Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான்
பாண்டித்துரை

refugee நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

எல்லாம் மாறும்மட்டும்
எதிர்த்து நிற்கட்டும்
தேசம் விட்டு தேசம் போய்
பிச்சையெடுக்கட்டும்
பிணைகைதியாய் வாழட்டும்
காட்டி கொடுக்கட்டும்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

அடிபட்டு வீழும்
அநாமத்தின் புகைப்படகோப்புகள்
வாரம் ஒரு
வன்புணர்ச்சி வீடியோ பதிவுகள்
இல்லாதுபோயின்
சன் டிவியும் கலைஞர் டிவியும்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

செல்லடி சப்த்தத்தை செய்தியாய் படிப்போம்
பின் அதனை மடித்துவைப்போம்
நன்றாக சாப்பிடுவோம்
இரவின் கனவோடு இன்புற்று
தூங்கி எழுவோம்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

வில்லு படம் பற்றி பேசுவோம்
விசயகாந்த் அரசியல் பற்றி பேசுவோம்
இன்னார் கூட இன்னார் ஓடிப்போனது உட்பட
நாம் பேச நிறைய இருக்க
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

நமக்கென வீடு இருக்கிறது
காய்ச்சல் வந்தால்
அம்மா
அப்பப்பா
தொலைபேசி அழைப்புகள்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்

- பாண்டித்துரை (pandiidurai@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.