Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

வண்ணாத்திப்பூச்சி
பாண்டித்துரை

புன்னகைளை அனுப்பிய வண்ணமாக
இருக்கிறாள்
தன்னை யாரும் கவனிக்கக் கூடுமென
வண்ணாத்திப் பூச்சியை
எட்டிப்பிடிக்க
மேலே உயரும் கைகள்
ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள
இசை பிறக்கிறது
ஆமோதிப்பதாய்
நீளும் நாவினில்
உதிக்கும் நீர் குமிழிகள்
உடைந்து சிதறுகிறது
கண் சிமிட்டலுடன்
புதிதாய் மனிதன் கடந்து செல்கிறான்
உலகம் சுற்றும் மருண்ட விழிகளுடன்
மீண்டு வருகிறாள்
இம்முறை
கால்களும் உயர்ந்த வண்ணமாய்
வண்ணாத்திப் பூச்சியை எட்டிப்பிடிக்க

- பாண்டித்துரை (pandiidurai@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.