Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை
கைதட்டுங்கள்! காதல் தோற்றுவிட்டது
ரசிகவ் ஞானியார்

அன்று பார்த்தது போலவே
இன்றும் இருப்பாயோ?

பரிட்சை தோல்விக்கே
பயந்தாயே..?
இப்பொழுது
சின்ன சின்ன தோல்விகளை
எப்படித் தாங்கிக் கொள்கிறாய்?

யதேச்சையாய்
கடைவீதியில்
காணநேர்ந்தால் புன்னகைப்பாயோ?

கல்லூரி இருக்கை மீது
தாளம் போடும் பழக்கத்தை...
விட்டுவிட்டாயா? இன்னமுமிருக்கிறதா?

அன்றுபோலவே இன்றும்
மழைத்துளிக்குள்
முகம்புதைத்து விளையாடுகிறாயா?

ஒரு இலையுதிர் காலத்தில்
சருகு மிதித்து
சந்தோஷப்பட்ட அந்த
குழந்தைதனம் இன்னமும் இருக்குமா?

இப்படி
எங்கு இருந்தேனும்
எல்லா சந்தர்ப்பங்களிலும்
சின்ன சின்ன நிகழ்வுகளிலிருந்து கூட
காதலைப் பிரித்தெடுக்கத் தவறுவதில்லை.
பிரிந்து போன காதலர்கள்!

ஆயுள் முழுவதும்
ஆழமாய் மிக ஆழமாய்
காதல் நினைவுகளை
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?

- ரசிகவ் ஞானியார் (rasikow@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.