Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

பாண்டித்துரை கவிதைகள்

love நம் செயல்கள்
நமக்கானதாகத்தான்
ஆரம்பமாகிறது
தொடரும் தேடலில்
அதன் எல்லைகள்
விரிவுபடுத்தபடுகிறது
எதிர்படுபவரை
ஆச்சர்யப்படுத்துவதாகவும்
குப்புறக் கவிழ்ப்பதாகவும்
குற்றம் சாட்டப்படுகிறது
ஆனாலும்
புரிதல் என்ற மொழியை
முன் நிறுத்தியே
புயணம் தொடர்கிறது
தொடரும் பயணத்தின்
ஓரிடத்தில்
புரிதலின் புதிராய்
முரண்பட்ட பிம்பங்கள்
முன்னிருத்தப்படும் போது
பொய்த்து போகிறது
நம்மீதான நம்பிக்கை
செயலற்றுப் போவதொரு பிரமையுடன்
பயணம் தடைபடவும் நடைபோடவும்
அவரவரின் விருப்பப்படியே அமைகிறது.


2...

தொடர்சியாக வந்து செல்கின்றன
நம்மிடையான நெருக்கம்
ஏதோ ஒன்றின்
உணர்ச்சிப் பெருக்கால்
கட்டுப்பட்டதாகவே நினைத்திருந்தேன்
பயணத்தின் பாதையை
உயர்வாக எடுத்துச்செல்வோம்
என்று நம்புகையில்
உளறலாய் காட்டிக்கொடுக்கிறது
உள்ளத்தின் மூச்சுக்காற்று
தகிக்கும் வெம்மையை
தடுத்திட மனம்குன்றியே
வாழ்வின் புன்னகைக்கு
விடைகொடுத்து
மௌனமாக கழிந்த நாட்களில்
என்னுள்ளே நீ
பின்னிப் பிணைந்ததாக நினைத்த
உன்னுடனான உறவு
ஜாமத்து ரகசியங்களை
கண்டறியும் மட்டுமே
புணர்வினை உணரும் தருணத்தில்
நுமக்கிடையே விரிசல்
திரும்பிப் பார்க்கிறேன்
எதிரும் புதிருமாய் நாமிருவரும்

- பாண்டித்துரை (pandiidurai@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.