Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 16
எம்.ரிஷான் ஷெரீப்

Lover இங்கெல்லாம் அழகிய பூங்காக்கள்
தன் தரையெங்கும் கொடி பரப்பி
நடைபாதையோரம் பூக்களைச் சூடுகின்றன
மறுபுறம் நீலநீர் தெளிந்த பெரிய குளம்
இரவானால் நிலவையும் நட்சத்திரங்களையும்
போர்த்திக் கொண்டு உறங்காமல்
காற்றை இமைக்கின்றன

இப்பாதையெங்கிலும்
சாந்தம் மிக்க மாலைப்பொழுதொன்றில்
உன் கரங்கள் கோர்த்து நடந்திடும் வேட்கை
மனதின் இருப்புகள் தேக்கிவைத்து முணுமுணுக்கும்
ஓரினிய பாடலைப் போல
என்னுள்ளே உறைந்து கிடக்கிறது
நாம் நடக்கலாம்
மேகங்கள் சலனமற்று அசைவதைப் போல
நீர் மட்டம் தன்னுள் பாதங்களை ஏந்தி நகர்த்தும்
அந்த அன்னப்பறவைகள் போல
உன் கண்ணாடித் தொட்டி மீன்கள் போல
அந்தச் சாரலைப் போல தூறலைப்போல
இன்னும் என்னென்னவோ போல
நாம் நடக்கலாம் என்னோடு வா

- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (msmrishan@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.