Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

இரவின் தீண்டல்
பாண்டித்துரை

Night சர்ப்பத்தை அணைக்கும் பொருட்டு
குளிர்ச்சியினை வெளிப்படுத்துகிறது இரவு
நீண்டதொரு இரவினை
எட்டிப்பிடித்தே சர்ப்பம் முன்னேறி
இரவு நேரங்களை
விழுங்கத் தொடங்குகிறது
சர்ப்பத்தின் விருப்பப்படியே
இரவு வளைந்து செல்கிறது
இரவின் தீண்டலில் திருப்தியற்ற சர்ப்பம்
பின் தங்க நேரிடுகிறது
களைப்புற்ற சர்ப்பம்
தன் சட்டையைக் கழற்றி
இரவினை புரட்டிப்போடும் உத்வேகத்துடன்
மீண்டும் முன்னேறுகிறது
பொழுது புலரத்தொடங்குகிறது
ஒரு மூலையில் சர்ப்பம் சுருண்டு கிடக்க


- பாண்டித்துரை (pandiidurai@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.