Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

ஈழத்து அகதியாய்..
றஞ்சினி

Eelam எதுவுமே
தெரியவில்லை நண்பனே

கனவிலும் கேட்க்கும்
உறவுகள் ஓப்பாரி

குருதி அறியா
என் குழந்தைகள்
குருதியாய்
அழுது அழுது
காய்ந்த விழிகள்

குதறிக் கிளிபடும்
என்சகோதரி உடல்கள்

சர்வதேசமே காப்பாற்று
கடைசி நிமிடம்வரை
கதறிய குரல்கள்
நந்திக்கடல் சாட்சியாக
தீயுள் மண்ணுள்
புதைக்கப்பட்டதை
எரிக்கப்பட்டதை

பாராமல் இருந்த
கொடிய மனிதர்களை

முடியவில்லை நண்பனே

ஓடிவிழையாடி
இயற்க்கையைத் தின்று
நேரங்கள் மறந்து
குலாவித்திரிந்ததும்
என் அன்னையின்
உடல் சங்கமமானதும்
வன்னிமண்ணில்

யாரும் நினைத்திரா
பொழுதொன்றில்
அன்னியர் புகுந்து
கால் பதித்ததில்
அமைதி அழிந்து
குருதி ஓடுகிறது

பாடித்திரிந்த பறவைகளும்
கனவுகள் வளர்த்த
இழயவர்களும்
கூச்சல்போட்ட சிறுவர்களும்
குலாவித்திரிந்த பெண்களும்
கூடிப்பேசிய வயதினரும்
காணாமல்போயினர்

அள்ளி அள்ளி
வழங்கிய மக்கள்
கை ஏந்தித்
தவிப்பதை

முடியவில்லை நண்பனே

புதைகுழிகள் இப்போ
நவீனமாகி
தடயங்கள் அழிக்கும்
எரிகூடங்களாகிறது
கருகிய மனிதர்கள்
கடலில் கரைகிறார்

காற்றில் இப்போ
நறுமணம் இல்லை
கடல் இப்போ
நீலமும் இல்லை
வானத்தில் இப்போ
வர்ணங்கள் இல்லை

முடியவில்லை நண்பனே
எதுவும்

இன்று என்னிடம்
எஞ்சியிருப்பது
ஈழத்து அகதியின்
வலிகள் மட்டுமே.


- றஞ்சினி (shanranjini@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.