Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நீர்மேல் எழுத்தாகும் யாக்கை

பொதிகைச்சித்தர்


gandhiji இப்படியாகவும் சில இயைபுகள்
எம் மண்ணிற்கும் உமக்கும் இடையே
இழையோடித்தான் கிடக்கின்றன.

எம் உழவனிடம் பயின்றது தானாமே
உம் எளிமைத் திருக்கோலம்?

எம் மகாகவியைப் பத்திரமாகப்
பாதுகாக்க வேண்டினீர்களாமே?

எம் ‘தமிழ்த்தென்றலே’
‘மார்க்சிய உடலில் காந்திய உயிர்’
என்பாராமே?

எந்தை பெரியாரே
‘காந்தி தேசம்’ என்றாராமே?

எம் தமிழிலேயே ஒப்பமிட்டு
எழுதித் தந்தீர்களாமே?
‘நீர்மேல் எழுத்தாகும் யாக்கை’யென...

அண்ணல் மகாத்மா!

எவரேனும் நீராட மடிதந்தே
ஓடிக்கொண்டிருக்கும் நதியெலாம்

சாத்தான் மக்கள் தீர்த்தமாடிட
உம் ‘ஹரிஜன’ங்களுக்கு மட்டும்
தடைவிதிக்கும் படித்துறைகளாய்த்
தேங்கியே கிடக்கும் குளமெலாம்.

இக்குக்கிராம மீதில்தான்
இன்னம்ம்ம்மும் வாழுது இந்திய ஆன்மா!

‘இந்து’மாக்கடலைத் தேசப்பிதாவே
கடைந்தபோதில் வாய்த்த
அமுதமே காந்தியம்
ஆமெனில்
பெயக்கண்டும் உண்டமைந்த
ஆலகாலமே இந்துத்துவம்!

அந்தமாக மட்டுமில்லை ஐயனே!
ஆதியிலேயே உம்முடன்
உடல் சுற்றியே பிறந்ததந்த நஞ்சுக்கொடி!

அண்ணலே உம் ஆவி பறித்த
அம்பு மட்டுமே நாதுராம்!
ஹேராம்! யா அல்லாஹ்!

- பொதிகைச்சித்தர்(pothi48@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.