கவிதை
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
என்ன செய்ய..?
இன்ன பிற விஷயங்களென்றால்
இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க
பெண் காதல் காமம் என்றால்
பெருக்கெடுத்து ஓடி வரும்
இந்த கவிதை வரிகளை
என்ன செய்ய?
கவன ஈர்ப்பு...
மற்றவர் கவனத்தை
ஈர்ப்பதுதான் முக்கியம்.
இன்னபிற
ஆயிரம் வழிகளில்
நீங்கள்
என் வரைக்கும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதைகளை.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|