கவிதை
அடையாளமற்ற நாட்கள்..! பொன்னியின் செல்வன்
பிரபஞ்ச வெளியில்
தொலைந்த
எனது நாட்களின்
பதிவுகளைத் தேடி..
முகங்களற்ற மனிதர்களின்
வெளியில்.....
தெறித்து சிதறிய
தூசிகளாய்
படிந்து கிடக்கின்றன
அடையாளமற்று
எனது நாட்கள்..!
பகலெல்லாம் கழிந்த
மௌன பொழுதுகளில்
என்னின் சிறைவாசம்..
தேவையின் .. சுமைகளோடு...!
மாலையின் நெருக்கத்தில்..
மௌனம் கலைய ..
எதிர்பார்ப்புகள்
எச்சரிக்கை ஆகுகின்றன..!
இரவின் தனிமையில்
தேடவேண்டும்
என்னை.. எனதாகிபோகும்
பொழுதுகளை..!
- பொன்னியின் செல்வன் (ponniyiinselvan@gamil.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|