Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு...
எம்.ரிஷான் ஷெரீப்

(1)

பனிமழை பொழிந்திடும் பொழுதொன்றையொத்த
குளிர்ந்த கானமொன்றை இசைத்தபடி
நீயனுப்பிய செய்தியினைக் காண்கிறேன்
தேவதை விரல்களின் மந்திரக்கோல்
ஆகாயத்திலிருந்து
மயில்நீல வண்ணத்தை மட்டும் காத்திருந்து பெற்று
வெண்பஞ்சு மேகங்களில் எழுதியனுப்பியது போல
என் கைகளில் எடையின்றிக் கனக்கும் அச் சுபசெய்தி
இரவுகளிலும் எனது வாழ்வின் அத்தனை இருள்களிலும்
பல ஒளி மின்னல்களாக ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சுகையில்
நரம்புகளில் இனிமையாய் அதிர்கிறது

இப்பொழுதெல்லாம்
எனைச் சூழ உள்ள எல்லா மூலைகளிலும்
பூவினை அணைத்தபடி நீயே நிற்கிறாய்
என்றுமே வாடாப் பூவொன்று
வாசனை மிக்க தன் மனதோடு அணைத்தபடி
இக்காதல் பூவினைக் கொண்டாடுவதை
எண்ணி எண்ணித் திளைக்கிறதென் மனது
மலர்க்காடே எப்பொழுதில், எந்தச் செடியில்
பூத்ததிந்த முதல் பூ
காதல் பூ


- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (msmrishan@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.