Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நேசமித்ரன் கவிதைகள்

Kiss முத்தம்

தகனம் செய்ய எவருமற்ற
பிரேதம் போல் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது
ஒரு
நிராகரிக்கப்பட்ட முத்தம்

மிதா...!
கொடுக்கப்படும் அதே அழுத்தத்துடன்
உணரப்படும் முத்தங்கள்
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
முழுமையுறாத....
நிராகரிக்கப்பட்ட....
முத்தங்களை நுகர நேர்கிறது
வெளியெங்கும் குறுந் தகடுகளைப்போல...,
அறிந்தவரை
விடுபடும் கணத்தில் கண்களால்
பேசிக்கொள்ளும் முத்தங்கள்
தீர்ந்து போகாதவை ....!

-

இரண்டு பிரமிடுகள்...

யாரோ போல் பார்த்த பார்வை ...
எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!
பிறை புன்னகையில் கிரகணம்;
கண்கள் பார்த்து பேசும் சொற்கள்
விளம்பர ஹோர்டிங்
பார்த்தபடி செல்போனில் பேசும் பாவனையில்

மிச்சமிருக்கிறதா
நெஞ்சில் என் நகத் தழும்பு ?

முயற்சித்து இருக்கிறாய்
உன் மனைவிக்கு நாம் தேர்ந்தெடுத்த
மோதிரத்தை அணிவிக்க
சுண்டு விரலிலும் சதை பிதுங்க....

நிகோடின் படிந்த உதடுகள்
கடை விழியில் உதிரக் கோடுகள்
நிறைய குடிக்கிறாய் போல...

உன்னையும் சேர்த்து
புதைத்திருக்கிறேன்
மார்பிரண்டும் பிரமிடுகளாக

அச்சம் யாதெனில்
சுரக்கும் பாலில் செத்த காதல் கலந்து
என்னையும்
பூதனை ஆக்கி விடுமோ என்பதே.....

இனியேனும் உன் மனைவியை
புணர்கையில் என்னை நினைக்காதே
உன் மகளுக்கு எப்படியோ விழுந்திருக்கிறது
எனது
சாயல்...!

- நேசமித்ரன் (mithranesamithran@gmail.com)

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.