Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

முட்கள்
நீ“தீ”

தொட்டுவிடும் தூரம்தான்
ஆனாலும்
தொடர் ஓட்டமாய்

கவனிக்க வேண்டும்
கால்கள் இல்லை
காற்று கூட தொல்லை

காதலர்களாய்
அவனும் ஓட
அவளும் ஓட

நடுவில் ஒருவன்
நடுவராக இருக்ககூடுமோ

காததூரம் வந்ததும்
கடக் கடக் சப்தம் வேறு

சிறைபட்ட - என்
சிந்தனையை மீட்க

சிறைக்குள் இருந்து
சிரிக்கும் காதலர்காளாய்...


காதலுடன்...

என்னவனின்
கைபட்டு
எனக்கான
தாலாட்டு

காற்றலையில்
தவழ்ந்து வந்து
கைப்பேசிவழி
கசிந்து விழுந்தது

கவலைபடாதே
செல்லம்!
கால் டாக்ஸி எடுத்து
ஆஸ்பத்ரி போய்வா

காய்ச்சல்
சரி ஆகிவிடும்
நன்றாக தூங்கு - நான்வர
நள்ளிரவு ஆகும்


நீ...

நிழலாக நீ
என்னை தொடர்கிறாய்

பகல் பொழுதில்
பக்கத்திலே
பக்கவாட்டில் என

நிஜமாக
தொடர்கிறாய்

உனை கண்டும்
பயந்துள்ளேன்
கருப்பணசாமியோ என்று

எனை பிரிய
மனமில்லை உனக்கு

தினமும் தொடரும் நீ
நான் தூங்கியபின்பு
எங்கே செல்கிறாய் ?


- நீ“தீ” (hsnlife@yahoo.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.