Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை
இவன்தான் தமிழன்!
பொன்பரப்பியான்

Tamil மறவன் என்று வாயாற சொல்லிச் சொல்லி - தமிழன்
மரம் இணையாய் ஆகி விட்டான், ஐயோ பாவம்!
பழம் பெருமை ஒன்றுதானே இவன் சொத்து - இவன்
பகுத்தறிவைவெறுக்க பழகிக் கொண்ட வித்து.

ஒற்றுமையாய் வாழ நீங்கஓடிவாங்க - என்று
உளமாற அழைத்தாலும் உணர நினையான்
பித்தராய் மேடையில் பிதற்றுபவனை - உடனே
பெருமைப்படுத்த சிரமப்பட்டு உபசரிப்பான்.

எத்தர்களை பகைத்துக்கொள்ள விழையான் - மேலும்
எத்தனைதான் பட்டாலும் ஏற்றமுற நினையான்
கத்துவான் கால்பிடிப்பான் கதிஎன்பான் - ஆனால்
கனப்பொழுதும் தனை உணர கருதமாட்டான்.

பிள்ளை பெண் பெருமைதனைப் பேசமாட்டான் - ஆனால்
பிறராயின் புகழ்பாட தயங்க மாட்டான்
கல்லுக்கும் கட்டைக்கும் உடல்வறுப்பான் - ஆனால்
கனப்பொழுதும் இனஏற்றம் விழையமாட்டான்.

பிரிந்துவாழும் மனப்பாங்கே இவன் பண்பு - மேலும்
பிரிப்பவனைத் துதிப்பாடல் இவன் செய்யும் தொண்டு
தான்உயர நேரம்வரின் தயக்கம் காட்டுவான் - ஆனால்
தளராமல் உயர்த்திவிட தன்உடலை வளைப்பான்.

சாக்கடைதான் இவனுடலில் பாய்கின்றதோ!-அல்லது
சவத்திலேதான் செந்நீரும் தவிக்கின்றதோ!
பகுத்தறிவே! நீ நுழைய வழியில்லையோ! - அல்லது
இந்தப் பாழ் இனத்தைக் காப்பாற்ற மனமில்லையோ!

- பொன்பரப்பியான் (ponparappiyan@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.