Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

விளங்காத வரிகளுக்குள்
சக்தி சக்திதாசன்

விளங்காத வரிகளுக்குள்
விதைக்கின்றாய் கவிதைகளை
விளையாட்டாய் ஓடிவிட்ட
காலங்களின் மெளனராகம்

புதைத்து வைத்த உண்மைகள்
புலருகின்ற பொழுதென்று ?
புரியாத புதிர்களுக்கு விடை,

பகருகின்ற வேளை எப்போ ?
உனக்குள்ளே கேள்விகள் தோழா ...
உனைத்தானே அரிக்கின்றன
உண்மைகளின் பாரம் ஏனோ
உள்ளத்தை அமுக்கின்றன

ஈரமில்லா இதயங்களின்
காரமிகு செயல்களெல்லாம்
சாரமிகு அனுபவங்களை எமக்கு
சாராமாரியாக அள்ளித் தருகின்றன

யாருமறியாச் செய்கைகளென அவர்கள்
ரகசியமாய்ச் செய்யும் செயல்கள்
தானறியும் எதுவும் தெரியாதோ
தத்தமது மனசாட்சி அதுதான் அரசாட்சி

அகலத்தையே புலர வைக்கும்
ஆதவனின் ஒளியதனை மறைக்கும்
கருமேகம் நிலைப்பதெல்லாம்
கணநேரம் மறவாதே!

- சக்தி சக்திதாசன். (sathnel.sakthithasan@bt.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.