோ, செய்கைகளோ
ஏதோ ஒன்று உணர்த்தியிருக்கக்கூடும்
நான் சொல்லிவிட துடிக்கும் வார்த்தைதனை
பாசாங்கில் பவனி வரும்
உன்னிடம் கூட எனக்கான வார்த்தை
தவமிருக்கக்கூடும்..
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|