Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

அது ஒரு வானாந்திரம்
பாண்டித்துரை

Monkeys அது ஒரு
வானாந்திரம்,
அங்கே
வால் இல்லாத
குரங்குகள்தான் அதிகம்.
மரம் ஏறும் போது
மற்ற குரங்குகளை சந்திக்கின்றன.
சந்தோச துள்ளலில்
அங்கும் இங்கும் ஓடத்துவங்குகிறது,
அதன் சப்தங்கள்
வெகு தூரம் வரை விரவுகிறது,
குரங்குகள் எல்லாமும்
ஓர் இடத்தில் குழுமத்தொடங்குகிறது
புரிபடாத பாவனைகளை
வேடிக்கை பார்க்க தொடங்குகின்றன
கையைத்தட்டியும்
தலையைச்சொறிந்தும்
தங்களின் இருப்பை வெளிப்படுத்துகின்றன
ஒரு சில குரங்குகள்
யாருக்கும் தெரியாமல்
பக்கத்து குரங்குகளை பயமுறுத்த பார்க்கிறது
பதிலுக்கு அக்குரங்கு புன்னகைக்கிறது
உச்சிவெயிலில் உரத்தசப்தங்களுடன்
குரங்கு கூட்டம் கலைகிறது
மீண்டு வரும் குரங்குகளுக்கோ
ஒரு வித வெறி ஏற்படுகிறது
விடுபடவேண்டிய தவிப்புகளுடன்
தன் பார்வையை சுழற்றுகிறது
கிடைக்கும் சந்தர்ப்பத்தில்
அதற்கான மரம்தாவி
தத்தமது சேஷ்டைகளுடன்
விடைபெறுகிறது

- பாண்டித்துரை (pandiidurai@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.