Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை
முதலாளிகளுக்கு
ரசிகவ் ஞானியார்

Labour முதலாளிகளெல்லாம்...
மூணாவது காட்சிக்கு!
உழைப்பாளிகளோ...
வீட்டுக் காவலுக்கு!
இன்று
உழைப்பாளர் தினவிடுமுறையாம்!

வருத்தங்களோடு ஒரு
உழைப்பாளி பேசுகின்றேன்!

நீங்கள்
பரிதாபப்பட்டு வீசுகின்ற
பிரியாணியை விட - எங்கள்
வியர்வையில் தோன்றிய
சோத்துக்கஞ்சிக்கு...
சுவை அதிகம்தான்!

ஆகவே
தயவுசெய்து எதையும்
தானமாய் தராதீர்கள்!
தன்மானத்தோடு வாழுகிறோம்!

இன்று எந்த
முதலாளிகளும்
அட்சயப்பாத்திரத்தை..
அனுப்பவேண்டாம்!

எங்கள்
வியர்வைக்கு யாரும்..
விழா எடுக்க வேண்டாம்!

மூட்டை சுமந்து சுமந்து
இந்திய ஜனநாயகத்தைவிட
கூனிப்போய்விட்ட எங்கள்...
முதுகுக்கு யாரும்
முத்தம் கொடுக்க வேண்டாம்!

வெயிலில் கறுத்து
புண்பட்ட தோலுக்கு...
பொன்னாடை வீச வேண்டாம்!

நீங்கள்
உடுத்து கிழித்த வேட்டியை...
போனஸ் எனச்சொல்லி
பிச்சையிடவும் வேண்டாம்!

எதுவுமே வேண்டாம்
ஒரே ஒரு
வேண்டுகோள்!

தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!"

- ரசிகவ் ஞானியார் (rasikow@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.