கவிதை
பிணந்தின்னிகள் இரஞ்சித் பிரேதன்

பசியில்
போஜனமின்றி
அலைந்து திரியும்
பிணந்தின்னிகளுக்கு
நெடுநாள் கழித்து
வலிமையிழந்து இறந்துபோன
ஒரு முடவனின் சடலம்
மிகுந்த ஏமாற்றம் தருகிறது.
சதா காலமும் படபடக்கும்
அதன் சிறகின்
ஒவ்வொரு இறகிலும்
வீசிக்கொண்டிருக்கிறது
பிணவாடை
அதன் அலகில்
படிந்திருக்கும் உதிரத்தின்
ஓராயிரம் கறைகளுக்கு
நூறாயிரம் பிணக்கதைகள்
ஒளிந்து கிடக்கிறது.
அழுகிய சதைப்பிணங்களை
கொத்தித்தின்று
வயிற்றின் சுருக்கங்களை
சரிசெய்துக்கொள்ளவும்,
எலும்புகள் மற்றும் நரம்புகளை
கொண்டு கூடுகள் அமைக்கவும்,
வானுயுற பறந்து வாழவும்
அவைகள் மரபு மாறாதவை.
ஒரு உயிரற்ற பிணத்தை
தின்று கொழுப்பதன் மூலம்
என்ன வீரமிருக்கு,
வறுமைதான் இருக்கு.
- இரஞ்சித் பிரேதன் (getranjithprethan@yahoo.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|