Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

பிணந்தின்னிகள்
இரஞ்சித் பிரேதன்

Dead bodies
பசியில்
போஜனமின்றி
அலைந்து திரியும்
பிணந்தின்னிகளுக்கு
நெடுநாள் கழித்து
வலிமையிழந்து இறந்துபோன
ஒரு முடவனின் சடலம்
மிகுந்த ஏமாற்றம் தருகிறது.

சதா காலமும் படபடக்கும்
அதன் சிறகின்
ஒவ்வொரு இறகிலும்
வீசிக்கொண்டிருக்கிறது
பிணவாடை

அதன் அலகில்
படிந்திருக்கும் உதிரத்தின்
ஓராயிரம் கறைகளுக்கு
நூறாயிரம் பிணக்கதைகள்
ஒளிந்து கிடக்கிறது.

அழுகிய சதைப்பிணங்களை
கொத்தித்தின்று
வயிற்றின் சுருக்கங்களை
சரிசெய்துக்கொள்ளவும்,

எலும்புகள் மற்றும் நரம்புகளை
கொண்டு கூடுகள் அமைக்கவும்,

வானுயுற பறந்து வாழவும்
அவைகள் மரபு மாறாதவை.

ஒரு உயிரற்ற பிணத்தை
தின்று கொழுப்பதன் மூலம்
என்ன வீரமிருக்கு,
வறுமைதான் இருக்கு.

- இரஞ்சித் பிரேதன் (getranjithprethan@yahoo.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.