கவிதை
செம்புலப்பெயல்நீர் சரவணன்.பெ
எனக்கு நிலவைப் பிடிக்கும்.
அவளுக்கு நட்சத்திரங்களை...
நான் கவிதை எழுதுவேன்.
அவள் கணக்கில் புலி...
நான் வண்ணத்துப்பூச்சிகளோடு
பேசிக்கொண்டிருப்பேன்.
அவள் கேபிள் டிவியில் மூழ்கி இருப்பாள்...
நான் பனிமழை பொழிகிறதென்று
வேடிக்கை பார்க்க அழைப்பேன்.
அவள் வீடு நனையாமலிருக்க
கதவை சாத்துவாள்...
நான் மெதுவாய் மலர்த்த நினைப்பேன்.
எல்லாவற்றிலும் அவசரம்தான் அவளுக்கு...
இத்தனைக்கும் நான் தான் உயிரென்று
நூறு தடவை தாலியை தடவிக்கொள்வாள்...
- சரவணன்.பெ (kurinjithinai@gmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|