Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை
கருவறைக் காதலி
ரசிகவ் ஞானியார்

Mother and child கடலும் கண்ணீரும் தாண்டி - என்னை
நினைத்துக்கொண்டிருப்பவளே !
கருவறை முதலாய் என்னை
காதலிப்பவளே... அம்மா !
நான்
கருப்பையில் விக்கியபோதே நீ
தண்ணீர் குடித்தாய் !
என்மீது
ஈக்கள் மொய்த்தால்கூட நீ
கண்ணீர் வடித்தாய் !
என் கைகளில் குத்திய
ஊசியின் வலியை
மூளை உணர்த்தும் !
என் வயிற்றில் வருகின்ற
பசியின் நிலையை
நீயே உணர்வாய் தாயே !
என் இரண்டாம் மூளையே !
நான்
பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய் !
எனக்கு
காய்ச்சல் என்றால்
நீயுமல்லவா
கஞ்சி குடிப்பாய் !

என்னை
தடவிக்கொடுக்கின்ற எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !
உன்
விரல்கள் மட்டும்தானம்மா -
இந்தப் பாலையில்
என் பாதம்
பொசுங்குமுன்னே...
தோலாய் வந்து நிற்கிறது !
உன் சமையலை
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்
தயவுசெய்து
நீ அனுப்புகின்ற
கடிதத்தில் ஒரே ஒரு
சோற்றுபருக்கையாவது ஒட்டு !
நானும் ஒரு அன்னப்பறவைதானம்மா
ஆம்
நீ அனுப்புகின்ற
இனிப்பு பொட்டலங்களிலிருந்து - உன்
இதயத்தை பிரித்தெடுக்கிறேன் !
உன்
கருப்பை மூலம் எனக்கு
இரப்பை கொடுத்தவளே !
உன் மீது
வெறுப்பை கொடுக்குமுன் - இறைவன் எனக்கு
இறப்பை கொடுக்கட்டும் !

ஆம்
நான் இறைவனிடம்
பிரார்த்திப்பதும் அதுதான்.
நான் கேட்டு
நீ மறுத்த நாட்களை
நான் சந்தித்ததேயில்லை...
அதுபோல
நீ கேட்டு
நான் மறுக்கும் நாளொன்றில்
என் பெயர் பிணம் !

- ரசிகவ் ஞானியார் (rasikow@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.