 |
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 16
எம்.ரிஷான் ஷெரீப்
இங்கெல்லாம் அழகிய பூங்காக்கள்
தன் தரையெங்கும் கொடி பரப்பி
நடைபாதையோரம் பூக்களைச் சூடுகின்றன
மறுபுறம் நீலநீர் தெளிந்த பெரிய குளம்
இரவானால் நிலவையும் நட்சத்திரங்களையும்
போர்த்திக் கொண்டு உறங்காமல்
காற்றை இமைக்கின்றன
இப்பாதையெங்கிலும்
சாந்தம் மிக்க மாலைப்பொழுதொன்றில்
உன் கரங்கள் கோர்த்து நடந்திடும் வேட்கை
மனதின் இருப்புகள் தேக்கிவைத்து முணுமுணுக்கும்
ஓரினிய பாடலைப் போல
என்னுள்ளே உறைந்து கிடக்கிறது
நாம் நடக்கலாம்
மேகங்கள் சலனமற்று அசைவதைப் போல
நீர் மட்டம் தன்னுள் பாதங்களை ஏந்தி நகர்த்தும்
அந்த அன்னப்பறவைகள் போல
உன் கண்ணாடித் தொட்டி மீன்கள் போல
அந்தச் சாரலைப் போல தூறலைப்போல
இன்னும் என்னென்னவோ போல
நாம் நடக்கலாம் என்னோடு வா
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (msmrishan@yahoo.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|