|
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 03
எம்.ரிஷான் ஷெரீப்
சூரியனின் உஷ்ணமற்ற மென்கீற்றுகள்
இரவுகள் தோறும் உலாவர
உன் அன்பைத் தாங்கிய நெஞ்சு
எப்படி உறக்கம் பெறும்
பனித்துளிகளாயுருகியுன் காதல்
என்னுடல் முழுதும் சிலிர்ப்பைப் பூசுகையில்
கடுங்கோடையிலும் எப்படி வியர்க்கும்
உன்னிடம் வார்த்தைகள் வாங்கி
இப்படி நான் பேசியபடியிருக்கிறேன்
தாமரைப் பூவின் தரிசனமேதுமற்ற
வேர் சேறாய்க் காத்திருக்கிறேன்
நிலாமுற்றக் கிணற்றில் நள்ளிரவில்
மிதக்கும் நிலவைக் காண்கையில்
உன்னை நினைக்கிறேன்
பசுந்தவளையாய் உன்னில் குதிக்கிறது மனது
சலனமற்ற நீரில் எப்பொழுதையும் போல நீ
மென்னடனம் ஆடுகையில் அப்படியே அள்ளிவர
எந்த வாளியாலும் இயலவில்லையென
நானும் குதிக்கிறேன்
நிலா குளித்த நீரில் உன்னுடன் மூழ்கிப் போகிறேன்
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|