Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

சிறு கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன்

01
வந்த போதெதுவும்
சூது வாதில்லை.

போவதற்குள் எத்தனை
பொய்ப்பித்தலாட்டங்கள்?.


02
இன்றென்ன
கிழித்துவிட்டோம்.

நாளை மீது
நம்பிக்கை வைக்க.


03
இன்னொரு காதலென்றால்
இனிக்கத்தான் செய்கிறது.

இருபதிலும்
அறுபதிலும்.


04
நெடுநேரம் பறப்பதில்லை
நைந்த நூலில்
நாள்பட்ட காற்றாடி.


05
கவியெழுதி பிழைத்தல்
கடினம்.
காதலின்றி சாதல்
போல.


06
காதல் போயின்
இன்னொரு காதல்.

07
இருந்தவரைக்கும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

போனபிறகென்ன
பொன்னாடையும்
பூமாலையும்.


08
சலிக்க சலிக்க
புணர்.

சாவதற்கு முன்
உணர்.


09
இன்னொரு நாள்
இன்னுமொரு நாள்
இப்படியே இன்னும்
எத்தனை நாள்.

10
இருப்பதற்கா?
இறப்பதற்கா?
இப்படி எரியுதிந்த
மெழுகுவர்த்தி?

11
இருந்து இளைப்பாறி
பசையான இடம்பார்த்து
பறந்து நீ போக
இவன் முகத்திலென்ன
இளிச்சவாயன் என்றா
எழுதி ஒட்டிஇருக்கு?

12
சொன்னபடி
சொல்படி

சோத்துக்கு
சிங்கியடி.


- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.